யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-09-13

புனித யோவான் கிறிசோஸ்தம்


முதல் வாசகம்

எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-2,12-14

விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை திமொத்தேயுவுக்கு நம் மீட்பராம் கடவுளும், நம்மை எதிர்நோக்குடன் வாழச் செய்யும் கிறிஸ்து இயேசுவும் இட்ட கட்டளையின்படி, கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும், நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார். முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்
திருப்பாடல்கள் 16: 1-2,5. 7-8. 11

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2 நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42

அக்காலத்தில் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: ``பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவை விட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர். நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், `உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்க முடியும்? வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

2 ' ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா? ' என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். 3 அவர் மறுமொழியாக, ' இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். (லூக்கா 9:2-4)

கிறிஸ்துவுக்குள் சென்று, அவரோடு நாம் சேர்ந்து வாழ்வது என்பது ஒரு தொடர் செயலாகும். இன்றைய நற்செய்தியில் வரும் குருடர் வாழ்க்கை. கிறிஸ்துவோடு சேர்ந்த விசுவாச பயணத்திற்கு ஓர் உதாரணமாகும். அந்த குருடர் ஒன்றும் கிறிஸ்துவிடம் செல்லவில்லை, யேசு தான் அவனிடம் வந்தார் என்பதை இந்நற்செய்தி கூறுகிறது. அந்த மனிதனும் உடனே கிறிஸ்துவை பின் செல்லவில்லை. என்ன நடக்கும் என்று பார்த்து விட்டு அதன் பிறகு தான் யேசுவிற்கு கீழ்படிந்தார்.

யேசு நம்மை தேடி வந்த பின் தான், நாம் மணம் மாறுதலுக்கான முயற்சியை ஆரம்பிக்கிறோம். மேலும், அவரை நாம் தொட அனுமதிக்கிறோம். பிறகு, உண்மையை கண்டறிய நம் கண்களை திறக்கிறார். ஆனால், உடனே நாம் இதனை புரிந்து கொள்வதில்லை.

அந்த மனிதரின் அருகில் உள்ளவர்கள், எப்படி உனக்கு பார்வை கிடைத்தது என்று கேட்டார்கள், ஆனால், அவருக்கு யேசு யாரென்றே தெரியவில்லை. அவர் யேசுவை சாதாரன மனிதர் என்றே நினைத்தான். பிறகு, பரிசேயர்கள் அவரை பற்றி பேசியதை கேட்டுதான், யேசுவை பற்றி அதிகம் யோசிக்க ஆரம்பித்தார். மேலும், அதன் பிறகு தான் யூதர்களின் படி அவர் ஒரு இறைவாக்கினர், கடவுளின் தூதர் என்றும் ஒரு முடிவிற்கு அந்த குருடர் வந்தார்.

யேசுவை மெசியாவாக ஏற்று கொள்ளும் எவரையும், யூதர்களின் தொழுகை கூடத்தில் சேர்க்க கூடாது என்று யூதர்கள் பேசிய பிறகும், அவரை மிகவும் கீழ்தரமாக கடிந்து கொண்டபிறகும், அந்த குருடர்க்கு, யூதர்கள் பயப்படுவது போல், யேசுதான் மெசியா என்று எண்ணதொடங்கினார். யூதர்கள் யேசுவை வெறுத்ததால், அந்த கண் தெரியாத மனிதருக்கு, இந்த நிகழ்ச்சியே அவருடைய தெய்வீக கண் திறப்பதற்கு உதவியாக இருந்தது.

இறுதியாக, யேசு அவரை யூதர்களால் பட்ட அவமானத்தையும், பயத்தையும் போக்க அந்த கண் குண்மாக்க பட்ட மனிதரை தேடி போனார். யேசு இப்படி அந்த மனிதர் மேல் இவ்வளவு அக்கறை காட்டுகிறாரே என்று அறிந்த பின் தான், அவருக்கு யேசு யாரென்று உண்மையாக தெரிந்து கொள்ள முடிந்தது. மணம் மாறுதல் - நமது தெய்வீக பார்வையை சுத்தபடுத்துதல்- நாம் துண்பபடும்போது நமக்கு கிடைக்கும் அன்பின் மூலம், கடவுள் நமக்கு துணையாக இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளும் போது மணம் மாறுதல் நடக்கிறது.

மன்றாட்டு:

இறைவா,உண்மையை அறிந்து அங்கு உமது மாட்சியைக் காண எங்களுக்கு அருள்தாரும்.