யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
கிறீஸ்து பிறப்புக்காலம்
2014-01-02


முதல் வாசகம்

தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 22-28

அன்பிற்குரியவர்களே, இயேசு `மெசியா' அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? தந்தையையும் மகனையும் மறுப்போர்தாம் எதிர்க் கிறிஸ்துகள். மகனை மறுதலிப்போர் தந்தையை ஏற்றுக்கொள்வதில்லை; மகனை ஏற்று அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர். தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்; தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால் நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள். அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும். உங்களை ஏமாற்றுகிறவர்களை மனத்தில் கொண்டு இவற்றை உங்களுக்கு எழுதியுள்ளேன். நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது. அதனால் உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய தேவையில்லை. மாறாக, நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவால் அனைத்தையும் கற்றுக் கொள்கிறீர்கள். அவ்வருள்பொழிவு உண்மையானது; பொய்யானது அல்ல. நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப அவரோடு இணைந்து வாழுங்கள். ஆகவே, பிள்ளைகளே, அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவும் அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும் அவரோடு இணைந்து வாழுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
திருப்பாடல் 98: 1. 2-3. 3-4

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ய இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3b உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார். � அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 19-28

அக்காலத்தில் எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, �நீர் யார்?'' என்று கேட்டபோது அவர், �நான் மெசியா அல்ல'' என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, �அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?'' என்று அவர்கள் கேட்க, அவர், �நானல்ல'' என்றார். �நீர்தாம் வரவேண்டிய இறைவாக்கினரா?'' என்று கேட்டபோதும், அவர், �இல்லை'' என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், �நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், " `ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலை நிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே" என்றார். பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், �நீர் மெசியாவோ எலியாவோ வரவேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால், ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?'' என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், �நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை'' என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, 'நீர் யார்?' என்று கேட்டபோது அவர், 'நான் மெசியா அல்ல' என்று அறிவித்தார்'' (யோவான் 1:19)

கடவுள் தம் மக்கள் மீது இரக்கம் கொண்டு மெசியாவை அனுப்புவார், அவ்வாறு வருகின்ற மெசியா தங்களை எல்லாவித ஒடுக்குமுறைகளினின்றும் விடுவிப்பார் என யூத மக்கள் நெடுங்காலமாக நம்பி, எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அப்பின்னணியில்தான் திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் தோன்றுகிறார். அவரைப் பார்த்ததும் மக்களின் உள்ளத்தில் ஒரு கேள்வி: ''இவர் ஒருவேளை மெசியாவாக இருப்பாரோ?'' யோவான் ஒரு தலைசிறந்த இறைவாக்கினர் போல மக்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஏனென்றால் அவரைப் பின்சென்ற சீடர்கள் இருந்தார்கள். அவரிடத்தில் கடவுளின் வல்லமை விளங்கியதை அவர்கள் கண்டார்கள். குறிப்பாக, பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர் போலவே யோவானும் மக்கள் மனம் மாற வேண்டும் என்றும், தங்கள் தீய வழிகளிலிருந்து விலகி நன்னெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முழங்கினார். இவ்வுலக அதிகாரிகளைக் கண்டு அவர் நடுங்கவும் இல்லை, அவர்களோடு சமரசம் செய்துகொள்ளவும் இல்லை.

இவ்வாறு துணிச்சலோடு கடவுளின் செய்தியை அறிவித்த யோவான் இயேசுவின் நெருங்கிய உறவினர். இயேசுவே அவரை அணுகிச் சென்று அவருடைய கைகளால் திருமுழுக்குப் பெற்றார். இதையெல்லாம் அறிந்ததால் மக்கள் யோவானிடம் சென்று, ''நீர் யார்?'' என்று கேட்டார்கள். ''நான் மெசியா அல்ல'' என்பதே யோவான் வழங்கிய பதில். இன்று கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்வி ''நான் யார்?'' என்பதாகும். இதற்குப் பதிலளிக்கும் வகையில் நான் இன்னாரின் மகன், இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன், என் படிப்பு இது, என் தொழில் இது என அடுக்கிக் கொண்டே போகலாம். இப்பதில்கள் எல்லாம் சரியே என்றாலும் நாம் கிறிஸ்தவப் பார்வையில் யார் என்னும் கேள்வியையும் எழுப்ப வேண்டும். அப்போது நாம் கடவுளின் பிள்ளைகள், இயேசுவின் வழியாய்க் கடவுள் நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்துள்ளார், நாமும் கடவுளின் பணியை ஆற்றுவதில் ஈடுபட வேண்டும் என்னும் பதிலைக் காண்போம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை உம் மக்களாகத் தேர்ந்தெடுத்து வழிநடத்தும் உமக்கு நன்றிகூறுகிறோம்.