நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இணைந்து செபிப்போம்

முதலாவது திருவழிபாடு ஆண்டு தவக்காலம் 6வது வாரம் திங்கள்கிழமை
2024-04-24



ஆண்டவரே இயேசுவே,
வார்த்தையானவரே! வாழ்வைத் தந்த இயேசையா! “இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்” என, வாக்குத் தந்து, இதுவரை பாதுகாத்து வந்தீரே! நன்றி கூறுகின்றேன். “பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்” என்று, இன்றைய இறைசெய்தி மூலமாக, எனக்கும் என் வாழ்விற்கும் விடுதலை தரப்போவதற்காக நன்றி கூறுகின்றேன். உமது வார்த்தையில் நம்பிக்கை வைக்காதவனாக, உம் வார்த்தைகளையும் கட்டளைகளையும் நினையாமலும், கடைப்பிடிக்காமலும் இருந்த சந்தர்ப்பங்களை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். மன்னியும் ஐயா! “தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள்” என்ற, இறைவார்த்தையை கேட்கின்ற என்னை, பாவத்தில் விழத்தூண்டும் அனைத்துக் காரண காரியங்களிலிருந்தும் விடுவித்தருளும். உமது ஞானம் நிறைந்த இதயத்தை எனக்குத் தாரும். அதனால் நன்மைகளை நான் அடையவும், பரிசுத்த பாதையில் தொடர்ந்து நடந்து; உமது ஆசீரிலும், அன்பிலும் சமாதானத்திலும் நிலைத்து வாழ வரம் தாரும் இயேசுவே. இன்றைய நாளில் என்னைக் காத்து வழிநடத்தும். பகைவரின் சூழ்ச்சிக்குள் விழாமலும், தீய மாயைக்குள் சிக்கிவிடாமலும் ஒளியின் பாதையில் திருசிலுவையின் பாதையில் நடந்திட அருள் தர வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்

தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா 18.05.2024 வூப்பெற்றால் நகரில்.



யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா 18.05.2024 வூப்பெற்றால் நகரில் ஏற்பாடு செய்துள்ளது. அதே பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக..... [0000-00-00]


யேசுவின் அன்பே நம் வாழ்வை மாற்றுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்



இயேசுவிடமிருந்து நாம் பெறும் அன்பே நம் வாழ்க்கையை மாற்றியமைத்து, பிறரையும் அன்புகூரச் செய்யும் வலிமைபொருந்தியவர்களாக நம்மை மாற்றம் பெறச் செய்கிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை... [2024-04-23 22:59:39]



புலம்பெயர்ந்தோரை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் : JRS UK



அடுத்த 10 முதல் 12 வாரங்களில் ருவாண்டாவிற்குத் தஞ்சம் கோரும் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என்ற பிரித்தானிய பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்தோர்மீதான அந்நாட்டின் பொறுப்பைநிலைநிறுத்தும் பொருட்டு, இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகம் தொடர்ந்து பரப்புரை செய்யும் என்று... [2024-04-23 22:58:12]



பாகிஸ்தானில் தாக்குதலுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்



பாகிஸ்தானின் ஜாரன்வாலா நகரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் இடம்பெற்று 8 மாதங்கள் கடந்தபின்னரும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நீதிக்காக இன்னும் காத்திருப்பதாகவும், அவர்களுக்கு நியாயம் கிட்டும் என்ற நம்பிக்கை குறைந்துவருவதாகவும் இங்கிலாந்து பாராளுமன்ற குழு கூட்டத்தில் கத்தோலிக்க உதவி அமைப்பு... [2024-04-22 22:57:14]

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் நீதி வேண்டும் : இலங்கை தலத்திருஅவை



இலங்கை கத்தோலிக்கத் தலத்திருஅவை அதிகாரிகள், ஏப்ரல் 21-ஆம் தேதி உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்பின் ஐந்தாமாண்டு நிறைவை நினைவுகூர்ந்துள்ள வேளை, ​​பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த பாரபட்சமற்ற மற்றும் நியாயமான விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கிறது யூகான் செய்தி நிறுவனம்.
இந்நிகழ்வு... [2024-04-23 22:57:07]



காவல்துறை அதிகாரி நியமனத்திற்கு கர்தினால் இரஞ்சித் எதிர்ப்பு!



இலங்கையில் 2019-ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி ஒருவரை அந்நாட்டின் உயர்மட்ட காவல்துறை அதிகாரியாக நியமித்ததற்கு எதிராகக் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக யூகான் செய்தி... [2024-03-14 22:51:51]

தேர்தலில் வாக்களிக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் புனித கடமை!



நாட்டின் பொதுத் தேர்தலில் கிறிஸ்தவர்கள் வாக்களிக்க வேண்டியது ஒரு புனித கடமை மற்றும் குடிமைப் பொறுப்பு என்று கோவா மற்றும் டாமன் பேராயர் ஃபிலிப் நேரி ஃபெராவ் அவர்கள் அறிக்கையொன்றில் கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறது ஆசியா செய்தி நிறுவனம். தமிழ்நாட்டிலுள்ள அன்னை... [2024-04-19 23:01:23]



மதச்சார்பற்ற அரசிற்கு வாக்களியுங்கள் : பேராயர் பீட்டர் மச்சாடோ



இந்திய நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மதச்சார்பற்ற அரசிற்கு வாக்களிக்குமாறு கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் கத்தோலிக்கர்களை வலியுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
மதச்சார்பற்ற, வகுப்புவாதமற்ற, அரசியல் சாசனத்தில் நம்பிக்கையுள்ள, ஊழல் குறைந்த ஒரு... [2024-04-11 23:00:56]

சந்திப்பின் காலம் - தவக்காலம்



இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG



எது திருவருகைக்கால பரிசு



திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]

எழுத்துருவாக்கம்:

...es ist besser für dich, verstümmelt in das Leben zu gelangen


2024-04-24

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

Cain and Abel


2024-04-24

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.




பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2024-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! செபிப்பதுடன் நீங்கள் விதைத்த விதைகளால் நன்மைகள் நடக்க உங்கள் இதயத்தைப் புதிப்பித்துக் கொள்ளுங்கள், இது மகிழ்ச்சியின் கனிகளையும் கடவுளுடன் ஐக்கியத்தையும் உருவாக்குகின்றது. களைகள் பல இதயங்களை ஆட்கொண்டு அவர்களை கனி கொடுக்காமல் தடுத்துவிடுகின்றது, ஆகவே அன்பான பிள்ளைகளே, ஒளியாகிய நீங்கள், அன்புடன் இவ்வுலகில் எனது விரித்த கரங்களுக்குள் வாருங்கள். அதுவே இறைவனிடம் உங்களை அழைத்துச் செல்லும். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி.“




2024-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்த நேரம் செபிக்கும் நேரமாக இருக்கட்டும்"




2023-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்தக் காலத்தை செபத்துடன் அமைத்து, சமாதானம் மற்றும் நல்ல விடயங்கள் நடைபெற உதவுங்கள், இதன்மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் மகிழ்வு உங்கள் இதயத்தை, குடும்பத்தை மற்றும் உலகை நிரப்பட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்."


திருவெளிப்பாட்டு ஆண்டு


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)