திருவிழா திருப்பலியில் பாடப்படும் பாடல்கள்

Please Install Flash Player






இறை இரக்க ஆண்டில் திருமலை ஆயரின் தலைமையில்
கேவலார் அன்னையின் பெருவிழா

13-08-2016

புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா!

12.08.2016 வெள்ளிக்கிழமை

18.00 மணி செபமாலை பவனி (கேவலார் தொடருந்து நிலையத்திலிருந்து)
19.00 மணி மாலை நற்கருணை வழிபாடும் மரியன்னை வணக்கமும்.

13.08.2016 சனிக்கிழமை

10.45 மணி திருவிழாத் திருப்பலி
14.00 மணி தமிழ் திருப்பலி (பாவசங்கீர்த்தனச் சிற்றாலயம் )
15.30 மணி நற்கருணை வழிபாடும் ஆசீரும்



திருவிழா மட்டுநகர் ஆயரின் தலைமையில்

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் அழைப்பை ஏற்று, இவ்வாண்டு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவண.நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்கள் கேவலார் அன்னையின் திருவிழாவிற்கு வருகை தரவுள்ளார். மேலும் கேவலார் அன்னையின் திருவிழாத்திருப்பலி திருகோணமலை ஆயரின் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேவலார் திருத்தல முகவரி

Die Wallfahrtskirche,
Kapellenplatz 35,
47623 Kevelaer

பலர் வாகனங்களை அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்துதுவதால் போக்குவரத்துகள் தடைப்படுகின்றன. எனவே, திருவிழா அன்று(13.08.2016) வசதியாக வாகனங்களை நிறுத்துவதற்கு நகர உதவியாளர்கள் வழி காட்டுவார்கள். அனைவரும் கேவலார் நகர நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறும் குப்பைகளை அதற்கான இடங்களில் போடுமாறும் வேண்டுகின்றோம். பயணங்களில் ஏற்படும் நேர இழப்புகளை ஈடுசெய்ய, உங்கள் பயணங்களை முன் கூட்டியே தொடங்க வேண்டுகின்றோம்.

கேவலாரில் அன்ன தான நிகழ்வுகளை தவிர்க்க வேண்டுகின்றோம்

பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக எமது கலாச்சாரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் எம்மோடு பின்னிப்பிணைந்துள்ளன. ஆயினும் கேவலார் அன்னையின் திருவிழாவில் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இவ் அன்னதான நிகழ்வுகளில் செலவு செய்யும் பணத்தினை தாயகத்தில் வறுமையில் வாடும் எம் உறவுகளுக்கு பொது நிறுவனங்களுக்கூடாகவோ, குருக்களின் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி உங்களுடைய நோக்கத்தினை நிறைவு செய்ய வேண்டுகின்றோம். மேலும் கேவலார் பதி முழுவதும் உணவு பொதிகளாலும், மற்றும் இதர குப்பைகளாலும் மாசடைகின்றது. கேவலார் பதியினை திருவிழாவின் பின்னர் சுத்தம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. எனவே கேவலார் திருப்பதியில் அன்ன தான நிகழ்வுகளை தவிர்த்து எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

முதல்நன்மை சிறார்களை கேவலார் யாத்திரைப் பவனியில் பங்கேற்க அழைப்பு





இவ்வருடம் முதல்நன்மை பெற்ற சிறார்கள் கேவலார் யாத்திரை திருப்பலி ஆரம்பப் பவனியில் பங்கேற்பதற்கான ஒழுங்குகள் பணியகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்பும் சிறார்கள் தமது முதல் நன்மை உடை அணிந்து கேவலார் திருத்தல மெழுகுதிரி ஆலயத்தின் பின்புறமாக 13.08.2016 அன்று சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு முன்பாக ஒன்று கூடுமாறு வேண்டுகிறோம். சிறார்களுக்கான மெழுகுதிரி பணியகத்தால் வழங்கப்படும். கூடுமானவரை முற்கூட்டியே உங்கள் பிள்ளைகளின் வரவை உறுதிப்படுத்தவும்.

முதல் நன்மைச் சிறார்களுக்கான தொடர்புகளுக்கு:

திருமதி.அல்றீனா யோசவ் -02151-602101







பீடப்பணியாளர்களுக்கான அறிவித்தல்

நீங்கள், உங்கள் பங்குகளில் பீடப்பணியாளர்களாகப் பணியாற்றுபவர்களாக இருந்தால், உங்கள் பங்களிப்பை மரியன்னைக்கும் செலுத்துங்கள். விழாவைச் சிறப்பியுங்கள். அவ்வாறு நீங்கள் பங்கு கொள்ள விரும்பினால் கீழ்க்காணும் தொடர்பாளர்களைத் தொடர்பு கொண்டு, உங்கள் வரவை உறுதி செய்யுங்கள். அத்தோடு, 13.08.2016 அன்று காலை 9:45 மணிக்கு முன் சமுகம் அளியுங்கள்.

பீடப்பணியாளர்களுக்கான தொடர்பு களுக்கு:

திரு.மிக்கேல் அமலதாஸ்(காஸ்ரோப்)- 0230576583


இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் - புனித கன்னி மரியாள் (யோவான் 2:5)

கேவலார் திருத்தலத்தில் கவனிக்கப் பட வேண்டிய விடயங்கள்


இவ்வாண்டும் எமது மாநிலம் வழங்கியுள்ள உத்தரவுகளின்படி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒழுங்கு விதிகளையும் கவனத்துடன் பணியகம் மேற்கொள்ள வேண்டுமென பணிக்கப்பட்டுளதுடன். இப்புனிதப் பயணத்தில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் பணியகத்தினாலும் நகர நிர்வாகத்தினாலும் விடுவிக்கப்படும் ஒழுங்கு விதிகளை அக்கறையுடன் பின் பற்றி, புனிதப் பயணம் சிறப்பாகவும் அமைதியாகவும் இடம் பெற ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டப் படுகின்றீர்கள். கேவலார் புனித பயணத்தின் போது சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒழுங்குகள்:


1. புனிதத்தலத்திற்கு சொந்த வாகனங்ககளில் வருவோர் கேவலார் நகர நிர்வாகத்தினால் நீச்சல் தடாகத்திற்கு அணமையாக இலவசமாக ஒழுங்கு செய்யபட்டுள்ள வாகனதத் தரிப்பிடத்தில் தமது வாகனங்களை நிறுத்துமாறு கேடகப்படுகினறனர். இவ் வாகனத் தரிப்பிடம் சிறப்பாக தமிழ் புனிதப் பயணிகளுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்பதுடன் இவ்விடத்தில் ஒரு கழிவறையும் பணியகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இத் தரிப்பிடத்திற்குச் செல்வதற்கான வழிகளை கேவலாருக்கு நுழையும் வீதிகளில் தமிழில் கண்டு கொள்ளலாம்.

2. கடந்த காலங்களில் பலர் பிழையான இடங்களில் தமது வாகனங்ககளை நிறுத்திதியதால் ஏற்பட்ட பிரச்சினைகளைஸ் சுட்டிக் காட்டி, இனிமேல் இப்படிப் பிழையாக நிறுத்தப்படும் வாகனங்கள் தூக்கிச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வாசலல்கள் மற்றும் வைத்திய உதவி வாகனங்கள் வரும் வழிகளை மறைக்காமல் அனுமதிக்கப் பட்டுள்ள இடங்ககளில் மட்டுமே வாகனங்களை நிறுத்துமாறு கேவலார் நகர நிர்வாகம் கண்டிபாகக் கேட்டுள்ளது.

3. குப்பைகளைப் போடுவதற்குரிய கொள்கலன்களைப் பல இருந்தும் பலர் தமது கழிவுகளை தாம் இருந்த இடங்களிலேயே விட்டுச் செல்வதைத் தவிர்த்து, அனைத்துக் குப்பைகளையும் அதற்குரிய கொள்கலன்களில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

4. வியாபாரக் கடைகள் மாலை 18.00 மணிக்கு கண்டிப்பாக விற்பனையை நிறுத்த வேண்டும் எனவும், இதற்கு ஏதுவாக 17.30 மணிக்கு கடை வாசலுக்குள் நுழைவோர் தடுக்கப்பட வேண்டும் எனவும் கேவலார் நகர பாதுகாப்புப் பிரிவாலல் கேட்கப்பட்டுள்ளது. எனவே இதை விற்பனையாளர்களும் பொதுமக்களும் கவனத்திற் கொள்ளவும்.

5. ஆலய வளாகங்களுக்குள் நுழைவோர் தயவுசெய்து அமைதியைக் கடைப் பிடிக்கவும். செபித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு தயவு செய்து இடைஞ்சல் செய்யாதீர்கள். இது குறித்து பணியக உதவியாளர்கள் விடுவிக்கும் வேண்டுகோள்களுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.

6. உங்கள் முகவரி மற்றும், திருபபலி பதிவு செய்தல், தொடுவானம் சாந்தா அல்லது கேவலார் திருத்தலம் பற்றிய விளக்கங்கள் மற்றும் பணியக விடயமான அனைத்துத் தேவைகளுக்கும் பணியகத்தால் அமைக்கப்பட்டுள்ள தகவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும்.


அனைவரும் ஒன்று கூடுவோம். ஓன்றித்துச் செபிப்போம்.