மெட்யுகோரியோவில்(Medjugorje) மரியன்னையின் தரிசனங்கள்


பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 7 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம் இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2024-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! செபிப்பதுடன் நீங்கள் விதைத்த விதைகளால் நன்மைகள் நடக்க உங்கள் இதயத்தைப் புதிப்பித்துக் கொள்ளுங்கள், இது மகிழ்ச்சியின் கனிகளையும் கடவுளுடன் ஐக்கியத்தையும் உருவாக்குகின்றது. களைகள் பல இதயங்களை ஆட்கொண்டு அவர்களை கனி கொடுக்காமல் தடுத்துவிடுகின்றது, ஆகவே அன்பான பிள்ளைகளே, ஒளியாகிய நீங்கள், அன்புடன் இவ்வுலகில் எனது விரித்த கரங்களுக்குள் வாருங்கள். அதுவே இறைவனிடம் உங்களை அழைத்துச் செல்லும். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி.“




2024-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்த நேரம் செபிக்கும் நேரமாக இருக்கட்டும்"




2023-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்தக் காலத்தை செபத்துடன் அமைத்து, சமாதானம் மற்றும் நல்ல விடயங்கள் நடைபெற உதவுங்கள், இதன்மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் மகிழ்வு உங்கள் இதயத்தை, குடும்பத்தை மற்றும் உலகை நிரப்பட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்."




2023-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! கடுமையாகச் செபிக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன். நவீனத்துவம் உங்கள் எண்ணங்களில் நுழைந்து செபத்தின் மகிழ்வையும் இயேசுவின் சந்திப்பையும் பறிக்க விரும்புகின்றது. ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் குடும்பங்களில் செபத்தைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். இதனால் நான் உங்களைத் தேர்ந்தெடுத்த முதல் நாட்களில், செபங்கள் இரவும் பகலும் எதிரொலித்ததுபோல, அன்னையான எனது இதயம் மகிழ்வுறும், ஆனால் வானகத்தில் அமைதியில்லை, மாறாக இரக்கத்தின் இந்த இடம் போதியளவு சமாதானத்தையும் ஆசீரையும் வழங்குகின்றது. எனது அழைப்பைக் கேட்பதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்."




2023-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில் நான் உங்களை இதயத்தால் செபிக்க அழைக்கிறேன். உங்கள் இதயத்தை நேசியுங்கள், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் செபம் வானத்தைத் துளைத்துச் செல்லட்டும், அதன்மூலம் உங்கள் இதயம் கடவுளின் அன்பை அனுபவிக்கட்டும், அவர் உங்களைக் குணப்படுத்துவதுடன் தனது அளவிடமுடியாத அன்பால் உங்களை ஆட்கொள்வார். ஆகவேதான் நீங்கள் இதயத்தால் மனம்திரும்பும் வழிகளைக்காட்ட, நான் உங்களுடன் உள்ளேன். எனது அழைப்பைக் கேட்பதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“




2023-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில், எல்லாம்வல்ல இறைவன் என்னை உங்களை அன்புசெய்ய மற்றும் மனமாற்றத்திற்கான வழியில் நடத்த மற்றும் அன்பான இறைவனை இதுவரை அறியாமல் தூரத்தில் விலகி இருக்கும் அனைவருக்காக செபிக்கவும் அவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்கவும் உங்களிடம் அனுப்பியுள்ளார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அனைத்து அமைதியற்ற இதயங்களுக்கு, அன்பு மற்றும் சமாதானத்தின் சாட்சிகளாக இருங்கள். எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி“




2023-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இயற்கைக்குச் சென்று செபிக்குமாறு உங்களை அழைக்கிறேன், அனைத்திலும் உயர்ந்தவர் உங்கள் இதயங்களுடன் பேசுகிறார், ஒவ்வொருவரையும் படைத்த இறைவன் தனது அன்புக்குச் சாட்சியாக உங்களுக்கு தூயஆவியானவரின் வல்லமையை உணரச்செய்கிறார். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன். எனது குரலைக் கேட்பதற்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.“




2023-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! சமாதானத்தையும், உயிர்த்த இயேசுவின் மகிழ்வையும் செபத்துக்குத் தூரமாக வாழ்பவர்களுக்கு வழங்குபவர்களாக வாழ நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன், இதன்மூலம் இயேசுவின் அன்பு அவர்களின் வாழ்வை மாற்றி அவர்களை ஒரு புதுவாழ்வுக்கும் புனிதத்திற்கும் இட்டுச்செல்லட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்கு உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்!“




2023-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி “அன்பான பிள்ளைகளே! இந்தக் காலம் செபத்தின் காலமாக உங்களுக்கு அமையட்டும்”






2023-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நீங்கள் மனந்திரும்புங்கள் அத்துடன் நீங்கள் அதற்கான ஆடைகளை அணிந்து சமாதானத்துக்காக ஆழமான தனிப்பட்ட செபங்களை தாழ்பணிந்து அனைத்திலும் வல்லவரான இறைவனிடம் சமர்ப்பியுங்கள். இந்த மன்னிப்பின் காலத்தில் சாத்தான் உங்களை சோதிக்கும், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது மகனைப் பார்ப்பதுடன் அவரைப் பின்தொடர்ந்து கல்வாரி மலைவரை நோன்பிருந்து செபியுங்கள். நான் உங்களுடன் உள்ளேன், ஏனென்றால் அனைத்திலும் வல்லவரான இறைவன் என்னை உங்களை அன்பு செய்யவும், உங்கள் இதயங்களை மகிழ்வால் நிரப்பவும் அனுமதித்துள்ளார், அத்துடன் நம்பிக்கை அனைவரிலும் வளர்வதுடன், அனைத்திலும் பார்க்க இறைவனை அன்புசெய்யுங்கள். எனது குரலைக் கேட்பதற்கு நன்றி கூறுகின்றேன்“




2023-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! என்னுடன் சேர்ந்து சமாதானத்துக்காக செபியுங்கள், ஏனென்றால் இதயங்களுக்குள்ளும் இனங்களுக்குள்ளும் சாத்தான் போரையும் வெறுப்பையும் விரும்புகின்றான். ஆகவே செபியுங்கள், உங்கள் நாட்களை நோன்பிலும் தவத்திலும் செலவிடுங்கள், இதன்மூலம் இறைவன் உங்களுக்கு சமாதானத்தைத் தருவார். எதிர்காலம் குறுக்கு வழியாக உள்ளது, ஏனென்றால் நவீனகால மனிதனுக்கு இறைவன் தேவையில்லை. ஆகவே மனித இனம் அழிவுப் பாதைக்குச் செல்கின்றது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்களே எனது நம்பிக்கை. என்னுடன் சேர்ந்து செபியுங்கள், அதன்மூலம் நான் பற்றிமாவில் மற்றும் இங்கு ஆரம்பித்த செயற்பாடுகள் நிஜமாகட்டும். செபிப்பதுடன் உங்கள் சூழலில் சமாதானத்துக்கு சாட்சிகளாக வாழுங்கள். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகின்றேன்.“




2022-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! அனைத்திலும் உயர்ந்தவர் உங்களுக்கு செபிக்கக் கற்றுக்கொடுக்குமாறு என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார். செபங்கள் இதயத்தைத் திறப்பதுடன் நம்பிக்கையைத் தந்து, விசுவாசத்தைப் பிறப்பித்து உறுதியாக்குகின்றது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களை அன்பாய் அழைக்கிறேன், இறைவனிடம் திரும்பி வாருங்கள், இறைவன் அன்பானவர் மற்றும் அவரே உங்கள் நம்பிக்கை. நீங்கள் இறைவனிடம் தஞ்சமடையாவிட்டால் உங்களுக்கு எதிர்காலம் அற்றுப்போய்விடும், ஆகவேதான் நான் உங்களை வழிநடத்துவதற்காக உங்களிடம் வந்துள்ளேன், இதன்மூலம் நீங்கள் மனம்திரும்பி இறப்பை விடுத்து வாழ்வை முடிவுசெய்யுங்கள். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகின்றேன்.„




2022-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே, கடவுள் என்னை உங்களுடன் இருப்பதற்கும், உங்களை சமாதானத்தின் வழியில் நடத்தவும் என்னை அனுமதித்துள்ளார், இதன்மூலம் நீங்கள் சமாதானத்தை உலகில் வளரச்செய்யுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக எனது மகன் இயேசுவிடம் வேண்டிக்கொள்கிறேன், இதனால் அவர் உங்களது விசுவாசத்தை மற்றும் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வார். இதையே நான் உங்களுடன் சேர்ந்து வளரச்செய்ய விரும்புகிறேன். நீங்கள் உறுதியாக இருப்பதுடன் பயப்படாதீர்கள், இறைவன் உங்களுடன் உள்ளார். எனது அழைப்பைக் கேட்பதற்கு உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.„




2022-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்கள் பெயரிலும் எனது வேண்டுகோளை ஏற்றும் நீங்கள் செய்துவரும் அனைத்து உதவிகளுக்கும் செபங்களுக்கும் நான் உங்களுடன் சேர்ந்து மகிழ்வடைகின்றேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது திட்டத்தின்படி மக்களைக் குணப்படுத்துவது மிக முக்கியமானது என்பதை மறவாதீர்கள். இறைவனிடமும் செபத்திலும் திரும்பி வாருங்கள், இதன்மூலம் தூயஆவியானவர் உங்களில் மற்றும் உங்கள் ஊடாக செயலாற்றுவார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, சாத்தான் போருக்கு மற்றும் வெறுப்புக்காகப் போராடும் இந்த நாட்களிலும் நான் உங்களோடு உள்ளேன், பிரிவினைகள் வளர்வதுடன் பாவங்கள் மனிதரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்கின்றது. எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி.“




2022-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களைப் பார்ப்பதுடன் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன், ஏனென்றால் அவர் தொடர்ந்தும் என்னை உங்களிடம் வந்து, உங்களைத் தூயவர்களாக வாழத் தூண்ட, என்னை அனுமதித்துள்ளார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, சமாதானம் குழம்பியுள்ளதுடன் சாத்தான் அமைதியின்மையை விரும்புகிறது. ஆகவே உங்கள் செபங்கள் மேலும் பலமடையட்டும், அதன்மூலம் ஒவ்வொரு தீய சக்தியும் பிரிவடைந்து போரில் அழிந்து போகட்டும். சமாதானத்தைக் கட்டுவிப்பவரும் மகிழ்வை ஏற்படுத்துபவருமான உயிர்த்த கிறிஸ்து உங்களிடமும் உங்கள் சூழலிலும் இருப்பாராக, அதன்மூலம் ஒவ்வொரு மனிதருக்கும் நன்மைகளுடனான வெற்றி கிடைக்கட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்கு உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2022-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்களை நான் பார்க்கிறேன், அத்துடன் உங்களில் பலர் காணாமற்போயுள்ளதையும் காண்கின்றேன். ஆகவே உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்: கடவுளிடம் திரும்பி வாருங்கள், செபத்திற்குத் திரும்பி வாருங்கள், தூயஆவியானவர் தனது இதயத்தில் மகிழ்வடைந்து உங்களை தனது அன்பால் நிரப்புவார். ஒரு சிறப்பான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள், நீங்கள் கடவுளின் திருஇருதயத்திற்கு எங்கும் சாட்சிகளாய்த் திகழுங்கள். எனது அழைப்பைக் கேட்பதற்கு உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2022-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! சமாதானத்துக்கான உங்கள் தாழ்மையான வேண்டுதல்களையும் உங்கள் மன்றாட்டுக்களையும் நான் கேட்கின்றேன். இதனால்தான் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பி, உங்களைத் தூயவழியில் வழிநடத்தச் செய்கிறார், ஏனென்றால் மனிதகுலம் குறுக்கு வழியை நாடுகின்றது. நான் உங்களை இறைவனிடமும் அவரது கட்டளைகளிடமும் திரும்புமாறும், இதன்மூலம் நீங்கள் இப்பூமியில் செழித்து வளரவும், உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடவும் அழைக்கிறேன், ஏனென்றால் நீங்கள் உங்களை நேசிக்கவும் உங்களைக் காக்கவும் உங்களுக்குப் புதுவாழ்வைத் தர விரும்பும் இறைவனின் வார்த்தைகளைக் கேட்காமல் உள்ளீர்கள். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி.“




2022-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களோடு இருக்கிறேன் அத்துடன் நாம் ஒன்றுசேர்ந்து செபிப்போம். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபத்தால் எனக்கு உதவுங்கள், அதன்மூலம் சாத்தான் முன்னுரிமை பெறாதிருக்கட்டும். அதனது இறப்பின் சக்தி, வெறுப்பு மற்றும் பயம் என்பவை உலகை வந்தடைந்துள்ளது. ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இறைவனிடமும் செபத்திடமும் திரும்பி வாருங்கள், அடிமட்டத்தில் உள்ளவர்கள், ஏழைகள், மற்றும் இறைவன் இல்லாது இவ்வுலகில் எவ்வித குரலும் இல்லாதிருப்பவர்களுக்காக ஒறுத்தல்கள் மற்றும் துறுத்தல்களை மேற்கொள்ளுங்கள். அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் இறைவனிடமும் அவர் கட்டளைகளிடமும் திரும்பி வராவிட்டால், உங்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை. ஆகவேதான் அவர் என்னை உங்களிடம் அனுப்பி உங்களை வழிநடத்துகின்றார். எனது குரலைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன்!




2022-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களைத் தனிப்பட்ட செபத்துக்குத் திரும்புமாறு அழைக்கிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, மறக்காதீர்கள், சாத்தான் பலமாக இருப்பதுடன் எவ்வளவு ஆன்மாக்களை தன்பக்கம் இழுக்க முடியுமோ அவ்வளவையும் இழுக்க விரும்புகிறான். ஆகவே நீங்கள் செபத்தில் விழித்திருப்பதுடன் நல்லவைகளைத் தேர்ந்துகொள்ளுங்கள்! நான் உங்களுடன் இருப்பதுடன் அன்னைக்குரிய ஆசீரை உங்களுக்கு வழங்குகின்றேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி.




2021-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! செபத்துக்குத் திரும்புங்கள், ஏனென்றால், யார் செபிக்கின்றார்களோ, அவர்கள் தமது எதிர்காலம் குறித்துப் பயப்பட மாட்டார்கள். யார் செபிக்கின்றார்களோ, வாழ்க்கையில் திறந்த மனதுடன் இருப்பதுடன் பிறரின் வாழ்வில் கவனமெடுப்பார்கள். யார் செபிக்கின்றார்களோ, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அவர்கள் இறைவனின் சுதந்திரத்தை உணர்வதுடன் இதய மகிழ்வுடன் தமது சகோதர மனிர்களுக்குப் பணிபுரிவார்கள். ஏனென்றால் இறைவன் அன்பானவரும் சுதந்திரமானவரும். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எவராவது உங்களை சங்கிலியால் பிணைத்து அவர்களுக்கு பணிவிடைபுரிய வைத்தால் அது இறைவனிடமிருந்து வருவதல்ல, இறைவன் அன்பானவர் என்பதுடன் எந்தப் படைப்பிலும் அவரது அமைதி இருக்கும். ஆகவேதான் அவர் என்னை உங்களிடம் அனுப்பி, உங்களுக்கு உதவச் செய்கிறார் , தூயவர்கள் ஆவதற்கான வழியை வளரச் செய்கின்றார். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி!




2021-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே, செபியுங்கள், சாட்சியம் வழங்குவதுடன் என்னுடன் சேர்ந்து நீங்களும் மகிழுங்கள், ஏனென்றால் எல்லாம் வல்லவர் என்னைத் தொடர்ந்து அனுப்பி, உங்களை தூய வழியில் நடத்திச்செல்லுகிறார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் விழிப்பாயிருங்கள், வாழ்க்கை குறுகியது என்பதுடன் அனைத்துத் தூயவர்களுடன் இறைவன் சந்நிதானத்தில் மகிமையோடு முடிவிலா வாழ்வு உங்களுக்கு கிடைக்கவுள்ளது என்பதை மறவாதீர்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, பொய்மையான பொருட்களை நினைத்துக் கவலைப்படாதீர்கள், மாறாக வானகத்தை மனதில் கொள்ளுங்கள். வானகமே உங்கள் குறிக்கோளாக இருப்பதுடன் அந்த மகிழ்வு உங்கள் இதயத்தை நிரப்பட்டும். நான் என்றும் உங்களுடன் இருப்பதுடன் அன்னையாகிய எனது ஆசீரை உங்களுக்கு வழங்குகின்றேன். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகின்றேன்“




2021-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்கள் அனைவரையும் நான் மகிழ்வுடன் அழைக்கிறேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது அழைப்பைக் கேட்கும் உங்களுக்கு மகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாகட்டும்! நான் உங்களுக்கு எடுத்துவரும் ஆசீர்களுக்காக நீங்கள் வானகத்திற்கு சாட்சிகளாக வாழுங்கள். எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் எனது அன்பை அனைவருக்கும், அதாவது உங்களை அன்பு செய்யாதோருக்கும் தமது இதயத்தில் வெறுப்பைக் கொண்டிருப்போருக்கும் காட்ட இதுவே தருணம். மறவாதீர்கள்: நான் உங்களுடன் இருப்பதுடன், எனது மகன் இயேசுவிடம் உங்களுக்காக பரிந்துபேசுகின்றேன், இதன்மூலம் அவர் தனது சமாதானத்தை உங்களுக்கு வழங்குவார். நன்றி, நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு!




2021-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! செபிக்காத அனைவருக்காகவும் செபிக்குமாறு உங்களை நான் அழைக்கிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியால் சாட்சிகளாகத் திகழுங்கள், எனது பிள்ளைகளாக இருங்கள், இறைவன் உங்கள் செபங்களைக் கேட்டு உங்களுக்கு அமைதியைத் தரட்டும், இந்த அமைதியற்ற உலகில் அரவணைப்பும் ஆதரவும் வழங்கட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, மற்றவர்களுக்கு வாரி வழங்குங்கள், எனது அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இதன்மூலம் பிறர் நீங்கள் எனக்குச் சொந்தமானவர்கள் என்பதை உணர்ந்து கொள்வதுடன், எனது மாசற்ற இதயத்திற்கு மனம்மாறித் திரும்பட்டும். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்.




2021-05-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களைப் பார்த்து அழைக்கிறேன், இறைவனிடம் திரும்பி வாருங்கள், ஏனென்றால் அவரே அன்பானவர் அத்துடன் அவரது அன்பின் நிமித்தம், மனம்திரும்பும் வழியில் உங்களை நடத்திச்செல்ல என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார். பாவத்தையும் தீயவற்றையும் விட்டுவிட்டு, தூயவற்றிற்காக உங்களை ஒப்படைத்தால் மகிழ்ச்சி உண்டாகும். மறைந்துபோகும் இவ்வுலகில் உங்களை எனது நீட்டிய கைகளுக்குள்ளே வைத்திருக்கிறேன். கடவுளின் அன்பை இதுவரை கண்டறியாதவர்களுக்காக செபிப்பதுடன் அவர்கள் குறித்து நம்பிக்கை கொள்ளுங்கள். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றிகூறுகிறேன்!“




2021-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்கள் நம்பிக்கையை வசந்தகாலத்தின் வர்ணங்களாகக் காட்டிக்கொள்ள இன்று உங்களை நான் அழைக்கிறேன். இது உங்கள் நம்பிக்கையில் உறுதியை மற்றும் உற்சாகத்தைத் தருவதாக அமையட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் நம்பிக்கையை அசைந்தாட அத்துடன் இந்த வேளையில் பரீட்சித்துப்பார்க்க விடாதீர்கள். துணிவோடு கிறிஸ்துவுடன் செல்லுங்கள், அவரே வானத்தை நோக்கி உயிர்த்தவர், அவரே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். இந்தத் தூய வழியிலேயே நான் உங்களை வழிநடத்துவதுடன் உங்கள் அனைவரையும் எனது கறையற்ற இதயத்தில் வைத்துள்ளேன். எனது அழைப்பைக் கேட்பதற்கு நான் நன்றி கூறுகிறேன்.




2021-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களோடு இருந்து உங்களுக்குக் கூறுகின்றேன்: எனது அன்பார்ந்த பிள்ளைகளே, யார் செபிக்கின்றார்களோ, அவர்கள் தமது எதிர்காலம் குறித்து பயப்படுவதில்லை என்பதுடன், அவர்கள் நம்பிக்கையை இழந்து விடமாட்டார்கள். நீங்கள் மகிழ்வையும் சமாதானத்தையும் எடுத்துச் செல்பவர்களாக அழைக்கப்பட்டுள்ளீர்கள், ஏனென்றால் நீங்கள் என்னுடையவர்கள். நான் சமாதானத்தின் இராக்கினி என்ற பெயரில் இங்கு வந்துள்ளேன், ஏனென்றால் சாத்தான் குழப்பங்களையும் போர்களையும் விரும்புகிறது, அது உங்கள் எதிர்காலம் குறித்து பயத்தை ஏற்படுத்த விரும்புகிறது, ஆனால் எதிர்காலம் இறைவனுடையது! ஆகவே துணிவுடன் செபியுங்கள், அத்துடன் அனைத்தையும் உங்களைப் படைத்த எல்லாம் வல்ல இறைவனின் கைகளில் ஒப்படையுங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்!




2021-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! உங்களை செபத்திலும் நோன்பிலும் வாழ அழைக்குமாறு இறைவன் இன்றும் எனக்கு அனுமதி தந்துள்ளார். இரக்கம் மற்றும் நம்பிக்கைக்குச் சாட்சியமாக இருக்கும் இக்காலத்தில் வாழ்கின்றீர்கள், ஆகவே நான் மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபமும் நோன்பும் போர்முழக்கங்களையும் அடங்கச்செய்துவிடும். அன்பான பிள்ளைகளே, இந்த இரக்கத்துக்குரிய காலத்தை நம்புவதுடன், விசுவாசத்துடன் வாழுங்கள், எனது மாசற்ற இதயம் என்னில் அபயம் தேடும் உங்களில் எவரையும் கைவிட்டுவிடாது. எல்லாம் வல்ல இறைவனிடம் நான் உங்கள் அனைவருக்காகவும் உங்கள் இதயத்தில் அமைதி குடிகொள்ளவும் எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்ளவும் பரிந்துபேசுவேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்“.




2021-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! நான் உங்களை இந்த வேளையில் செபிக்க, நோன்பிருக்க மற்றும் ஆடம்பரங்களைத் தவிர்த்துக்கொள்ள அழைக்கிறேன், இதன்மூலம் நீங்கள் மேலும் விசுவாசத்தில் உறுதியாகலாம். இதுவே விழித்துக்கொள்ள மற்றும் புதிய பிறப்பெடுப்பதற்கான தருணம். இயற்கை தானே வழங்குவது போன்று, நீங்களும், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எவ்வளவற்றைப் பெற்றுள்ளீர்கள். சமாதானம் மற்றும் அன்பை காவிச்செல்பவர்களாக இருங்கள், இதன்மூலம் நீங்கள் உலகில் பல நன்மைகளைப் பெற்றுக்கொள்வீர்கள். வானத்தைப் பாருங்கள், அங்கு கவலையோ அல்லது வெறுப்போ இருப்பதில்லை. ஆகவே எனது அன்பார்ந்த பிள்ளைகளே, மனம்திரும்பி புதிய முடிகளை எடுப்பதுடன் தூய்மை உங்கள் வாழ்வை ஆட்கொள்ளட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.”




2020-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களை அமைதி வழங்கும் இயேசு பாலனிடம் எடுத்துச் செல்கிறேன். அவரே உங்களோடு கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பவர். எனது அன்பான பிள்ளைகளே, உங்களது ஆழமான விசுவாசம் அழிந்துபோக, மற்றும் சிறப்பான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை தளர்ந்து செல்ல அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் ஒவ்வொரு வேளையிலும் விசுவாசத்தின் சாட்சிகளாக இருக்க நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். ஆகவேதான் நான் இயேசுவோடு இங்கு வந்துள்ளேன். இதன்மூலம் அவர் தனது அமைதியின் ஆசீரை உங்களுக்கு அருளுகின்றார். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“.




2020-09-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் நீண்ட காலமாக உங்களுடன் உள்ளேன், ஏனென்றால் நான் இருக்கும்போது கடவுளின் அன்பு மேலும் அதிகமாக உள்ளது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களை அழைக்கிறேன், இறைவனிடமும் செபத்திலும் திரும்பி வாருங்கள். அன்பே உங்கள் வாழ்வின் அளவீடாக இருக்கட்டும்இ மறக்காதீர்கள் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபமும் ஒறுத்தலும் உங்களிலும், உங்களைச் சுற்றியும் அதிசயங்களை நிகழ்த்தட்டும். நீங்கள் செயற்படுத்தும் அனைத்தும்இ கடவுளைப் புகழ்வதாக இருக்கட்டும், அத்துடன் வானகத்திலிருந்து உங்கள் இதயத்திற்கு மகிழ்ச்சி கிடைக்கட்டும், இதன்மூலம் கடவுள் உங்களை அன்பு செய்கிறார் என்பதை உணர்ந்து கொள்வதுடன் அவரே என்னை உங்களிடமும் உலகிற்கும், உங்களை அன்பு செய்யவும், உங்களைப் பாதுகாக்கவும் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன்!“




2020-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இது இரக்கத்தின் காலம். நான் உங்களுடன் இருப்பதுடன் நான் உங்களை மீண்டும் புதிதாக அழைக்கிறேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபங்கள் உங்களுக்கு மகிழ்வைத்தரும் வரை கடவுளிடமும் செபத்திற்கும் திரும்பி வாருங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் வாழ்வில் நீங்கள் தனிப்பட்ட முறையில் மனம் திரும்புவதுடன் மாற்றங்கள் நன்மைகளைத் தரும்வரை நல்ல எதிர்காலமோ அல்லது அமைதியோ கிடைக்காது. தீயவை முடிவுக்கு வரட்டும் சமாதானம் உங்கள் இதயத்திலும் உலகத்திலும் நிரம்பட்டும். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள்! நான் உங்களுடன் இருப்பதுடன் நான் எனது மகன் இயேசுவிடம் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் பரிந்துரைப்பேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன்!“




2020-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இந்த அமைதியற்ற காலத்தில், சாத்தான் ஆன்மாக்களை தன்பக்கம் இழுப்பதற்கு மும்முரமாக முனையும் வேளையில், நீங்கள் செபத்தில் ஆழமாக இருக்குமாறும் இறைவனின் அன்பு மற்றும் நம்பிக்கையை கண்டுகொள்ளுமாறும் நான் உங்களை அழைக்கிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, சிலுவையைக் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் அன்பு நிறைந்த உற்சாகம் எப்பொழுதும் வெற்றிபெறும், விசேடமாக சிலுவை மற்றும் நம்பிக்கை நிராகரிக்கப்படும் இந்த வேளையில். நீங்கள் உங்கள் வாழ்க்கை மூலம் மற்றவர்களுக்குப் பிரதிபலிப்பாக இருப்பதுடன், விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் தற்போதும் உயிரோட்டமாக இருந்து காட்டுவதன் மூலம் ஒரு புதிய அமைதியான உலகிற்கு வழிசமையுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக எனது மகன் இயேசுவிடம் பரிந்து பேசுகின்றேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றிகூறுகின்றேன்!.




2020-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்கள் விண்ணப்பங்களையும் செபங்களையும் கேட்பதுடன் உங்களுக்காக எனது மகன் இயேசு முன்பாகப் பரிந்துரை செய்கிறேன், அவரே வழி, உண்மை மற்றும் வாழ்வாகும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபத்திற்குத் திரும்புங்கள் அத்துடன் உங்கள் இதயங்களை இந்த இரக்கத்தின் காலத்தில் திறப்பதுடன், மனம்திரும்பும் பாதையில் செல்லுங்கள். உங்கள் வாழ்வு மறைந்துவிடும் என்பதுடன் இறைவன் இல்லாமல் எந்த அர்த்தமும் இருக்காது. ஆகவே நான் உங்களை தூய வாழ்வில் வழிநடத்த உங்களுடன் உள்ளேன், இதன்மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் மகிழ்வைக் கண்டடைவீர்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்கின்றேன், உங்களை அன்னையின் ஆசீர் வழங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றிகூறுகின்றேன்.„




2020-05-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! உங்கள் அனைவரதும் புது வாழ்விற்காக என்னுடன் சேர்ந்து செபியுங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்களுக்குத் தெரியுமா, உங்களது இதயத்தில், நீங்கள் என்ன மாற்றத்தை அடையவேண்டுமென: இறைவன் பக்கம் திரும்புங்கள், இதன்மூலம் தூயஆவி உங்கள் வாழ்வு மற்றும் உலகப் பார்வையில் புதுமாற்றத்தை ஏற்படுத்துவார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இந்த அமைதியற்ற காலத்தில் செபிக்காத அனைவருக்காகவும் செபியுங்கள், துன்பத்திலிருக்கும் அனைவருக்கும் மகிழ்வைக் கொடுங்கள், இருளில் இருப்பவர்களுக்கு ஒளியைக் கொடுங்கள். செபிப்பதுடன், புனிதர்களின் உதவியுடன் பாதுகாப்பை நாடுங்கள், இதன்மூலம் நீங்கள் வானகத்தையும் தூயகத்தின் உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களைப் பாதுகாத்து, உங்கள் அனைவருக்கும் அன்னையாம் எனது ஆசீரை வழங்குகிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றிகூறுகிறேன்.„




அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி






2020-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! இந்த நாட்கள் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் மனம்திரும்பலுக்கான காலமாக அமையட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, தூய ஆவியானவர், தனிமையிலுள்ள உங்களுக்கு, பலத்தையும் இறை நம்பிக்கையையும் வழங்கி உறுதிப்படுத்துவாராக, அத்துடன் இறைவன் என்னை உங்களிடம் அனுப்புவதன் ஊடாக நீங்கள் உண்மை அன்புக்குச் சாட்சிகளாத் திகழ்வீர்களாக. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, சோதனைகளுக்கு உட்பட்டு உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் அத்துடன் உங்கள் செபங்களும் ஒரு பாலைவனத்தைப் போன்று பரந்ததாக இருக்கட்டும். இறைவன் அன்பைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பதுடன், உங்கள் வாழ்வு உயிர்த்த கிறிஸ்துக்கு சாட்சியமாக இருக்கட்டும். நான் உங்களுடன் இருப்பதுடன் நான் உங்கள் அனைவரையும் அன்னைக்குரிய பரிவுடன் அன்பு செய்கின்றேன். எனது அழைப்பைக் கேட்பதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்“




2020-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! உங்கள் தூய்மையான மற்றும் நிலையான அன்பு அன்னையான எனது இதயத்தை கவர்ந்துள்ளது. வானகத் தந்தையின் மீதுள்ள உங்கள் விசுவாசம் மற்றும் நம்பிக்கை நறுமணம் வீசும் றோசாக்களாகும். அவைகளை நீங்கள் எடுத்துவரும்போது, அவை அழகான றோசா மலர்க்கொத்தாகின்றது, இவை உங்கள் செபங்கள், இரக்கச் செயல்கள் மற்றும் அன்பாக ஒன்றுசேர்ந்துள்ளது, இவைகளின் ஊடாக நீங்கள் வானகத் தந்தையை மகிமைப்படுத்துகின்றீர்கள். எனது அன்பான தூதர்களே, இது அவதானமாக இருப்பதற்கான காலம் என்பதுடன் நான் உங்களை அன்பாகக் கேட்டுக்கொள்வது, நீங்கள் யாரையும் தீர்ப்பிடாதீர்கள், ஏனென்றால் வானகத் தந்தையே ஒவ்வொருவரையும் தீர்ப்பிடுவார். நீங்கள் ஒருவர் ஒருவருடன் அன்பாக இருக்குமாறு கேட்பதுடன், அதுவே என்றும் நிலைத்திருக்கும். அதுவே என்றும் இறைவனுக்குச் சாட்சிபகரும். எனது மகனின் ஒளியைக் கொண்டுவருவதுடன் இருளை அகற்றுங்கள், அது உங்களை அதிகமாகப் பற்றிக்கொள்ள விரும்புகிறது. நீங்கள் பயம்கொள்ளாதீர்கள். எனது மகனின் இரக்கம் மற்றும் அன்பு ஊடாக நான் உங்களுடன் உள்ளேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்“.




2020-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில், உங்கள் முகங்கள் செபத்திற்காக மாற்றமடைவதைக் காண நான் விரும்புகின்றேன். நீங்கள் உலக மாயைகளில் மூழ்கித் தவிப்பதுடன் விரைவில் இளவேனிற்காலம் வரவுள்ளது என்பதையும் உணராதுள்ளீர்கள். எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் ஒறுத்தல் செய்யவும் செபிக்கவும் அழைக்கப்படுகின்றீர்கள். எவ்வாறு இயற்கை அமைதியுடன் புது வாழ்விற்காகப் போராடுகின்றதோ, அதேபோன்று நீங்களும் இறைவனிடம் செபிக்க உங்கள் மனதைத் திறவுங்கள், அவரிடமே நீங்கள் சமாதானத்தையும் உங்கள் இதயத்தில் இளவேனில் சூரிய வெப்பத்தையும் கண்டுகொள்ளலாம். எனது அழைப்பைக் கேட்பதற்காக நான் நன்றி கூறுகின்றேன்.„




2020-02-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இறைவன் தனது முடிவை செயற்படுத்தியது மற்றும் அவரது அன்பு காரணமாக, நான் இறைவனதும் உங்களதும் தாயாகத் தெரிந்தெடுக்கப்பட்டேன். அத்துடன் வானகத் தந்தை மீதான எனது விருப்பம் மற்றும் அளவிடமுடியாத அன்பு மற்றும் அவரில் கொண்ட எனது முழு நம்பிக்கை, எனது உதரத்தை இறைமைந்தரின் பாத்திரம் ஆக்கியது. நான் உண்மைக்காக, அன்புக்காக மற்றும் மீட்பிற்காகப் பணிசெய்தேன், இப்போது நான் உங்கள் மத்தியில் வந்து அனைவரையும் அழைக்கிறேன், எனது பிள்ளைகளே, எனது அன்பின் தூதர்களே, உண்மையை தாங்கிச்செல்பவர்களாக இருங்கள், அவரது வார்த்தைகளை -மீட்பின் வார்த்தைகளை- எனது மகனில் விருப்பத்துடனும், அன்புடனும் பரவச் செய்யுங்கள், இவ்வாறான உங்கள் நடவடிக்கைகள் மூலம் எனது மகனை அறியாத அனைவருக்கும் அவரது அன்பை நீங்கள் எடுத்துக் காட்டுங்கள். நீங்கள் திருப்பலியில் உங்களுக்கான சக்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள், எனது மகன் அவரது உடலால் ஊட்டம் தருவதுடன் இரத்தத்தால் சக்தியைத் தருகிறார். எனது பிள்ளைகளே, உங்கள் கைகளைக் குவித்து அமைதியாகத் திருச்சிலுவையைப் பாருங்கள். இதன் வழியாகவே உங்கள் நம்பிக்கையை வளர்ப்பதுடன் அதை பிறருக்கு வழங்க முடியும், உண்மைக்குச் சாட்சி பகருங்கள், இதன் மூலமே உண்மையாக அன்பு செய்வதற்கான வித்தியாசத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம், எனது பிள்ளைகளே, அன்பின் தூதர்களே, உங்கள் கைகளைக் குவியுங்கள், திருச்சிலுவையைப் பாருங்கள், சிலுவையே மீட்பைத் தரும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.




2020-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை, உங்கள் இதயங்களில் பரிசுத்தமான மன்னிப்பை உணரும் வரையாக மென்மேலும் செபிக்க அழைக்கிறேன். பரிசுத்தம் குடும்பங்களில் ஏற்பட வேண்டும், ஏனென்றால் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அன்பு மற்றும் பரிசுத்தம் இல்லாமல் உலகிற்கு எதிர்காலம் இல்லை - பரிசுத்தம் மற்றும் மகிழ்வை, நீங்கள் உங்களைப் படைத்துக் காத்து அளவில்லாத அன்பு செய்துவரும் இறைவனுக்குக் கொடுக்கின்றீர்கள். ஆகவேதான் அவர் என்னை உங்களிடம் அனுப்புகிறார். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.”




2020-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்கள் வாழ்விலும் இதயத்திலும் எப்போதும் உள்ளேன் என்பது எனக்குத் தெரியும். நான் உங்கள் அன்பை உணர்கிறேன், உங்கள் செபத்தைக் கேட்கிறேன் மற்றும் அவற்றை எனது மகனிடம் வழங்கி வருகின்றேன். ஆனால், எனது பிள்ளைகளே, நான் தாயக்குரிய அன்புடன் எனது அனைத்துப் பிள்ளைகளின் வாழ்விலும் இருக்க விரும்புகின்றேன். எனது அனைத்துப் பிள்ளைகளும் எனது தாய்குரிய போர்வைக்குக் கீழாக என்னைச்சுற்றி ஒன்றுசேர்வதை விரும்புகின்றேன். ஆகவே, நான் உங்களை அழைக்கிறேன், அத்துடன் எனது அன்பின் தூதர்கள் எனப் பெயரிட்டுள்ளேன், இதன்மூலம் நீங்கள் எனக்கு உதவுகிறீர்கள். எனது பிள்ளைகளே, எனது மகன் „எங்கள் தந்தையே“ என்ற வார்த்தையைக் கூறியுள்ளர் - எங்கள் தந்தையே, நீர் எங்கும் இருக்கிறீர் என்பதுடன் எமது இதயத்திலும் உள்ளீர்- ஏனென்றால் அவர் உங்களுக்கு செபிக்கும் வார்த்தைகளையும் உணர்வுகளையும் கற்பிக்க விரும்புகிறார். நீங்கள் எப்பொழுதும் சிறப்புறவும் இரக்கம் மிகுந்த வாழ்வை வாழவும் உங்கள் அயலாருக்கு ஆறுதல் வார்த்தைகளையும், அவர்கள் பிரச்சினைகளை உணர்ந்து நீதியின்மேல் தாகம் கொண்டவர்களாகவும் வாழவும் அவர் விரும்புகிறார். ஆனால், எனது அன்பான தூதர்களே நீங்கள் மற்றவர்களுக்கு எதை வழங்குகின்றீர்களோ, எனது மகன் அவற்றை பரிசாக ஏற்றுக்கொள்கின்றார். அத்துடன் நான் உங்களுடன் உள்ளேன், ஏனென்றால் எனது அன்பு ஒளிக்கீற்றுக்களாக உங்கள் ஆன்மாக்கு மீள உயிர்கொடுக்கவும், நீங்கள் சமாதானத்தையும் நித்திய வாழ்வையும் தேட உதவுமாறு எனது மகன் விரும்புகிறார். ஆகவே எனது அன்பான பிள்ளைகளே, ஒருவர் ஒருவரை அன்பு செய்யுங்கள். எனது மகனுடன் ஒன்று சேருங்கள், கடவுளின் பிள்ளைகளாகுங்கள், அனைவரும் ஒன்றுசேர்ந்து நிறைந்த திறந்த சுத்தமான இதயத்துடன் „எங்கள் தந்தையே“ என்று கூவி அழைப்போம். நீங்கள் பயம் கொள்ளாதீர்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.“




2019-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! நான் எனது மகன் இயேசுவை உங்களை ஆசீர்வதிக்க மற்றும் அவரது அன்பை வெளிப்படுத்த வானகத்திலிருந்து உங்களிடம் கொண்டு வருகிறேன். உங்கள் இதயம் சமாதானத்திற்காக ஏங்குகின்றது, இது உலகின் மிகவும் குறைந்து செல்கின்றது. ஆகவேதான் மக்கள் இறைவனை விட்டு தூரவிலகிச்செல்வதுடன், அவர்கள் ஆன்மாக்கள் நோய்வாய்ப்பட்டு ஆன்மீக இறப்புக்கு உள்ளாகின்றனர். அன்பான பிள்ளைகளே! இறைவன் உங்களை ஈடேற்றத்திற்கு அழைக்கும் வழியில் நான் உங்களோடு இருந்து வழிநடத்துவேன். எனது அழைப்பைக் கேட்பதற்கான நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.“




2019-12-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! நீங்கள் எனது மகனை அன்பு செய்வதை நான் பார்க்கும்போது, எனது இதயம் மிகுந்த மகிழ்ச்சியால் நிரம்புகிறது. நான் உங்களுக்கு அன்னையாம் எனது ஆசீரை வழங்குகிறேன். இவ்வாறான அன்னையின் ஆசீரை, நான் உங்கள் மேய்ப்பர்களுக்கும் வழங்குகிறேன் - உங்களில் எவர் எனது மகனின் வார்த்தைகளை எடுத்துரைக்கின்றார்களோ, யார் தமது கைகளால் ஆசீர்வதிக்கின்றார்களோ மற்றும் யார் அவரை அதிகம் அன்பு செய்கிறார்களோ, அதாவது யார் அவருக்காக ஒவ்வொரு தியாகங்களையும் செய்ய மகிழ்ச்சியுடன் ஆயத்தமாக உள்ளார்களோ அவர்களுக்கு அவரின் ஆசீர் கிடைப்பதாக. நீங்கள் அவரைப் பின்தொடர்கின்றீர்கள், அவரே முதல் ஆயன், முதல் நற்செய்தி அறிவிப்பாளர். எனது பிள்ளைகளே, அன்பின் தூதர்களே, மற்றவர்களுக்காக வாழ்வது மற்றும் பணியாற்றுவது, அத்துடன் யாரை நீங்கள் எனது மகன் மூலமாக அன்பு செய்கின்றீர்களோ, அதுவே உலக வாழ்வில் மகிழ்வையும் ஆறுதலையும் தரும். எனது மகனை அன்பு செய்வோர் மற்றும் அவரின் மூலமாக ஒருவரை ஒருவர் அன்பு செய்வோருக்கு மத்தியில் வார்த்தைகள் அவசியமில்லை. பேசப்படாத வார்த்தைகள் மற்றும் கூறப்படாத உணர்வுகளைக் கேட்பதற்கு, பார்வை ஒன்றே போதுமானது. எங்கே அன்பு ஆளுகின்றதோ அங்கு காலங்கள் கணக்கிடப்படுவதில்லை. நாங்கள் உங்களுடன் உள்ளோம். எனது மகன் உங்களை அறிந்திருப்பதுடன் உங்களை அன்பு செய்கிறார். ஆகவே எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் எங்கு சென்றாலும் அன்பையும் நம்பிக்கையையும் வழங்கி அன்பின் தூதர்களாகப் பிரகாசியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.“




2019-11-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! இந்த நேரம் உங்களுக்கு ஒரு செபிக்கும் நேரமாக அமையட்டும். இறைவன் இல்லாமல் உங்களுக்கு அமைதி இருக்காது. ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, உங்கள் இதயத்தில் அமைதிக்காக மற்றும் குடும்பங்களுக்காகச் செபியுங்கள், இதனால் இயேசு உங்களில் பிறப்பதுடன் அவரது அன்பையும் ஆசீரையும் வழங்குவார். உலகம் போரை விரும்புகிறது ஏனென்றால் அதன் இதயம் முழுவதும் வெறுப்பும் பொறாமையும் நிரம்பியுள்ளது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் கண்களில் திருப்தியின்மை தெரிகின்றது ஏனென்றால் உங்கள் வாழ்வில் இயேசு பிறக்க நீங்கள் அனுமதிக்கவில்லை. அவரைத் தேடுங்கள், செபியுங்கள், அவர் தன்னை உங்களுக்கு குழந்தையாகத் தருவதுடன் அக் குழந்தையே மகிழ்வையும் அமைதியையும் தரும். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காகச் செபிக்கிறேன். நீங்கள் என் அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன்.”




2019-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது அன்பான மகன் எப்பொழுதும் செபித்ததுடன் வானகத்தந்தையிடம் ஆசீர் பெற்றார். அவர் எப்பொழுதும் அனைத்தையும் தந்தைக்குக் கூறியதுடன் அவரின் சித்தத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். இதுபோன்றே நீங்கள் நடந்து கொள்ளவேண்டும். அன்பான பிள்ளைகளே, வானகத்தந்தை எப்பொழுதும் தனது பிள்ளைகளின் வேண்டுதலைக் கேட்டுக்கொள்வார். வானகத்தந்தை தனது மனித வடிவத்தைப் பரிசாகத் தந்துள்ளார் அது எனது மகனின் வடிவமாகும். எனது அன்பின் தூதர்களே, நீங்கள் எப்பொழுதும் எனது மகனின் வடிவத்தை உங்கள் இதயத்தில் தாங்க வேண்டும். நீங்கள் எப்பொழுதும் அவரது அன்பையும் அவரது தியாகத்தையும் நினைவிற்கொள்ள வேண்டும். எனது அன்பின் தூதர்களே எனது மகனை அறியாதவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களும் எனது மகனின் அன்பைக் கண்டறியச் செய்யுங்கள். எனது பிள்ளைகளே, திருவிவிலியத்தை வாசியுங்கள். அதில் எப்பொழுதும் புதிதான ஒன்றைக் காண்பதுடன், அதுவே உங்களை எனது மகனுடன் இணைக்கின்றது. எனது அன்பான தூதர்களே எனது மகனின் அன்பையும் சமாதானத்தையும் உங்கள் சசோதர சகோதரிகளுக்கு வழங்குங்கள். எவரையும் தீர்ப்பிடாதீர்கள். அனைவரோடும் எனது மகனை அன்புசெய்வது போன்று நடந்து கொள்ளுங்கள். இவ்வாறான வழியிலேயே நீங்கள உங்கள் ஆன்மாவைப் பாதுகாக்க முடியும், அதுவே உங்களிடம் உள்ள அனைத்துப் பொருட்களிலும் பெறுமதி மிக்கது. நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.„




2019-10-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! இன்று உங்களை நான் செபிக்க அழைக்கிறேன். இச் செபம் உங்கள் ஆன்மாக்கு ஒரு தைலம் போன்று இருக்கட்டும், ஏனென்றால் செபத்தின் பலன் மகிழ்வு, உங்கள் வாழ்வின் ஊடாக - இறைவனை மற்றவர்களுக்குக் கொடுத்து சாட்சி பகருங்கள். அன்பான பிள்ளைகளே, இறைவனிடம் முழுமையாகச் சரணடைந்தால், அவர் உங்களுக்கான அனைத்தையும் கவனித்துக் கொள்வதுடன் உங்களை ஆசீர்வதிப்பார், உங்களது தியாகங்களுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் அனைவருக்கும் அன்னையாம் எனது ஆசீரை வழங்குகின்றேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.“




2019-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே வானகத் தந்தையின் விருப்பம் மற்றும் அவரது அன்பின் பிரதிபலிப்பாக நான் உங்கள் மத்தியில் வந்துள்ளேன், தாயின் அன்புடன் உதவவும், நம்பிக்கையை இதயத்தில் வளர்க்கவும், இதனூடக நீங்கள் உலக வாழ்வின் ஊடான நித்திய வாழ்வின் உண்மையான நோக்கத்தையும் இறைத் தந்தையின் இரக்கத்தையும் கண்டுகொள்ளவும் அழைக்கிறேன். அன்பான பிள்ளைகளே, உலக வாழ்வு நித்தியத்திற்கு, உண்மைக்கு மற்றும் மறு வாழ்விற்கு இட்டுச்செல்கின்றது, உண்மை மற்றும் நம்பிக்கையில் தாகம் இருந்தாலேயே நீங்கள் கிணற்றிலிருந்து அவற்றை அருந்த முடியும். வானகத் தந்தையில் நம்பிக்கை கொள்ளுங்கள், அவரது அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரது சித்தத்திற்கு உங்களை அர்ப்பணியுங்கள், நீங்கள் பயப்படாதீர்கள். உங்களுக்குச் சிறப்பானவைகள் அனைத்தும், உங்களை நித்திய வாழ்விற்கு இட்டுச் செல்லும் அனைத்தும், உங்களுக்குத் தரப்பட்டுள்ளன. வாழ்வின் நோக்கம், விருப்பம் மற்றும் எடுப்பதில் இல்லாமல் மாறாக அன்புசெய்வதிலும் கொடுப்பதிலும் உள்ளது என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள். உங்களிடம் உண்மையான சமாதானம் மற்றும் உண்மையான அன்பு இருக்கட்டும். நீங்கள் அன்பின் தூதர்களாக இருப்பீர்களாக. நீங்கள் உங்களை உதாரணமாகக் காட்டிக்கொள்ளுங்கள், எனது மகனையும் அவரது அன்பையும் அறியாத எனது பிள்ளைகளுக்கு அவர் குறித்து அறிவியுங்கள். எனது பிள்ளைகளே, எனது அன்பார்ந்த தூதர்களே, என்னுடன் சேர்ந்து எனது மகனிடம் மன்றாடுவதுடன் அனைத்திலும் பார்க்க அவரை அன்பு செய்யுங்கள். அவரது உண்மையில் வாழ்வதற்கு நீங்கள் எப்பொழுதும் முயற்சியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.”




2019-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! இன்று நான் எனது எண்ணங்களுக்காகச் செபிக்க உங்களை அழைக்கிறேன், அப்போதுதான் என்னால் உங்களுக்கு உதவ முடியும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபமாலையைச் செபியுங்கள் அத்துடன் அதிலுள்ள இரகசியங்களைத் தியானியுங்கள், ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்களும் மகிழ்ச்சி மற்றும் கவலைகளுக்கு ஊடாகக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். இதுபோன்றே நீங்களும் உங்கள் வாழ்வை இறைவனின் கரங்களில் ஒப்படைக்கும் வரை இரகசியங்களைக் கடத்திச் செல்ல வேண்டியிருக்கும். இதேவழியில் நீங்கள் பேதுருவுக்கு இருந்தது போன்ற விசுவாச அனுபவங்களைக் கொண்டிருங்கள், யார் இயேசுவைச் சந்திக்கின்றார்களோ அவர்களின் இதயங்கள் தூயஆவியானவரால் நிரப்பப்படும். அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்களும் இறைவனுக்குச் சாட்சியாக ஒவ்வொரு நாளும் அன்பால் வாழ்ந்து காட்டுவதற்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள். ஆகவே அன்பார்ந்த பிள்ளைகளே, இதயத்தைத் திறந்து நம்பிக்கையுடன் செபியுங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.”




2019-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! செபியுங்கள்! செபியுங்கள்! ஒவ்வொரு நாளும் செபமாலையைத் தியானியுங்கள். இந்த பூ வளையமானது, அன்னையாகிய எனக்கு உங்கள் வேதனைகள், துயரங்கள், விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை நேரடியாக இணைத்து வைக்கின்றது. எனது அன்பான தூதர்களே, எனது மகனின் இரக்கம் மற்றும் அன்;பு காரணமாக நான் உங்களுடன் இருப்பதுடன் செபிக்குமாறு உங்களை உற்சாகப்படுத்துகின்றேன். உலகத்திற்கு உங்கள் செபங்கள் மிகவும் தேவைப்படுகின்றது, இதனால் ஆன்மாக்கள் மனம்திரும்பட்டும். எனது மகன் முழு நம்பிக்கையுடன் உங்கள் இதயங்களைத் திறப்பதுடன் அவரது வார்த்தைகளை ஒன்றுபடுத்தி வழங்குகிறார்-இதுவே அன்பாகும். எனது பிள்ளைகளே, அன்னையாக நான் உங்களுக்குக் கூறுகிறேன், எனது மகனின் முன்பாக முழந்தாள்படியிடுவதற்கு இதுவே சரியான தருணம், அத்துடன் அவரை உங்கள் இறைவனாக -உங்கள் வாழ்வின் நடுப்புள்ளியாக- தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கு விருப்பமான காணிக்கைகளை வழங்குங்கள், அதாவது அயலாரை அன்புசெய்வது, இரக்கம்காட்டுவது மற்றும் தூய இதயத்தைக் கொண்டிருப்பது. எனது அன்பார்ந்த தூதர்களே, எனது பல பிள்ளைகள் எனது மகனை தமது இறைவனாக இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்கள் அவரது அன்பை இதுவரை கண்டறிந்து கொள்ளவில்லை. நீங்கள் உங்கள் செபங்கள் மூலமாக, தூய மற்றும் திறந்த இதயத்துடன் கேட்டு, உங்கள் காணிக்கைகளை எனது மகனிடம் கொடுப்பதன் ஊடாக கடுமையாக இருக்கும் இதயங்களைத் திறக்கச் செய்யுங்கள். எனது அன்பார்ந்த தூதர்களே, பலமுள்ள இதயத்தால் வேண்டப்படும் செபங்கள் உலகத்தை மாற்றியமைக்கும். ஆகவே எனது பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள். நான் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களுக்கு நன்றிகூறுகின்றேன்.„




2019-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே, நீங்கள் செயற்படுவதுடன் அன்பால் வானக இராச்சியத்திற்கு சான்று பகருங்கள், இதன்மூலம் இவ்வுலகில் உங்களுக்கு நலமுண்டாகட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இறைவன் உங்கள் முயற்சிகளை நூறுமடங்கு ஆசீர்வதிப்பார், நீங்கள் மக்களுக்கு சாட்சிகளாய் இருப்பீர்களாக, இறைவனை நம்பாதோரின் ஆன்மாக்கள் மனம்திரும்பி இரக்கத்தை உணர்வார்கள், இதனால் வானகம் உங்கள் முயற்சிகளுக்கும் இழப்புகளுக்கும் நன்றியுடையதாய் இருக்கும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் கைகளில் செபமாலையை வைத்துக்கொண்டு சான்று பகருங்கள், நீங்கள் என்னுடையதாய் இருப்பதுடன், நீங்கள் தூயவர்களாக இருக்க முடிவுசெய்துகொள்ளுங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகின்றேன்."




2019-08-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது மகனின் அன்பு பெரிதானது. நீங்கள் அவரது அன்பின் ஆழத்தை அறிந்து கொள்வீர்களானால், அவரிடம் செபிப்பதையும் அவரை நினைப்பதையும் விட்டுவிடமாட்டீர்கள். அவர் எப்பொழுதும் நற்கருணையில் உங்களுடன் உயிரோடு உள்ளார், ஏனென்றால் நற்கருணை அவரது இதயமாகும், நற்கருணை விசுவாசத்தின் இதயமாகும். அவர் உங்களை விட்டு எப்போதுமே பிரிந்ததில்லை. ஆகவே நீங்கள் அன்பால் நிறைந்து அவரிடம் மனம்திரும்பி வரும்போது அன்னையாகிய எனது இதயம் மகிழ்வடைகின்றது, நீங்கள் ஒப்புரவுபெற்று, அவரின் அன்பு மற்றும் நம்பிக்கையைத் தேடி வருவதை நான் காணும்போது மகிழ்வடைகின்றேன். எனது திருத்தூதர்களே, நீங்கள் விசுவாசத்தின் வழியில் நடக்கும்போது, மொட்டாகவும் மலராகவும் உள்ளீர்கள், ஆனால் செபம் மற்றும் நோன்பு இருக்கும்போது நீங்கள் பழம் ஆகின்றீர்கள். நீங்கள் ஒளியை ஏந்துபவர்களாக இருக்க வேண்டும் அத்துடன் நீங்கள் அன்பு மற்றும் மதிநுட்பத்துடன் உங்களைச் சுற்றியுள்ள அனைத்திற்கும் ஒளியாக இருக்க வேண்டும். எனது பிள்ளைகளே, அன்னையாக உங்களிடம் வேண்டுகிறேன்: செபியுங்கள், செபத்தின் தேவைகளை நினைவிற்கொள்ளுங்கள். உங்களுக்கு நடந்த அனைத்தையும்- அழகானவை, வேதனையானவை, மகிழ்வானவை, தூயதானவைகளை நினைவிற் கொள்ளுங்கள், நீங்கள் உளரீதியாக வளர்ச்சியடைந்தால், எனது மகன் உங்களில் வளர்ச்சியடைவார். எனது பிள்ளைகளே, உங்களை அவரிடம் ஒப்படையுங்கள், அவரில் நம்பிக்கை கொள்ளுங்கள், அவரது அன்பை நம்புங்கள், அவர் உங்களை வழிநடத்தட்டும். திருப்பலி வழிபாடு உங்கள் ஆன்மாவை அண்மையாக அழைத்துவரும் இடமாக இருக்கட்டும், அதில் அன்பும் உண்மையும் பெருகி, எனது மகனுக்குச் சாட்சியம் பகரட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."




2019-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! உங்களுக்கான எனது அழைப்பு செபமாகும். செபங்கள் உங்களுக்கு மகிழ்வைத் தருவதுடன் ஒரு வளையம் போன்று இறைவனுடன் பிணைக்கின்றது. அன்பான பிள்ளைகளே, தீர்ப்பு வரப்போகின்றது ஆனால் நீங்கள் உறுதியாக இருக்காது போனால், பாவங்களே வெற்றி பெறும், ஆனால் நீங்கள் எனது மகனின் இதயத்தில் அடைக்கலம் புகுந்திருந்தால், வெற்றி எமக்கே எனக் கூறமுடியும். ஆகவே எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபத்திற்குத் திரும்புங்கள், இச் செபங்கள் பகலிலும் இரவிலும் உங்கள் வாழ்வாக மாறும்வரை தொடரட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றிகூறுகின்றேன்.„




2019-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இரக்கமுள்ள தந்தையின் விருப்பத்தின்படி, அன்னையின் அடையாளத்தை நான் உங்களுக்கு வெளிப்படுத்துவதுடன், இதை நான் தொடர்ந்தும் செய்துகொள்வேன். எனது பிள்ளைகளே, ஆன்மாக்கள் குணமடைவதே அன்னையின் விருப்பம். அதாவது எனது ஒவ்வொரு பிள்ளையும் உண்மையான விசுவாசத்துடன் வியப்பான அனுபவங்களை அனுபவிப்பதுடன் எனது மகனின் வார்த்தைகளான ஊற்றைக் குடிக்க வேண்டும்- இதுவே வாழ்வின் வார்த்தைகள். எனது பிள்ளைகளே, எனது மகன், நம்பிக்கையின் ஒளியை தனது அன்பு மற்றும் அர்ப்பணிப்பணிப்பு மூலம் உலகிற்கு மீட்பு வழங்கியதுடன், உங்களுக்கு நம்பிக்கையின் வழியைக் காட்டியுள்ளார். எனது பிள்ளைகளே, நம்பிக்கை வேதனை மற்றும் துன்பங்களை அதிகரிக்கின்றது. உண்மையான நம்பிக்கை செபத்திற்கு நல் உணர்வைக் கொடுப்பதுடன், இரக்கமுள்ள இதயத்தின் செயற்பாட்டை செயற்படுத்துகின்றது. நம்பிக்கை கொண்டுள்ள எனது ஒவ்வொரு பிள்ளைகளும் எப்படியிருந்தபோதும் மகிழ்வாக இருக்கின்றார்கள், ஏனென்றால் அவர்கள் வானக மகிழ்வின் தொடக்கத்தை உலகிலேயே அனுபவிக்கின்றார்கள். ஆகவே எனது பிள்ளைகளே, எனது அன்பின் தூதர்களே, நீங்கள் உண்மையான விசுவாசத்திற்கு உதாரணமானவர்களாக வாழுங்கள், எனது மகனின் அன்புக்குச் சாட்சியாக எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியை ஏற்ற அழைக்கிறேன். எனது பிள்ளைகளே, அன்னையாக உங்களுக்குக் கூறுகிறேன், நீங்கள் உங்களது மேய்ப்பர்கள் இல்லாமல் விசுவாசத்தின் வழியில் செல்லமுடியாது என்பதுடன் எனது மகனைப் பின்பற்ற முடியாது. அவர்கள் உங்களை அன்புடன் வழிநடத்தப் பலத்தைக் கேட்டுச் செபியுங்கள். உங்கள் செபங்கள் எப்பொழுதும் அவர்களுக்கு எற்றபடியாக இருக்கட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."




2019-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே விசேடமான வகையில் நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன். நான் உங்களுக்காக புதிய காலத்தை ஆயத்தப்படுத்துகிறேன், இதன்மூலம் நீங்கள் விசுவாசத்தில் பற்றுடனும் செபத்தில் உறுதியுடனும் இருப்பீர்களாக, தூயஆவியானவர் உங்கள் மூலமாக செயலாற்றுவதுடன் உலகின் அமைப்பைப் புதுப்பித்துக்கொள்வார். நானும் உங்களுடன் சேர்ந்து அமைதிக்காகச் செபிக்கிறேன், இதுவே பெறுமதியான பரிசாகும், சாத்தான் போரையும் வெறுப்பையும் விரும்பினாலும், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது விரித்த கரங்களுடன் இறைவனோடு செல்வதில் பெருமையடையுங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்."




2019-06-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே, தூய மற்றும் திறந்த இதயமுள்ளவர்கள் மட்டுமே எனது மகனை உண்மையாக கண்டறிந்து கொள்வார்கள் என்பதுடன், எனது மகனி;ன் அன்பை அறியாத அனைவரும் உங்கள் மூலமாக அவரை அறிந்து கொள்ளட்டும். அன்பு மட்டுமே உங்களைப் புரிந்துகொள்ளச் செய்கின்றது அது இறப்பிலும் பார்க்க வலிமையானது ஏனென்றால் உண்மையான அன்பு இறப்பை வெற்றி கொள்வதுடன் இறப்பை இல்லாமல் செய்கின்றது. எனது பிள்ளைகளே, மன்னிப்பு அன்பின் உச்சக்கட்ட நிலையாகும். எனது அன்பான தூதர்களே, புரிந்து கொள்தல் மற்றும் மன்னிப்பு அன்பினதும் இரக்கத்தினதும் உதாரணங்களாகும். புரிந்துகொள்ளல் மற்றும் மன்னிப்பு என்பது ஒரு கொடை, அதற்காகச் செபிப்பதும் மற்றும் அதை வழக்கத்தில் கொள்வதும் அவசியமாகும். மன்னிப்பதின் மூலம் எவ்வாறு அன்பு செய்யலாம் என்பதை நீங்கள் எடுத்துக்காட்டுகின்றீர்கள். சற்று அவதானியுங்கள் எனது பிள்ளைகளே, வானகத் தந்தை எவ்வாறு உங்களை அதிக அன்புடன், புரிதலுடன், மன்னிப்புடன் மற்றும் நீதியுடன் அன்பு செய்கிறார், அவர் உங்களுக்கு என்னைத் தந்துள்ளார் - உங்கள் இதயத் தாயை. இங்கு நான் உங்கள் மத்தியில் அன்னையின் ஆசீரை வழங்குவதற்காக, உங்களை ஒறுத்தலுடன் செபிக்குமாறு அழைக்க வந்துள்ளேன். நம்புங்கள், நம்பிக்கை கொள்ளுங்கள், மன்னியுங்கள், செபியுங்கள் மற்றும் அனைத்திலும் மேலாக எல்லையில்லாது அன்பு செய்வதுடன் உங்கள் மேய்ப்பர்களுக்காகச் செபியுங்கள் எனக் கூற வந்துள்ளேன். எனது பிள்ளைகளே, என்னைப் பின்தொடருங்கள். எனது வழி சமாதானத்தினதும் அன்பினதும் வழி, எனது மகனின் வழி. இந்த வழியே எனது இதயத்தை வெற்றிக்கு இட்டுச்செல்லும் வழியாகும். உங்களுக்கு நன்றி."




2019-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இறைவன் தமது இரக்கமுள்ள இதயத்தின் ஊடாக என்னை உங்களிடம் வருவதற்கும், உங்களுக்கு அறிவிப்பதற்கும், மனம்திரும்பும் வழியில் வழிநடத்தவும் அனுமதித்துள்ளார். எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் அனைவரும் முழு இதயத்தோடு செபிக்கவும், அதன்மூலம் உங்களுக்கும், உங்கள் ஊடாக மற்றவர்களுக்கும் உடல், உள நலம் பெற அழைக்கப்பட்டுள்ளீர்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, வாழ்க்கை குறுகியது என்றும் நித்தியவாழ்வு உங்களுக்கான பரிசாக வரவுள்ளது என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆகவே செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள், இதன்மூலம் நீங்கள் இறைவன் கைகளில் பாராட்டுப்பெறும் கருவிகளாக இருப்பீர்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.“




2019-05-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! அன்னைக்குரிய அன்புடன் உங்களை நான் தூய மற்றும் திறந்த இதயத்துடன் எனது மகனில் வைத்துள்ள அதிக அன்பில் நம்பிக்கை கொள்ளுமாறு அழைக்கிறேன். அவரது அன்பு எவ்வளவு அதிகமானது என்பதை நான் அறிவேன். நான் அவரை எனது இதயத்தில் ஒளியாகவும் உலகின் அன்பாகவும் தாங்கிக் கொள்கிறேன். எனது பிள்ளைகளே, நான் உங்களிடம் வருவது உங்களுக்கு எனது அன்பினதும் வானகத் தந்தையின் அடையாளமாகவும் இருக்கின்றது. எது மகனின் இரத்தம் உங்கள் அன்பிற்காகச் சிந்தப்பட்டது. இந்த விலைமதிப்பில்லாத எனது மகனின் அன்பு நித்திய வாழ்விற்கு அழைக்கின்றது. வானகத் தந்தை மனிதரை முடிவில்லாத அன்பின் ஊடாகப் படைத்தார். எனது மகனின் அன்பை அறிந்தவர்கள், அவரை பின்பற்றுவோர் என்றுமே இறப்பதில்லை. ஆகவே எனது பிள்ளைகளே, எனது அன்பின் தூதர்களே, செபம் உங்களுக்கு வழியைக் காட்டுவதுடன் எனது மகனின் அன்பை எடுத்துக்காட்டுவதாக அமையட்டும். எனது பிள்ளைகளே, நீங்கள் எனது மகனின் வார்த்தைகளில் வாழ முயற்சிக்கும்போதும் செபத்தை விட்டுவிடாதீர்கள். நீங்கள் அன்புசெய்யும் பிறரைச் சந்திக்கும்போது எனது மகனின் அன்பையும் பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள். அன்பு வானுலகத்தின் கதவுகளைத் திறந்துவிடும். எனது பிள்ளைகளே, ஆரம்பம் தொடக்கமே நான் திருச்சபைக்காக செபித்துவருகிறேன். ஆகவே எனது தூதர்களே நீங்களும் திருச்சபைக்காகவும் எனது மகனால் அழைக்கப்பட்ட அதன் பணியாளர்களுக்காகவும் செபிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்."




2019-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே!
இது ஒரு இரக்கத்தின் காலம், ஒவ்வொருவரும் மற்றவரில் கருணை கொள்ளும் காலம். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, வெறுப்புகள் மற்றும் திருப்பதியற்ற காற்றுக்கள் உங்களைச் சுற்றி வீசாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அன்பையும் செபத்தையும் கொடுப்பதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். சாத்தான் சமாதானத்தையும் ஒழுங்கையும் குலைக்க முனையலாம், ஆனால் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் ஒவ்வொருவருக்காகவும் மரித்து உயிர்த்த இயேசுவில் நீங்கள் மகிழுங்கள். அவர் உங்களுக்கு நித்திய வாழ்வைக் கொடுப்பதற்காக சாவை வென்றார். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் அவரில் உயிர்த்தமைக்கு சாட்சிகளாகவும் பெருமைப்படுபவர்களாகவும் இருங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.




2019-04-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! அன்னையாக, தனது பிள்ளைகளைத் தெரிந்தவளாக, நீங்கள் எனது மகனைத் தேடுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் உண்மையை, சமாதானத்தை, மாசற்ற தூய்மையானவற்றைத் தேடுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே அன்பான இறைவன் ஊடாக அன்னையாக உங்களிடம் வருவதுடன், நீங்கள் திறந்த இதயத்துடன் செபித்து, நீங்களாகவே எனது மகனை- அவரது அன்பை, அவரது இரக்கமுள்ள இதயத்தை அறிந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறேன். எனது மகன் அனைத்தையும் அழகாகக் காணுகின்றார். அவர் அனைத்து ஆன்மாக்களிலும் நல்லதைத் தேடுகின்றார், ஆகவே எனது பிள்ளைகளே, எனது அன்பின் தூதர்களே, அவரிடம் செபிப்பதுடன், இடைவிடாது நன்றி கூறி அவரைப் போற்றுங்கள். அவர் உங்களுக்கு இறை வார்த்தைகளைக் கூறியுள்ளார், இந்த இறை வார்த்தைகள் அனைவருக்கும் மற்றும் எக்காலத்துக்கும் உரியவை. ஆகவே, எனது பிள்ளைகளே, மகிழ்வாக, பேருவையாக, ஒன்றுபட்டு மற்றும் ஒருவரோடு ஒருவர் அன்பாக இருங்கள். இதுவே, இன்றைய உலகில் உங்களுக்குத் தேவையாக உள்ளது, இதன்மூலமே நீங்கள் எனது அன்பின் தூதர்களாவீர்கள், இதன்மூலமே நீங்கள் எனது மகனுக்கு உண்மையான சாட்சிகளாவீர்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்".




2019-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இது ஒரு இரக்கத்தின் காலம். இயற்கை எவ்வாறு தனக்கு புதுவாழ்வை மீள வழங்குகின்றதோ, அதுபோன்று நீங்களும் மனம்திரும்ப அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் இறைவனிடம் தஞ்சமடையுங்கள்! எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் வெறுமையாகவும் நண்பர்கள் எவருமின்றியும் உள்ளீர்கள், ஏனென்றால் இறைவன் உங்களிடம் இருக்கவில்லை. ஆகவே செபங்கள் உங்களுக்கு வாழ்வாக அமையுமட்டும் செபியுங்கள். இறைவனைத் தேடுங்கள், அவர் உங்களை இயற்கையிலிருந்து உருவாக்கினார், அந்த இயற்கை வாழ்விற்காகப் போராடுகிறதே தவிர இறப்பிற்காக அல்ல. மக்களினங்களின் இதயங்களில் போர் நிறைந்துள்ளது, ஏனென்றால் அவர்களிடம் சமாதானம் இல்லை, எனது அன்பான பிள்ளைகளே, உங்கள் அயலாரை சகோதரராகக் கொள்ளுங்கள். இறைவனிடமும் செபத்திலும் மனம் திரும்புங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்!„




2019-02-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை ஒரு புதுவாழ்விற்காக அழைக்கிறேன். நீங்கள் எந்த வயதினர் என்பது முக்கியமானதல்ல, உங்கள் இதயத்தை இயேசுவிற்காகத் திறவுங்கள், அவர் உங்களுக்கு இவ்வேளையை இரக்கத்தின் காலமாக மாற்றியமைப்பதுடன், நீங்கள் இயற்கை போன்று இறைவனின் அன்பில் புதுப்பிறப்பு அடைவதுடன், நீங்கள் உங்கள் இதயங்களை வானகம் நோக்கியும் விண்ணரசு நோக்கியும் திறந்து கொள்வீர்களாக. நான் எப்போதும் போன்று உங்களுடன் உள்ளேன், ஏனென்றால் இறைவன் உங்களை அன்புசெய்ய என்னை அனுமதித்துள்ளார். என் அழைப்பைக் கேட்பதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்!“




2019-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று நான் அன்னையாக உங்களை மனம்திரும்ப அழைக்கிறேன். இந்தக் காலம் உங்களுக்கு எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அமைதியினதும் செபத்தினதும் காலம். ஆகவே உங்கள் இதயத்தை சூடாக்கி, விசுவாசம் எனும் விதைகளால் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள், எனது அன்பார்ந்த பிள்ளைகளே நாளுக்கு நாள் செபத்தின் தேவை அதிகமாகி வருவதை உணர்ந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கை ஒழுங்காகவும் பொறுப்புக் கூறுவதாகவும் அமையட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இந்த உலகம் நிரந்தரமில்லாதது என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வதுடன், இறைவன் அருகில் இருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள், உங்கள் அன்பு அனுபவங்கள் இறைவனுக்குச் சாட்சி பகர்வதாக அமைவதுடன் அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக மன்றாடுகின்றேன், ஆனால் நீங்கள் ஆம் என்று சொல்லாவிட்டால் என்னால் இது முடியாது. எனது அழைப்பை நீங்கள் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.




2019-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! கவலைக்குரிய விதத்தில் உங்கள் மத்தியில் பல சண்டை சச்சரவுகள், வெறுப்புகள், சொந்த விருப்புகள், சுயநலங்கள் உள்ளன. நீங்கள் இலகுவாக எனது மகனையும் அவரது வார்த்தைகளையும் அவரது அன்பையும் மறந்து விடுகின்றீர்கள். பல ஆன்மாக்களில் நம்பிக்கை அழிந்து விடுவதுடன், இதயம் உலகப் பொருட்களின் மாயையில் அமிழ்ந்து விடுகின்றது. ஆனால் தற்போதும் நம்பிக்கை மற்றும் அன்பைக் காட்டுவது மற்றும் எனது மகனை எவ்வாறு நெருங்கி வருவது எனவும், களைப்படையாமல் எனது மகனைத் தேடுவதுடன்- என்னையும் நீங்கள் தேடிக்கொள்கின்றீர்கள் என அன்னையின் இதயத்தைக் கொண்ட எனக்குத் தெரியும். வேதனைகள் மற்றும் துன்பங்களை பணிவுடன் ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களுக்கு அமைதியான வகையில் நம்பிக்கை கிடைப்பதுடன் அனைத்திலும் மேலாக விசுவாசத்தை பரப்புகின்றனர். இவர்களே எனது அன்பின் தூதர்கள், எனது பிள்ளைகளே, நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன், எனது மகன் எவ்வேளையிலும் நீங்கள் செபித்துக்கொண்டு இருப்பதை விரும்பவில்லை மாறாக உங்கள் இரக்கச்செயல்களால் மற்றவர்களை மகிழ்விக்கவே விரும்புகிறார். உங்கள் செபங்களால் நம்பிக்கை வளரவேண்டும் என விரும்புகிறார். அவர் விரும்புவது ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும் என்பதையே. இதுவே நித்திய வாழ்விற்கான வழியாகும். எனது பிள்ளைகளே! எனது மகன் பார்க்க விரும்பியவர்களுக்கும் அதைப் பெற விரும்பியவர்களுக்கும் ஒளியைக் கொண்டுவந்தார் என்பதை மறவாதீர்கள். நீங்களே உண்மையின், சமாதானத்தின் மற்றும் அன்பின் ஒளி. நான் அன்னையாக உங்களை வழிநடத்துவதுடன், நீங்கள் எனது மகனிடம் செபிக்கவும், எனது மகனை அன்புசெய்யவும், உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் எனது மகனை நோக்கியதாகவும் அவர் பெயரிலும் இருக்கட்டும். இதனால் எனது இதயம் நிறைந்திருக்கும். நான் உங்களுக்கு நன்றிகூறுகிறேன்.




2018-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களை எனது மகன் இயேசுவிடம் எடுத்துச் செல்கிறேன், அவரே சமாதானத்தின் அரசர். அவர் உங்களுக்கு சமாதானத்தைத் தருவது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் மகிழ்வையும் பணிவையும் தருவார். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக இந்த இரக்கத்தின் காலத்தில் செபித்துக்கொள்வேன். நான் உங்களுடன் இருக்கும் வேளையில் எனது அன்பின் அடையாளமாக உங்களைப் பாதுகாப்பதுடன் நித்திய வாழ்விற்கு வழி நடத்துகிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.




2018-11-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இது இரக்கத்தின் மற்றும் செபத்தின் காலம், காத்திருக்கும் மற்றும் அன்பளிப்பு வழங்கும் காலம். இறைவன் தன்னை உங்களுக்கு வழங்குகிறார், அதன்மூலம் நாங்கள் அனைத்திலும் மேலாக அவரை நேசிக்கின்றோம். ஆகவே, அன்பான பிள்ளைகளே, உங்கள் இதயங்கள் மற்றும் குடும்பங்களைத் திறவுங்கள், அதன்மூலம் இந்த காத்திருப்பு மற்றும் செபம் அன்பாக உருவெடுப்பதுடன் எல்லாவற்றிற்கும் மேலாக அதை வழங்குவதில் தங்கியிருக்கும். நான் உங்களுடன் உள்ளேன், அன்பான பிள்ளைகளே, உங்களை ஆயத்தமாக வைத்திருங்கள், நல்லவற்றைக் கைவிடாமல், நல்லவற்றை விட்டுவிடாமல் இருங்கள், ஏனென்றால் அதன் பலனை தொடர்ந்தும் காணவேண்டும் என்பதுடன் அவற்றைக் கேட்கவும் வேண்டும். ஆகவே இதுகுறித்து சாத்தான் கோபமடைவதுடன் உங்கள் செபங்களைக் குழப்ப அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்துக் கொள்ளும். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்."




2018-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நான் எனது பிள்ளைகளைப் பார்க்கும்போது, அவர்கள் உண்மைக்காக வாழாமல் தம்மை மறைத்துக்கொள்வதுடன், உணர்வுடனும் செயல்முறையிலும் செபிக்காததால் எனது தாய்க்குரிய இதயம் வேதனைப்படுகிறது. நான் எனது மகனிடம், அதிகமான எனது பிள்ளைகள் விசுவாசம் அற்று உள்ளனர், அவர்களுக்கு அவரை -எனது மகனைத்- தெரியாது உள்ளனர் எனக் கூறும்போது நான் மிகவும் கவலையடைகிறேன். ஆகவே நான் உங்களை அழைக்கிறேன், எனது அன்பான தூதர்களே, மனித இதயங்களின் அடித்தளங்களைக் காண்பதற்கு முயலுங்கள், அங்கு நீங்கள் நிச்சயமாக ஒரு சிறிய மாற்றத்திற்கான பெறுமதிகளைக் கண்டுகொள்வர்கள். இந்த வழியில் பார்ப்பது, வானகத் தந்தையின் இரக்கத்தின் பார்வையாக அமையும். தீமைகளிலும் நன்மையைத் தேடுவதுடன், மற்றவர்களைத் தீர்ப்பிடாது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயலுங்கள், இதுவே எனது மகன் உங்களிடம் கேட்டுக்கொள்வது. அவர் சொல்வதைக் கேட்குமாறு, அன்னையாக நான் உங்களை அழைக்கிறேன். எனது பிள்ளைகளே, உடல் மற்றும் அன்பை எடுத்துச் செல்வது மற்றும் அது குறித்த செயற்பாடுகளிலும் பார்க்க ஆன்மா முக்கியமானது, இது அனைத்துத் தடைகளையும் கடந்து செல்லும். எனது மகன் உங்களில் வாழ்கிறார் மற்றும் அவர் உங்களை அன்பு செய்கிறார் என்பதை மறக்க வேண்டாம். அவரே உலகின் ஒளி அத்துடன் அவர் முன்னால் எவரும் எதுவும் முடிவில்லாத பிரகாசமாக நிற்க முடியாது. ஆகவே எனது அன்பான தூதர்களே, நீங்கள் உண்மைக்குச் சாட்சிகூறப் பயப்படாதீர்கள். எனது மகனை இதுவரை கண்டறிந்திராவர்களுக்கு அவர் குறித்த உண்மையை எடுத்துரைக்க மறவாதீர்கள். நான் உங்களுடன் இருப்பதுடன், உங்களுக்கு உற்சாகம் அளிப்பேன். சாட்சியமான அன்பு ஒருபோதும் முடிவதில்லை, ஏனென்றால் அது வானகத் தந்தையிடமிருந்த வருகின்றது, அது முடிவில்லாதது, மற்றும் எப்போதும் எனது அனைத்துப் பிள்ளைகளுக்கும் வழங்கப்படுகின்றது. எனது மகனின் ஆவி உங்களோடு இருப்பதாக. மீண்டும் நான் உங்களை அழைக்கிறேன், எனது பிள்ளைகளே, உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள், அவர்களை எனது மகனின் அன்பு வழிநடத்தட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்"




2018-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! உங்களுக்கு அதிகளவு இரக்கம் உள்ளது ஏனென்றால் நீங்கள் நான் வழங்கும் தூதுரைகள் மூலம் ஒரு புதுவாழ்விற்கு அழைக்கப்படுகின்றீhகள். எனது அன்பான பிள்ளைகளே, இது ஒரு இரக்கத்தின் காலம், உங்களையும் எதிர்கால சந்ததிகளையும் மனம்மாறுவதற்கு அழைக்கும் காலம். ஆகவே உங்களை அழைக்கிறேன் எனது அன்பான பிள்ளைகளே, மேலும் செபிப்பதுடன் உங்கள் இதயங்களை எனது மகன் இயேசுவுக்காகத் திறந்து கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருந்து உங்களை அன்பு செய்வதுடன் அனைவரையும் எனது தாய்க்குரிய பாசத்துடன் ஆசீர்வதிக்கிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்."




2018-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! களைப்படையாமல் உற்சாகமாக இருக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன் ஏனென்றால் ஒரு சிறிய நன்மைதானும், ஒரு சிறிய அன்பின் அடையாளம்தானும் சாத்தானை வெற்றி கொள்ளும் என்பதை நாம் கண்டுகொள்ளலாம். எனது பிள்ளைகளே, நான் கூறுவதைக் கேளுங்கள், இதன்மூலம் நன்மை வெற்றியடைவதுடன், எனது மகனின் அன்பை அறிந்து கொள்ள நேரிடலாம். இது ஒரு பெரிய மகிழ்வாகும் - எவர் ஆன்மாவை விரும்புகிறார்களோ, எவர் உங்களுக்காக தம்மை வழங்குகின்றார்களோ மற்றும் எப்பொழுதும் புதிதாக நற்கருணையை உட்கொள்கின்றார்களோ அவர்களை எனது மகனின் கைகள் அரவணைப்பதுடன், அவரிடமிருந்து நித்திய வாழ்விற்கான வார்த்தைகளைப் பெற்றுக்கொள்கின்றார்கள். அவரது அன்பைக் கண்டறிந்து கொள்வது மற்றும் அவரது பாதச்சுவடுகளைப் பின்தொடர்வது என்பதன் அர்த்தம், ஆன்மீகத்தில் நிறைவாக இருப்பது என்பதாகும். இதுவே நிறைவானது, இது சிறப்பான உணர்வுகளை வழங்குவதுடன், அன்பையும் நன்மையையும் எங்கும் காணச்செய்கின்றது. எனது அன்புத் தூதர்களே, எனது பிள்ளைகளே, சூரியக் கதிர்கள் போன்றிருங்கள், அது எனது மகனின் அன்பை சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும் வழங்கி சூடாக்கட்டும். எனது பிள்ளைகளே, உலகிற்கு அன்புத் தூதர்கள் தேவைப்படுகிறார்கள், உலகிற்கு அதிகம் செபங்கள் தேவைப்படுகிறது, ஆனால் செபங்கள் உதடுகளால் முணுமணுக்கப்படாமல் இதயத்தாலும் ஆன்மாவாலும் சொல்லப்பட வேண்டும். எனது பிள்ளைகளே, உங்கள் செபங்கள், உங்கள் வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் அனைத்தும் உங்களுக்காக வானகத்தின் கதவுகளைத் திறக்கவோ அல்லது மூடவோ செய்கின்றன. எனது மகன் உங்களுக்கான வழிகளைக் காட்டியதுடன் உங்களுக்கு நம்பிக்கையை வழங்கியுள்ளார், நான் உங்களுக்கு ஆறுதலளிப்பதுடன் உற்சாகப்படுத்துகின்றேன். ஏனென்றால், எனது பிள்ளைகளே, நான் வேதனைகளை அனுபவித்தவள், ஆனால் எனக்கு விசுவாசமும் நம்பிக்கையும் இருந்தது. அதனால் இப்போது எனது மகனின் இராச்சியத்தில் வாழும் பரிசைப் பெற்றுள்ளேன். ஆகவே, நான் சொல்வதைக் கேளுங்கள், களைப்படையாமல் உற்சாகமாக இருங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2018-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! இயற்கையும் உங்களை அன்புசெய்வதற்கு எடுத்துக்காட்டாக பழங்களைத் தருகின்றது. நீங்களும், எனது வருகையின் மூலம் அதிகளவு வெகுமதிகளையும் ஆசீரையும் பெற்றுள்ளீர்கள். எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் எனது அழைப்பிற்கு எந்த அளவில் பதிலளித்துள்ளீர்கள் என்பதை இறைவன் அறிவார். நான் உங்களை அழைக்கிறேன்: இன்னும் தாமதமாகவில்லை, நீங்கள் தூயவற்றிற்கும் இறைவனின் இரக்கத்திற்கும் சமாதானத்திற்கும் முடிவெடுங்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பதுடன், நீங்கள் அவரில் நம்பிக்கை வைத்தால் அவர் உங்களுக்கு நூறு மடங்காக வழங்குவார். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன்„




2018-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைளே! எனது வார்த்தைகள் எளிமையானவை, ஆனால் அவை அன்னையின் அன்பும் அரவணைப்பும் நிரம்பியவை. எனது பிள்ளைகளே, இருளின் நிழல் மற்றும் ஏமாற்றுதல்கள் உங்களுக்கு அதிகரிக்கலாம், ஆனால் ஒளியாக மற்றும் உண்மையாக வாழுமாறு நான் உங்களை எனது மகனின் பெயரால் கேட்டுக்கொள்கிறேன். அவரால் மட்டுமே ஏமாற்றங்கள் மற்றும் துன்பங்களை சமாதானமாக மற்றும் இன்பகரமாக மாற்றமுடியும், அவரால் மட்டுமே கடுமையான வேதனைகளுக்கு நம்பிக்கை தரமுடியும். எனது மகனே உலகின் வாழ்வாகும். நீங்கள் எவ்வளவு அதிகமாக அவரை கண்டறிந்து கொள்கின்றீர்களோ, எவ்வளவு அதிகமாக அவருக்கு அருகில் வருகின்றீர்களோ, அவ்வளவு அதிகமாக அவரை அன்பு செய்வீர்கள், ஏனென்றால் எனது மகன் அன்பானவர். அன்பு அனைத்தையும் மாற்றியமைக்கும், அனைத்தையும் அழகாக்கும், அன்பில்லாமல் போனால் அவை உங்களுக்கு அர்த்தமற்றதாகிவிடும். ஆகவே நான் உங்களுக்கு மீண்டும் கூறுகின்றேன், நீங்கள் உள்ளத்தால் வளர்ச்சிபெற விரும்பினால், நீங்கள் அதிகம் அன்பு செய்ய வேண்டும். எனது அன்பான தூதர்களே, இது எப்பொழுதும் இலகுவாக இருப்பதில்லை என்பதை நான் அறிவேன், அத்துடன் வேதனையான பாதைகள் உள வளர்ச்சியைத் தருவதுடன், எனது மகனில் நம்பிக்கை கொள்ள வைக்கும் பாதைக்கு இட்டுச்செல்கின்றது. எனது பிள்ளைகளே, செபியுங்கள், எனது மகனை நினைவிற் கொள்ளுங்கள். நாளின் ஒவ்வொரு வினாடியிலும் உங்கள் ஆன்மாவை அவரிடம் எழுப்புங்கள், உங்கள் செபங்களை அழகான தோட்டத்தில் பறிக்கும் பூக்களைப் போன்று நான் எடுத்து எனது மகனிடம் ஒப்படைப்பேன். நீங்கள் உண்மையில் எனது அன்பின் தூதர்களாக வாழுங்கள், எனது மகனின் அன்பை அனைவரிடமும் பரப்புங்கள், அழகிய தோட்டத்தில் உள்ள மலர்கள் போன்று வாழுங்கள். உங்கள் மேயப்;பர்கள் மனநிறைவுள்ள தந்தையர்களாக வாழவும் அனைத்து மனிதரையும் அன்பால் ஆட்கொள்ளவும் உங்கள் செபத்தால் உதவுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."




2018-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இது இரக்கத்தின் காலம். எனது அன்பான பிள்ளைகளே, அதிகம் செபியுங்கள், கதைப்பதைக் குறையுங்கள் அத்துடன் நீங்கள் மனம்திரும்பும் வழியில் செல்ல இறைவனிடம் உங்களை ஒப்படையுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் தாய்க்குரிய பாசத்துடன் உங்களை அன்பு செய்கிறேன். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.“




2018-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! கடவுள் உங்களை அவரிடம் வழிநடத்துமாறு என்னை அழைத்துள்ளார், ஏனென்றால் அவரே உங்கள் பலமாகும். ஆகவே நான் உங்களை அழைக்கிறேன், அவரிடம் மன்றாடுவதுடன் அவரில் நம்பிக்கை கொள்ளுங்கள், அவரே அனைத்துத் தீமைகளில் இருந்தும் உங்களை விடுவிப்பார், அத்துடன் அவரால் அழைக்கப்பட்டுள்ள உங்கள் அனைவரின் ஆன்மாக்களுக்கும் இரக்கத்தையும் மகிழ்வையும் தருவார். எனது அன்பான பிள்ளைகளே, வானக வாழ்வை இவ் உலகில் வாழுங்கள், அன்மூலம் நீங்கள் சிறப்படைந்து, இறைவனின் கட்டளைகளை மதித்து வாழுவதுடன், உங்கள் வழிகளெல்லாம் ஒளிமயமாகட்டும். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் அனைவரையும் தாயன்புடன் அன்பு செய்கிறேன். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்.




2018-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நான் உங்களுக்கு அன்னையாக இருக்கிறேன், ஆகவே அஞ்சாதீர்கள், நான் உங்கள் மன்றாட்டுக்களைக் கேட்கின்றேன் நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் ஆகவேதான் நான் எனது மகனிடம் உங்களுக்காகப் பரிந்துபேசுகிறேன் - எனது மகன், வானகத் தந்தையுடனும் தேறுதல் தரும் தூய ஆவியுடனும் ஒன்றித்துள்ளார், எனது மகன் ஆன்மாக்களை நிறைவாழ்விற்கு இட்டுச்செல்வதுடன் சமாதானத்தினதும் ஒளியினதும் நிறைவைக் கொண்டுள்ளார். எனது பிள்ளைகளே, உங்களுக்கு எதையும் தேர்ந்து கொள்வதற்கு சுதந்திரம் தரப்பட்டுள்ளது, ஆனால் அன்னையாக நான் உங்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், சுதந்திரமாக நல்லவற்றைத் தேர்ந்துகொள்ளுங்கள். நீங்கள், சாதாரணமான மற்றும் தூய்மையான இதயத்துடன் உண்மை எதுவென்று உணர்ந்து கொள்ளுங்கள் - சிலவேளைகளில் நீங்கள் வார்த்தைகளை விளங்கிக்கொள்ளாதுவிடினும். எனது பிள்ளைகளே, பிழையானவற்றைப் பின்பற்றி உண்மையையும் உண்மையான வாழ்வையும் இழந்துவிடாதீர்கள். உண்மை நிறைந்த வாழ்வு வானகப் பேரின்பத்தில் உங்கள் இதயத்தை நுழையச் செய்வதுடன், சமாதானத்தையும் அன்பையும் வழங்கிக்கொள்ளும். எனது பிள்ளைகளே, நீங்கள் சொந்தமாகத் தேடாதுவிடின் எனது மகனுக்குத் தூரத்தில் சென்றுவிடுவீர்கள். உங்களது அயலாரோடு அன்புடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்ளுங்கள். அயலாருக்காகச் செபியுங்கள். எனது மகனில் வாழ்வதுடன் அவரை அன்பு செய்யுங்கள், இதனால் அவர் உங்களிலும், உங்களுக்காகவும் ஆசீர் வழங்குவார். எனது பிள்ளைகளே, விடாது எனது மகனை அளவுகடந்து அன்பு செய்யுங்கள், இதனால் நீங்கள் உண்மையான நிறைவாழ்வைப் பெறுவீர்கள், அதுவே முடிவில்லாததாக இருக்கும். எனது அன்பின் தூதர்களே நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."




2018-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இந்த நாளை இறைவன் எனக்குத் தந்து, அவர் சார்பில் உங்கள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் மனம்திரும்பியதற்காக மற்றும் எனது செய்தியைப் பெற்றுக்கொள்வதற்காக அத்துடன் மனம்திரும்புவதற்கும் தூயவர்களாவதற்கும் தயாராக இருப்பதற்காக நன்றி கூறுகிறேன். அன்பான பிள்ளைகளே! நீங்கள் மகிழுங்கள். இறைவன் இரக்கமுடைய இதயமுள்ளவராக இருப்பதுடன் உங்கள் அனைவரையும் அளவுகடந்து அன்பு செய்கிறார் அத்துடன் நான் இங்கு வருவதன் ஊடாக உங்களை இஙகு அழைத்து வந்து உங்களுக்கு சுகமளிக்கிறார். நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்வதுடன் உங்களை எனது மகனிடம் அர்ப்பணிக்கிறேன். இதன்மூலம் அவர் உங்களுக்கு சமாதானத்தை வழங்குவார். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்„




2018-06-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! உங்கள் இலகுவான இதயத்தோடு எனது வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் உங்களை அழைக்கிறேன், உங்கள் தாயாக இருந்து நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் முழுமையான ஒளியாக, தூய்மையானவர்களாக, எனது மகனின் தனித்துவமான அன்பில் நிலைத்திருங்கள். ஒரு மகிழ்ச்சி, ஒரு ஒளி, போன்றவைகளை மனிதரின் வார்த்தைகளில் விளங்கப்படுத்த முடியாவிட்டாலும், இவை உங்கள் ஆன்மாக்குள் புகுந்து எனது மகனின் சமாதானத்தையும் அன்பையும் கொடுக்கட்டும். இதையே நான் அனைத்துப் பிள்ளைகளுக்கும் விரும்புகிறேன். ஆகவே, எனது அன்பான தூதர்களே, அன்பு செய்வது மற்றும் மன்னிப்பதை நீங்கள் அறிந்தவர்கள், நீங்கள் தீர்ப்பளிக்காதீர்கள், நீங்கள் அனைவருக்கும் முன்மாதிரிகையாக இருங்கள். பிறருக்கு உங்கள் வாழ்வின் ஊடாக உண்மையைக் காட்டுங்கள். அவர்களுக்கு அன்பைக் காட்டுங்கள், அந்த அன்பு பிரச்சினைகளைத் தீர்ப்பவைகளாக இருக்கட்டும், அத்துடன் எனது அனைத்துப் பிள்ளைகளும் அன்பின் தாகத்துடன் வாழுங்கள். நீங்கள் அன்பில் ஒன்றித்திருப்பது எனக்கும் எனது மகனுக்கும் நீங்கள் வழங்கும் வெகுமதியாகும். ஆனால், எனது பிள்ளைகளே, கவனத்திற் கொள்ளுங்கள், அன்பு செய்வது என்பதன் அர்த்தம், பிறருக்கு நல்லது செய்ய நினைப்பது மற்றும் பிறரின் ஆன்மாவை மனந்திருப்ப விரும்புவதாகும். என்னைச் சுற்றி நீங்கள் கூடியுள்ளதைப் பார்க்கும்போது, எனது இதயம் கவலையடைகிறது, ஏனென்றால் இங்கு நான் குறைவான சகோதர அன்பு, இரக்கத்தைப் பார்க்கிறேன். எனது பிள்ளைகளே, எனது மகன் நற்கருணை வடிவில் உங்கள் மத்தியில் உயிருடன் உள்ளார், அவரது வார்த்தைகள் அதை விளங்கிக்கொள்ள உதவும், ஏனென்றால் அவரது வார்த்தைகள் வாழ்வாகும், அவரது வார்த்தைகள் ஆன்மாவை சுவாசிக்கச் செய்கின்றது, அவரது வார்த்தைகள் அன்பை வெளிப்படுத்தச் செய்கின்றது. அன்பான பிள்ளைகளே, நன்மை செய்யும் உங்கள் தாயாக இருந்து மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், உங்கள் மேய்ப்பர்களை அன்ப செய்யுங்கள், அவர்களுக்காகச் செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."




2018-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இந்த சமாதானம் அற்ற காலத்தில்„ மேலும் கடவுளில் நம்பிக்கை வைக்குமாறு நான் உங்களை வேண்டுகிறேன்„ அவரே வானகத் தந்தையாக இருப்பதுடன் உங்களை அவரிடம் இட்டுச் செல்வதற்காக என்னை அனுப்பிவைத்தார். நீங்கள்„ உங்கள் முழுமனதுடன் உங்கள் இதயத்தைத் திறவுங்கள்„ இதையே அவர் உங்களுக்குத் தரவிரும்புகிறார்„ இதய அமைதியுடன் தனது வாழ்வை உங்களுக்காக வழங்கிய எனது மகன் இயேசுவிடம் மன்றாடுங்கள்„ அவர் உங்களை நித்திய வாழ்விற்கு இட்டுச்சசெல்ல விரும்புகிறார். நாளாந்த வாழ்வில் இறைவனைச் சந்திப்பதில் மகிழ்வடையுங்கள். ஆகவே உங்களை நான் வேண்டுகிறேன்: செபத்தை விட்டுவிடாதீர்கள்„ அதுவே புதுமைகளை ஏற்படுத்தும். நன்றி„ நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு."




2018-04-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! வானகத் தந்தையின் அளப்பெரிய அன்பால் அன்னையான நான் உங்கள் அருகிலும், எனது அன்பின் தூதர்களான நீங்கள் எனது அருகிலும், இடைவிடாது என்னைச் சுற்றிக் கூடிவருகின்றீர்கள். எனது பிள்ளைகளே, நீங்கள் எனது மகனிடம் முழுவதுமாக செபத்தில் இணைந்து கொள்ளுங்கள், இதனூடாக நீங்கள் அவரை அன்பு செய்வதிலும் பார்க்க அவர் உங்களை அன்பு செய்வார், இதனால் எனது மகனை அறியாதவர்களும் அவரை அறிந்து கொள்ள விரும்புவார்கள். எனது அன்பான திருத்தூதர்களே, நீங்கள் அதிகம் செபிப்பதுடன் உங்கள் இதயத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், இதன்மூலம் நீங்கள் முதலில் எனது மகன் செல்லும் வழியில் நடப்பதுடன், நீங்கள் நீதிமான்களாக இருந்து, எனது மகனின் நீதியில் ஒன்றிணைந்து கொள்வீர்கள். எனது பிள்ளைகளே, எனது தூதர்களான நீங்கள், எனது மகனிடமிருந்து வரும் ஒன்றிப்பில் இணைந்து கொள்ளுங்கள், எனது பிள்ளைகளே எனது மகனை அறியாதவர்களும் அவரை அறிந்து அவரில் ஒன்றித்திடும் வாழ்வின் வழியைத் தேடட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்."




2018-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இருள், ஒளிக்கு எதிராகப் போராடும் இந்த இரக்கத்தின் காலத்தில் என்னுடன் சேர்ந்து செபிக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். செபியுங்கள் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, ஒப்புரவு அருட்சாதனம் பெற்று இரக்கம் நிறைந்த புது வாழ்வை ஆரம்பியுங்கள். நீங்கள் இறைவனில் நம்பிக்கை கொள்ளுங்கள், அவர் உங்களைத் தூயவழியில் நடத்திச் செல்வார், சிலுவை உங்களுக்கு வெற்றியின் சின்னமாக இருப்பதுடன் நம்பிக்கை வழங்கட்டும். நீங்கள் திருமுழுக்குப் பெற்றிருப்பது குறித்துப் பெருமிதம் கொள்ளுங்கள், அத்துடன் இறைவன் திட்டத்தில் நீங்களும் ஒரு பகுதியாக இருப்பது குறித்து உங்கள் இதயத்தால் நன்றி கூறுங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றிகூறுகிறேன்!“




2018-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே, வானகத் தந்தை எனக்காற்றிய மேன்மையான செயல்கள் போன்று யார் அவரை மென்மையாக அன்பு செய்கின்றார்களோ, யார் அவருக்கு நம்பிக்கையுடன் மற்றும் பணிவுடன் சேவைபுரிகின்றார்களோ அவர்களையும் மேன்மைப்படுத்துவார். எனது பிள்ளைகளே, வானகத்தந்தை உங்களை அன்பு செய்கின்றார், அவரின் இந்த அன்பின் ஊடாகவே நான் உங்களுடன் இங்கு உள்ளேன். அவர் உங்களுடன் பேசுகிறார், ஏன் நீங்கள் அந்த அடையாளங்களைக் காண மறுக்கின்றீர்கள்? அவரில் அனைத்தும் இலகுவாகும். அவரை நம்பி வாழும்போது வேதனைகளும் மறைந்துபோகும். நம்பிக்கைதான் வேதனைகளின்போது உதவுகின்றது அதேவேளை நம்பிக்கை இல்லாதபோது வேதனைகள் சந்தேககத்தைத் தோற்றுவிக்கின்றன. வேதனைகளை கடவுளிடம் ஒப்படைக்கும்போது அவை மறைந்துவிடுகின்றன. எனது மகன் தனது வேதனைகள் நிறைந்த பாடுகள் ஊடாக உலகை மீட்கவில்லையா? நான் அவரது அன்னையாக வேதனைகளிலும் துன்பங்களிலும் இருந்ததைப் போன்று உங்கள் அனைவருடனும் இருக்கிறேன். எனது பிள்ளைகளே, நான் உங்களுடன் வாழ்வில், வேதனையில், துன்பங்களில், மகிழ்வில் மற்றும் அன்பில் இருந்து வருகிறேன். ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள். இந்த நம்பிக்கையே, உங்களுக்கு வாழ்வு உள்ளது என நம்பிக்கை கொள்ள வைக்கட்டும். எனது பிள்ளைகளே, நான் உங்களுடன் பேசுகிறேன், எனது குரல் உங்கள் ஆன்மாவுடன் பேசுகிறது, எனது இதயம் உங்கள் இதயத்துடன் பேசுகின்றது. ஓ, எனது அன்பின் தூதர்களே, நீங்கள் எவ்வளவு அதிகமாக எனது இதயத்தை நேசிக்கின்றீர்கள். எவ்வளவு விடயங்களை நான் உங்களுக்குக் கற்றுத் தரவேண்டியுள்ளது. நீங்கள் முழுமையானவர்களாக இருப்பதற்கு உங்கள் உடல் மற்றும் ஆன்மாவை உங்களுடன் ஒன்றிணைத்தால் மட்டுமே சாத்தியமாகும், அதையே அன்னையாகிய எனது இதயமும் மிகவும் விரும்புகின்றது. எனது பிள்ளைகளாகிய உங்களிடம் நான் வேண்டிக்கொள்வது, திருச்சபைக்காகவும் அதன் பணியாளர்களுக்காகவும் உங்கள் மேய்ப்பர்களுக்காகவும் செபியுங்கள், -திருச்சபை எனது மகன் விரும்பியது போன்று இருக்கட்டும்- தெளிவான கிணற்று நீரைப் போலவும் நிறைந்த அன்புடனும் இருக்கட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.“




2018-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில் உங்கள் மனதைத் திறந்து கொள்ளுமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்பதுடன் கடவுள் வழங்கிய கற்பனைகளின்படி வாழுமாறு வேண்டுகிறேன், இதன்மூலம் அவை உங்களை அருட்சாதனங்கள் ஊடாக மனம்திரும்புதலுக்கு இட்டுச்செல்லட்டும். உலக மாயை மற்றும் உலகினது வேடிக்கைகள் உங்களை சோதனைக்கு உள்ளாக்கலாம், ஆனால் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, கடவுளின் படைப்புகளைப் பாருங்கள், அவர் உங்களுக்கு அழகானவற்றையும் சிறப்பானவற்றையும் தந்துள்ளார், அன்பான பிள்ளைகளே, அனைத்திலும் மேலாக கடவுளை அன்பு செய்யுங்கள், அவர் உங்களை மீட்பின் வழியில் நடத்திச்செல்வார். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன்.




2018-02-02 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! உங்களில் எவர் எனது மகனை அன்பு செய்கின்றார்களோ, உங்களில் எவரை நான் அளவுக்கதிகமாக அன்பு செய்கின்றேனோ, அவர்கள் சுயநலத்தில் வாழாது, தமது சொந்த அன்பால் உலகை ஆள்வார்கள். அன்பும் நன்மைகளும் மறைந்திருக்க அனுமதிக்க முடியாது. அன்பு செய்யப்படும் நீங்கள், எனது மகனின் அன்பை கண்டறிந்தவர்கள், மறக்காதீர்கள், அன்பு செய்யப்படுவது என்பது அன்பைக் கொடுப்பதாகும். எனது பிள்ளைகளே, நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுடன் சமாதானத்தைப் பரப்புவீர்கள், உங்கள் ஆன்மா மகிழ்ச்சியால் பூரிப்படையும். இந்த ஆன்மாவே எனது மகன். நீங்கள் உங்களை நம்பிக்கைக்கும் அன்புக்கும் உட்படுத்தினால், நீங்கள் அயலாருக்கு நன்மை செய்தால், உங்கள் ஆன்மா குறித்து எனது மகன் சிரித்துக்கொள்வார். எனது அன்பின் திருத்தூதர்களே, உங்கள் அன்னையாக உங்களை நான் கேட்டுக்கொள்கின்றேன், என்னைச் சுற்றிக் கூடியிருக்கும் உங்களை, அன்பு மற்றும் நம்பிக்கையின் வழியில் நடத்த நான் விரும்புகின்றேன், உலகிற்கு ஒளியேற்றும் வழியில் நடத்திச் செல்ல விரும்புகிறேன். நம்பிக்கைக்காகவே நான் இங்கு வந்துள்ளேன், ஏனென்றால் நான் அன்னையாகிய எனது ஆசீரையும், நம்பிக்கையையும் சக்தியையும் உங்களது பாதைகளில் தர விரும்புகிறேன் - ஏனென்றால் எனது மகனிடம் செல்லும் பாதை இலகுவானதல்ல. இது அதிகமானவற்றை துறந்துகொள்வது, விட்டுக்கொடுப்பது, இழந்துகொள்வது, மன்னிப்பது மற்றும் அதிகமாக அன்பு செய்வதாகும், இருப்பினும் இந்த வழி சமாதானத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இட்டுச்செல்வது. எனது பிள்ளைகளே, பொய்க் குரல்களையும், மாயைப் பேச்சுகளையும் நம்ப வேண்டாம். எனது பிள்ளைகளே நீங்கள் இறைவார்த்தைக்கு செவிமடுங்கள். நான் அளவுக்கதிகமான அன்போடு உங்களைப் பார்ப்பதுடன், இறைவனின் இரக்கத்தின் ஊடாக நான் உங்களுக்கு சாட்சியாக உள்ளேன். எனது பிள்ளைகளே, என்னோடு வாருங்கள். உங்கள் ஆன்மா மகிழ்ச்சியால் துள்ளட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“




2018-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இந்தக் காலத்தை உங்கள் செபத்தின் காலமாகக் கொள்ளுங்கள், இதன்மூலம் தூயஆவியானவரின் வல்லமை உங்கள்மேல் இறங்குவதுடன் அது உங்களை மனம் திருப்பட்டும். உங்கள் இதயத்தைத் திறப்பதுடன் விவிலியத்தை வாசியுங்கள், இதன்மூலம் நீங்கள் அதனால் ஏற்படும் பலனால் இறைவனுக்கு அண்மையாக வருவீர்கள். எனது அன்பான பிள்ளைகளே, இறைவனையும் அவருக்குரியவற்றையும் தேடுவதுடன், உலகை இந்த உலக மாயைகளை விரும்புபவர்களுக்கு விட்டுவிடுங்கள், ஏனென்றால் சாத்தான் சாம்பலிலும் பாவத்திலுமிருந்து உங்களை கவர்ந்து கொள்கிறான். ஆகவே தூயவற்றையும் வானகத்திற்கு உகந்தவற்றையும் தேடிக்கொள்ளுங்கள். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.“




2018-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

”அன்பான பிள்ளைகளே! எப்போது உலகில் அன்பு மறைந்து செல்ல ஆரம்பிக்கின்றதோ, எப்போது மீட்பின் வழியைக் காணமுடியாமல் போகின்றதோ, அன்னையாகிய நான் உண்மையான நம்பிக்கையைக் கொடுத்து உதவுவதற்கு உங்களிடம் வருகின்றேன். -அன்பு செய்து வாழ்பவர்களையும் பிறரையும்- உண்மையான அன்பில் வாழ்கின்றார்களா என்பதைக் கண்டறிந்து கொள்கின்றேன். அன்னையாகிய நான், நீங்கள் ஒருவர் ஒருவரை அன்பு செய்து, நல்லவர்களாக, தூயவர்களாக இருப்பதை விரும்புகிறேன், நீங்கள் நீதிமான்களாக, அன்புசெய்பவர்களாக இருப்பதை விரும்புகிறேன். எனது பிள்ளைகளே, உங்கள் ஆன்மாவில், தூய்மையில், சிறுவர்களாக மகிழுங்கள். எனது மகன் எப்பொழுதும் தான் தூய இதயங்களை அன்பு செய்வதாகக் கூறினார், தூய இதயங்கள் எப்பொழுதும் இளமையானதும் மகிழ்ச்சி நிறைந்ததுமாகும். எனது மகன் உங்களுக்கு மன்னிக்குமாறும் ஒருவர் ஒருவரை அன்பு செய்யுமாறும் கூறினார். இது எப்போதும் இலகுவானதல்ல என்பது எனக்குத் தெரியும். துன்பங்கள் உங்களை ஈடேற்றத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் இயலுமானவரை ஆன்மீகத்தில் வளர்ச்சியடைவதற்கு, நீங்கள் கட்டாயமாக கீழ்படிவானவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் மன்னித்து அன்பு செய்யவேண்டும். உலகில் எனது பிள்ளைகளில் பலருக்கு எனது மகனைத் தெரியவில்லை, அவர்கள் அவரை அன்பு செய்யவில்லை, ஆனால் நீங்கள் எனது மகனை அன்பு செய்கின்றீர்கள், நீங்கள் அவரை உங்கள் இதயத்தில் காவிச் செல்கின்றீர்கள், செபியுங்கள், செபியுங்கள் செபத்தால் எனது மகன் உங்கள் பக்கமாக இருந்து கொள்வார். உங்கள் ஆன்மா அவரின் ஆவியை சுவாசித்துக் கொள்ளும். நான் உங்களுடன் இருப்பதுடன் சிறிய மற்றும் பெரிய விடயங்கள் குறித்துக் கதைத்துக் கொள்வேன். நான் உங்களுடன் எனது மகன் குறித்து, உண்மையான அன்பு குறித்து, கதைப்பதில் ஒருபோதும் களைப்படைவதில்லை. ஆகவே, எனது பிள்ளைகளே, உங்கள் இதயத்தை எனக்காகத் திறவுங்கள். அன்னையாக உங்களை வழிநடத்த என்னை அனுமதியுங்கள். எனது மகனுக்கும் எனக்கும் அன்பின் அன்பின் தூதர்களாக நீங்கள் இருந்து கொள்ளுங்கள். அன்னையாக நான், உங்களை வழிநடத்த எனது மகனால் அழைக்கப்பட்டவர்களை மறந்துவிட வேண்டாம் என உங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன். அவர்களையும் உங்கள் இதயத்தில் தாங்கி அவர்களுக்காக செபித்துக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.„




2017-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் எனது மகன் இயேசுவை உங்களுக்கு எடுத்து வருகின்றேன், இதன்மூலம் அவர் உங்களுக்குத் தனது சமாதானத்தையும் ஆசீரையும் வழங்குவார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் பெற்றுக்கொண்டஇரக்கத்தையும் ஆசீரையும் வாழவும், சாட்சிகளாக இருக்கவும் நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் பயப்படாதீர்கள்! செபியுங்கள், இதன்மூலம் தூயஆவியானவர் நீங்கள் மகிழ்ச்சியை அறிவிப்பவர்களாகவும் சமாதானத்தின் மற்றும் நம்பிக்கையின் மனிதர்களாகவும் இருக்க உங்களுக்குப் பலம் கொடுப்பார். நன்றி நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு“




2017-12-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! நான் உங்கள் அன்னையாக, நீதிமான்களின் அன்னையாக, அன்பு செய்பவர்களதும் துன்பத்தில் இருப்பவர்களதும் அன்னையாக, புனிதர்களின் அன்னையாக உங்களிடம் வருகின்றேன். எனது பிள்ளைகளே, நீங்களும் புனிதர்களாக வாழலாம், ஆனால் அது உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. புனிதர்கள் எனப்படுவோர், வானகத் தந்தையை அளவில்லாமல் அன்பு செய்தவர்கள், அனைத்திலும் பார்க்க அவரை அன்புசெய்தவர்கள். ஆகவே, எனது பிள்ளைகளே எப்பொழுதும் சிறப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் நன்றாக இருப்பதற்கு முயற்சித்தால், நீங்கள் புனிதர்களாக இருக்கலாம், இருப்பினும் அது நீங்கள் நினைப்பது போன்று இலகுவானதல்ல. இந்த அமைதியற்ற உலகில் அதிக பயமுறுத்தல்கள் எழுகின்றன, எனது அன்பான திருத்தூதர்களே, உங்களது கரங்கள் செபத்திற்கும் இரக்கத்திற்கும் திறந்திருக்கட்டும். அத்துடன் எனக்கு, எனது பிள்ளைகளே, செபமாலையை வழங்குங்கள், அந்த றோசாவையே நான் மிகவும் விரும்புகின்றேன். உங்களது செபங்களே எனது றோசாக்கள், அதை நீங்கள் உதட்டளவில் அசைத்துக் கொள்ளாமல் இதயத்தால் வெளிப்படுத்த வேண்டும். உங்களது செப வேண்டுதல்களே எனது றோசாக்கள். எனது மகன் சிறுபிள்ளையாக இருந்தபோது, அவர் எனக்கு அதிகளவில் பிள்ளைகள்; இருக்க வேண்டுமென்றும் அவர்கள் எனக்கு பல றோசாக்களை எடுத்து வரவேண்டும் எனவும் கூறுவார். அவர் கூறியதை நான் விளங்கிக்கொள்ளவில்லை. இப்போது எனக்குத் தெரியும், நீங்களே அந்தப் பிள்ளைகள், நீங்களே அந்த றோசாக்களை எடுத்து வருகின்றீர்கள், அந்த றோசாக்கள் என்பது அனைத்திலும் பார்க்க எனது மகனை நேசிப்பது, இதயத்தால் செபிப்பது, ஏழைகளுக்கு உதவுவதாகும். இதுவே எனது றோசாக்கள். இதுவே நம்பிக்கை, இதுவே அனைத்தையும் அன்பால் இணைப்பது. ஆகவே, எனது அன்பான திருத்தூதர்களே, அன்பை அறியாதவர்களுக்காக செபியுங்கள், உங்களை அன்பு செய்யாதவர்களுக்காக, உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்காக, எனது மகனின் அன்பை அறிந்து கொள்ளாதவர்களுக்காக செபியுங்கள். எனது பிள்ளைகளே இதையே நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன், செபிப்பது என்பதன் அர்த்தம் அன்பு செய்வதும் மன்னிப்பதுமாகும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.




2017-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில் செபிக்குமாறு உங்களை அழைக்கிறேன். எனது பிள்ளைகளே செபிப்பதுடன் சமாதானத்தைத் தேடுங்கள். உலகிற்கு வந்த கிறிஸ்து உங்களுக்கு அவரது சமாதானத்தைத் தரவே வந்தார், எனது மகனாகிய அவர், உங்கள் சகோதரன், என் மூலமாக மனம்திரும்புமாறு உங்களை அழைக்கின்றார், இறைவன் இல்லாமல் உங்களுக்கு எதிர்காலமோ அல்லது நித்திய வாழ்வோ இல்லை. ஆகவே, நம்பிக்கை கொள்வதுடன் செபியுங்கள், இரக்கத்தில் வாழ்வதுடன் அவரை நீங்கள் தனிமையில் சந்திக்க எதிர்பார்த்திருங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.




2017-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்கள் அன்னையாம், என்னைச் சுற்றிக் கூடிவந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போது, பல தூய்மையான ஆன்மாக்களை, அன்பு மற்றும் ஆறுதல் தேடும் எனது பல பிள்ளைகளைக் காண முடிகின்றது, ஆனால் அதை எவரும் அதை உங்களுக்குத் தரவில்லை. அத்துடன் எனது மகனைக் கண்டறியாத பலர், முன்மாதிரிகையாக இல்லாமல் பாவத்தில் வாழ்வதையும் காண முடிகின்றது. நல்லவை அமைதியாகவும், தூய இதயத்தின் ஊடாகப் பெருகுவதாலும், அது பலமடைந்து, இந்த உலகிற்கு வழங்கப்படுகின்றது. பல்வேறு பாவங்கள் இருப்பினும், அன்பும் உள்ளது. எனது மகன் அனைவருக்கும் அன்னையான என்னை உங்களிடம் அனுப்பி உங்களுக்கு அன்பைக் கற்பிப்பதற்கும், இதன்மூலம் நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என அறியவும் செய்துள்ளார். எனது அன்பார்ந்தத தூதர்களே, உயிர்த்துடிப்பான நம்பிக்கையின் விருப்பம் மற்றும் போதுமான அன்பு போன்றவற்றை எனது மகன் ஏற்றுக்கொள்வார். இருப்பினும் நீங்கள் அதைப் பெற மனதுள்ளவர்களாகவும், நல்ல விருப்பமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். திறந்த இதயத்தில் எனது மகன் உள்நுழைவார். நீங்கள் எனது மகனைப் போதுமான அளவில் கண்டறியவும், -கடவுளிடமிருந்து பிறந்த இறைவனை- அளப்பெரிய இரக்கத்தை அறிந்து கொள்ளவும் முடியும், இது அதிகம் உங்களுக்குத் தேவைப்படுகின்றது. அவர் உங்கள் பாவங்களைத் தன்மேல் ஏற்றுக்கொண்டார், உங்களுக்கு பரிகாரத்தைத் தேடிக்கொண்டார், இதற்கு மறுபக்கப் பலனாக ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றார். அன்பே எனது மகன். அவர் எவ்வித வித்தியாசமுமின்றி அனைத்து நாட்டவரையும், எல்லா இனத்தவரையும் அன்பு செய்கிறார். எனது பிள்ளைகளே, நீங்கள் எனது மகனின் அன்பில் வாழ்வீர்களானால், அவரது இராச்சியம் ஏற்கனவே இப் பூமியில் வந்துவிடும். ஆகவே எனது அன்பின் தூதர்களே, எனது மகனும் அவரது அன்பும் எங்களுக்கு அண்மையாக இருக்க வேண்டும். இதற்காக செபியுங்கள், செபியுங்கள். எனது மகன் மூன்றும் ஒன்றுசேர்ந்து வாழ்பவர்களுள் ஒருவர் என்பதை மறவாதீர்கள். உங்கள் மேய்ப்பர்களை அன்பு செய்வதுடன் அவர்களுக்காக செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.




2017-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இந்த வேளையில் இரக்கத்தின் காலத்திற்காக செபிக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிரச்சினைகள், தேவைகள், துன்பங்கள் மற்றும் திருப்தியடையாத நிலைமைகள் உள்ளன. புனிதர்கள் உங்களுக்கு முன்மாதிரிகையாக இருப்பதுடன் நீங்கள் தூயவர்களாக இருப்பதற்கு அவர்கள் உந்துசக்தி தருவார்கள். இறைவன் உங்களின் அண்மையாக இருப்பதுடன் அவரைத் தேடுவதால் நீங்கள் இறைவனிடம் மீண்டும் மனம்திரும்பி வாருங்கள். இந்த விசுவாசமே உங்கள் நம்பிக்கையாக இருப்பதுடன், உங்கள் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பட்டும். நீங்கள் எனது வேண்டுகோளைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்.




2017-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பார்ந்த பிள்ளைகளே! பாரிய சோதனைகளுக்கு முகம்கொடுக்கும் சகோதர சகோதரிகளுக்காக, பேராசைகளைத் தவிர்ப்பதுடன், தவமிருந்து செபிக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். விசேடமாக, நீங்கள் அருட்பணியாளர்கள் மற்றும் திருநிலைப்படுத்தப்பட்ட அனைவருக்காகவும்; அவர்கள் மேலும் உறுதியுடன் இயேசுவை அன்புசெய்யவும்; தூய ஆவியானவர் அவர்களின் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பவும்; வானகம் மற்றும் வானக இரகசியங்களுக்கு சாட்சிகளாய் வாழவும் செபிக்குமாறு நான் உங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன். பலரது ஆன்மாக்கள் பாவத்தில் மூழ்கியுள்ளன ஏனென்றால், தம்மை ஒறுத்து அவர்களின் மனம்திரும்புதலுக்காக செபிப்பதற்கு பலரும் தயாராக இல்லை. நான் உங்களுடன் இருப்பதுடன், உங்கள் இதயம் மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டுமென செபிக்கிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி”




2017-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே,
என் மகனின் வேதனைகளைக்குறித்து என்னைத்தவிர யாரினால் உங்களுக்கு சொல்ல இயலும்.காரணம் நான் அவரோடு வாழ்ந்திருக்கின்றேன். நான் அவரோடு பாடுகளில் பங்கு பெற்றேன். காரணம் எனது உலகவாழ்வில் அவரது தாயாக அவரது பாடுகளை நானும் அனுபவித்தேன். எனது மகன் தந்தை இறைவனது செயல்களையும் அவரது நினைவுகளையும் எப்போதும் விரும்பினார். அவர் எனக்கு தான் உங்களை மீட்க வந்ததாக சொன்னார். அன்பின் காரணமாக நான் எனது அநேக பாடுகளை மறைத்தேன். ஆனால் என் பிள்ளைகளே,நீங்கள் எப்போதும் அதிக கேள்விகளை கேட்டுகொண்டே இருக்கிறீர்கள். துன்பங்களை தாங்கி கொள்ள முயல்வதில்லை. இறை அன்பினால் நீங்கள் உங்கள் வாழ்வில் வரும் பாடுகளை தாங்கிகொள்ள வேண்டும். எல்லா மனிதரும் தங்களுடைய வாழ்வில் அவர்களுக்கு அருளப்படும் அளவில் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். மனிதனாக பிறந்த என் மகனாகிய கடவுள் அருளும் உள்ள சமாதானமும், நம்பிக்கையும் அவரது வார்தைகளும் உங்களை முடிவில்லாத வாழ்வை நோக்கி நடாத்தும். நல்ல ஆன்மாவில் விதைக்கப்படும் வார்த்தைகள நல்ல கனிகளைத் தரும். எனது மகன் எல்லா துன்பங்களையும் தாங்கிக் கொண்டார் காரணம் அவர் உங்களுடைய பாவங்களை ஏற்றுச் சுமந்தார். எனவே என் அன்பார்ந்த அப்போஸ்தலர்களே உங்கள் வாழ்வில் வரும் பாடுகளை நீங்கள் தாங்கும் போது பரலோக பிரசன்னம் உங்களுக்குள் இறங்கும், அந்த பரலோக சமாதானம் உங்களை சூழ்ந்துள்ள மற்றவர்களுக்கு, பரலோக அன்பை கொடுக்கும். நன்றி.




2017-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை செபத்தின் மக்களாக இருக்குமாறு அழைக்கிறேன். செபம் உங்களுக்கு மகிழ்வைத்தரட்டும் அத்துடன் அனைத்திலும் வல்லவரை சந்திக்கும் வரை செபியுங்கள். அவர் உங்கள் இதயத்தை மாற்றியமைப்பார் இதனால் நீங்கள் அன்பின் மற்றும் சமாதானத்தின் மக்களாக ஆகுவீர்கள். அன்பான பிள்ளைகளே, சாத்தான் வலுவானது என்பதை மறக்காதீர்கள், அத்துடன் அது உங்களை செபத்தின் பாதையிலிருந்து திசைதிருப்பிவிடும்.இறைவனை சந்திப்பதற்கான இரகசியத் திறப்பு செபம் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். ஆகவே உங்களை வழிநடத்த நான் உங்களோடு இருக்கிறேன். செபத்தைக் கைவிடாதீர்கள். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்.




2017-08-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! வானகத் தந்தையின் சித்தத்திற்கு அமைய, உங்களை நேசிக்கும் அன்னையாகிய நான், இறைவனை நீங்கள் அறிந்து கொள்வதற்கும் அவர்வழியில் நடக்கவும் உதவ வந்துள்ளேன், எனது மகன் அவரது பாதச் சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார், இதனால் நீங்கள் அவரைப் பின்பற்றுவது இலகுவாக உள்ளது. நீங்கள் பயப்படாதீர்கள்! எதற்கும் அஞ்சாதீர்கள் நான் உங்களுடன் உள்ளேன். மனம் தளராதீர்கள், யார் செபிக்காமல், அன்பு செய்யாமல், எனது மகனை அறியாமல் உள்ளார்களோ அவர்களுக்கே அதிக செபம் தேவையாகிறது. உங்கள் அயலவர்களான சகோதரர்களுக்கு உதவுங்கள். எனது அன்பான தூதர்களே, எனது குரல் உங்களில் கேட்பதுடன், தாயாகிய எனது அன்பால் நிறையட்டும். ஆகவே செபியுங்கள், உதவிச் செபியுங்கள், அன்பால் செபியுங்கள், தொழிலால் செபியுங்கள் எப்போதும் எனது மகனின் பெயரில் நினைவைக் கொண்டிருங்கள். நீங்கள் எவ்வளவு அன்பு செய்கின்றீர்களோ, அவ்வளவுக்கு மேலாக நீங்கள் அன்பைப் பெறுவீர்கள். அன்பான இதயத்தில் இருந்து புறப்படும் அன்பே உலகத்தில் பிரகாசிக்கும். அன்பே இரட்சிக்கும் அன்புக்கு முடிவில்லை. எனது மகன் மீண்டும் உலகிற்கு வரும்போது, அவர் உங்கள் இதயங்களில் அன்பைத் தேடுவார். எனது பிள்ளைகளே, அன்பிற்கான பல செயற்பாடுகளை அவர் உங்களுக்காக செய்துள்ளார். அவற்றை காணுமாறும், விளங்குமாறும், அதற்காக அவரை அன்பு செய்வதால் மற்றும் அயலாரை மன்னிப்பதால் அவருக்கு நன்றிகூறுமாறும் நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். அதாவது எனது மகனை அன்புசெய்வதென்றால் மற்றவர்களை மன்னிப்பதாகும். எவராவது தனது அயலானை மன்னிக்காவிட்டால் அல்லது அயலாரை தண்டிப்பதுடன் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கினால் எனது மகனை அன்பு செய்யமுடியாது. எனது பிள்ளைகளே, நீங்கள் அன்பு செய்து, மன்னிக்காமல் இருந்தால் செபத்தால் என்ன பயன் ஏற்படும்? நான் நன்றி கூறுகிறேன்.




2017-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! கடவுளுக்கும் அவரது கட்டளைகளுக்கும் தூரமாக இருக்கும் அனைவருக்காகவும் செபிப்பதுடன் அவர்களுக்கு கடவுளின் அன்பை வெளிப்படுத்துங்கள். அன்பான பிள்ளைகளே, மனம்திரும்புவதில் உண்மையாகவும் உறுதியாகவும் இருப்பதுடன், நீங்கள் வாழ்வில் தூய்மையானவர்களாகவும், ஒருவருக்கொருவர் செபங்களினால் உற்சாகமளிப்பவர்களாகவும் இருங்கள், இதனால் உலகில் உங்கள் வாழ்வு மேலும் சிறப்படையட்டும். நீங்கள் எனது அழைப்பை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி கூறுகிறேன்.




2017-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! எனது அழைப்பை நீங்கள் கேட்பதற்கும் இங்கு உங்கள் வானக அன்னையான என்னைச் சுற்றிக கூடியிருப்பதற்கும் நான் நன்றி கூறுகின்றேன். நீங்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் என்னை நினைக்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் உங்களில் அன்பு கொண்டுள்ளேன் அதுபோன்றே எனது அன்பு மகனும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார், அவரே தனது இரக்கமுள்ள இதயத்தின் மூலமாக மீண்டும் மீண்டும் என்னை உங்களிடம் அனுப்புகிறார். அவர் மனிதனாகவும் இறைமகனாகவும் இருந்தவர், ஒன்றாகவும் மூன்றாகவும் இருப்பவர். அவர் உங்களுக்காக உடல் மற்றும் ஆன்மாவின் தாக்குதலுக்கு உள்ளானவர். உங்களின் ஆன்மாவிற்கு உணவாக தன்னையே அப்பமாக ஆக்கி உங்களைக் காத்து வருபவர். எனது பிள்ளைகளே, நீங்கள் எவ்வாறு அவரது அன்பை பாராட்டுவது என்பதை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன். அதன்மூலம் நீங்கள் அவர்மீது உங்கள் எண்ணத்தை நிலைநிறுத்துங்கள், அதன்மூலம் நீங்கள் எனது மகனை அன்புசெய்யுங்கள். எனது அன்பின் தூதர்களே, நான் உங்களை எனது மேலாடையால் போர்த்துக் கொள்கிறேன், ஏனென்றால் நான் தாயாக உங்களைப் பாதுகாக்க விரும்புகிறேன். முழு உலகிற்குமாக செபிக்குமாறு நான் உங்களை வேண்டுகிறேன். எனது இதயம் துயரப்படுகின்றது. பாவங்கள் பெருகிச் செல்கின்றது, அவை எண்ணுக்கணக்கற்றவை, ஆனால் உங்கள் உதவிகளால், துணிவான செயல்களால், அடக்கத்தினால், நிறைவான அன்பினால், அமைதியினால் மற்றும் பரிசுத்த தனத்தினால் எனது இதயத்தை வெற்றி கொள்ளுங்கள். எனது மகனை அனைத்திற்கும் மேலாக அன்பு செய்வதுடன் அனைத்து உலகும் அவருக்கு ஊடாகச் செல்லட்டும். உங்கள் ஒவ்வொரு சகோதரரும் தம்மில் மிகவும் பெறுமதியான ஆன்மாவைக் கொண்டுள்ளனர் என்பதை மறவாதீர்கள். ஆகவே எனது பிள்ளைகளே, எனது மகனை அறியாத அனைவரையும் அன்பு செய்யுங்கள், செபங்கள் மற்றும் அன்பால் அவர்களது ஆன்மாவை காத்துக் கொள்ள மற்றும் நித்திய வாழ்விற்கு தயார்படுத்துங்கள். எனது தூதர்களே, எனது பிள்ளைகளே, எனது மகன் உங்களுக்குக் கூறியுள்ளார், நீங்கள் ஒருவர் ஒருவரை அன்பு செய்யவேண்டுமென, இது உங்கள் இதயத்தில் உறுதியாக எழுதப்பட்டுள்ளதுடன், செபத்தின் ஊடாக இந்த அன்பை வாழச்செய்யுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2017-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களது விடாமுயற்சிக்காக நன்றிகூற விரும்புவதுடன், நீங்களாகவே ஆழமான செபத்தை ஆரம்பிக்குமாறு உங்களை அழைக்கிறேன். செபம், எனது அன்பான பிள்ளைகளே, நம்பிக்கையின் இதயமாக இருப்பதுடன், நித்திய வாழ்வுக்கு நம்பிக்கையாக அமைகின்றது. ஆகவே, உங்கள் இதயம் உங்களைப் படைத்து வாழ்வு தந்த இறைவனுக்கு நன்றிக் கீதம் பாடட்டும். நான் உங்களுடன் இருக்கிறேன், எனது அன்பான பிள்ளைகளே, அத்துடன் உங்களுக்கு அன்னையின் சமாதான ஆசீரை வழங்குகின்றேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு“




2017-06-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! வேறு இடங்களில் நான் உங்களிடம் வந்தது போன்று, இங்கும் நான் உங்களை செபிக்குமாறு அழைக்கிறேன். எனது மகனை அறியாதவர்களுக்கும், இறைவனின் அன்பைத் தெரிந்து கொள்ளாதவர்களுக்கும், பாவங்களுக்கு எதிராகவும் செபியுங்கள். அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்காக - எவரை எனது மகன் அழைத்துள்ளாரோ அவர்களுக்காகவும், இதன்மூலம் உங்களுக்கு அன்பும், ஆவியின் சக்தியும் கிடைக்க செபியுங்கள். எனது மகனிடம் செபியுங்கள், அவரின் அருகில் அனுபவிக்கும் அன்பு, உங்களுக்கு சக்தியைத் தருவதுடன், அன்புச் செயல்களுக்கு உங்களை ஆயத்தமாக்கி, அவற்றை அவரது பெயரில் செயற்படத் தூண்டட்டும். எனது பிள்ளைகளே, ஆயத்தமாகுங்கள்! இந்த வேளையே ஒரு திருப்புமுனையாகும்! ஆகவே விசுவாசத்தையும் நம்பிக்கையையும் புதுப்பிக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் செல்ல வேண்டிய வழியை நான் உங்களுக்குக் காண்பிப்பேன், அவை விவிலிய வார்த்தைகளாகும். எனது அன்புத் தூதர்களே இந்த உலகிற்கு எனது மகன் மூலம், இறைத்தந்தையிடம் வானகத்தை நோக்கி உயர்த்தப்பட்ட உங்களின் கரங்கள் தேவைப்படுகின்றது. அதிகம் பணிவும் இதயத் தூய்மையும் தேவைப்படுகின்றது. எனது மகனில் நம்பிக்கை கொள்வீகளானால், நீங்கள் எப்பொழுதும் சிறப்புடன் இருப்பீர்கள். எனது தாய்மை இதயம் உங்களிடம் விரும்புகிறது, எனது அன்பின் தூதர்களே, உலகிற்கு ஒரு சிறு விளக்காக இருங்கள், எங்கு இருள் உள்ளதோ அங்கு நீங்கள் பிரகாசிப்பீர்களாக, உங்கள் செபம் மற்றும் அன்பின் மூலம் ஆன்மாவைக் காத்துக் கொள்ளும் உண்மையின் வழியைக் காட்டுங்கள். நான் உங்களுடன் உள்ளேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2017-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எல்லாம் வல்லவர், நான் உங்களை மீண்டும் புதிதாக மனம்திரும்ப அழைக்க அனுமதித்துள்ளார். எனது அன்பான பிள்ளைகளே, உங்கள் இதயத்தை நீங்கள் அனைவரும் எதற்காக அழைக்கப்பட்டுள்ளீர்களோ, அந்த இரக்கத்திற்காகத் திறவுங்கள். அமைதியில்லாத உலகில் சமாதானத்திற்கும் அன்புக்கும் சாட்சிகளாக இருங்கள். இவ்வுலகில் உங்கள் வாழ்வு நிலையற்றது. செபியுங்கள், நீங்கள் செபிப்பதன் ஊடாக வானகத்தையும் அதன் பரிசுத்த நிலையையும் உணரமுடியும், அத்துடன் உங்கள் இதயம் அனைத்தையும் வித்தியாசமானவைகளாகக் கண்டுகொள்ளும். நீங்கள் தனியாக இல்லை, நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக எனது மகன் இயேசுவின் முன்பாக வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்டுக்கொள்வதற்காக நன்றி கூறுகிறேன்“




2017-05-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களை செபிக்க அழைக்கிறேன், என்னிடம் கேட்பதற்காக அல்ல, மாறாக தியாகச் செயல்கள் புரிவதற்காக - உங்களைத் தியாகம் செய்வதற்காக அழைக்கிறேன். உண்மையையும் இரக்கமுள்ள அன்பையும் வெளிப்படுத்த நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் இதயத்தில் விசுவாசம் தொடர்ந்தும் குறைந்து செல்லாமல் இருக்க, நான் எனது மகனிடம் செபிக்கிறேன். இறைத் தூயஆவியால் உங்களுக்கு உதவிபுரியுமாறு அவரை வேண்டுவதுடன், நானும் அன்னையாகிய எனது ஆசீரால் உங்களுக்கு உதவிபுரிவேன். எனது பிள்ளைகளே, நீங்கள் மேலும் திறம்பட வேண்டும். எவரெவர், தூய்மையானவர்களாக, தாழ்மையானவர்களாக மற்றும் அன்பால் நிறைந்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே உலகைச் சுவீகரித்துக் கொள்கின்றனர் - அவர்கள் தம்மையும் உலகையும் காத்துக்கொள்கின்றனர். எனது பிள்ளைகளே, எனது மகனே உலகின் இதயமாக உள்ளார். அவரை அன்புசெய்வதுடன் அவரிடம் மன்றாடுங்கள் ஆனால் எப்பொழுதும் புதிய பிரச்சினைகளைக் கூறாதீர்கள். ஆகவே, எனது அன்பின் தூதர்களே, உங்கள் நன்நடத்தை, உங்கள் செபம் மற்றும் இரக்க அன்பு மூலமாக மனிதர்களின் இதயத்தில் விசுவாசத்தை பெருகச் செய்யுங்கள். நான் உங்களுடன் இருக்கின்றேன், நான் உங்களுக்கு உதவுவேன். உங்கள் மேய்ப்பர்களுக்கு மேலும் ஒளி கிடைக்கச் செபியுங்கள், இதன் மூலம் அவர்கள் இருட்டில் வாழுபவர்களுக்கு ஒளிபரவச் செய்வார்களாக. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.„




2017-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! தொலைவில் இருக்கும் அனைவருக்கும் எனது வருகை அன்பும் செபமும் கொண்ட சாட்சியமாக இருக்கட்டும். உங்கள் சாட்சியம் மற்றும் உதாரணமான வாழ்க்கையினால் இறைவனுக்கும் அவரது இரக்கத்திற்கும் தொலைவாக இருப்பவர்களின் இதயங்களை அவருக்கு அண்மையாகக் கொண்டுவரலாம். நான் உங்களுடன் இருப்பதுடன், நீங்கள் ஒவ்வொருவரும் அன்புடனும் இரக்கத்துடனும் இருக்க மன்றாடிக்கொள்கிறேன், இதன்மூலம் நீங்கள் எனது மாசற்ற இதயத்திற்குத் தொலைவில் உள்ள அனைவருக்கும் சாட்சிகளாகவும் அவர்களை உற்சாகப்படுத்துபவர்களாகவும் இருங்கள். எனது அழைப்பிற்கு செவிசாய்ப்பதற்காக நன்றி கூறுகின்றேன்.“




2017-04-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! எனது அன்பான தூதர்களே, எனது மகனின் அன்பை இதுவரை அறிந்திராத அனைவருக்கும் அதைப் பரவச்செய்வது உங்களிலேயே தங்கியுள்ளது. உலகிற்கு சிறு வெளிச்சமாக உள்ள உங்களுக்கு, தெளிவாக முழுப் பிரகாசத்துடன் அன்னையாகிய எனது அன்புடன் கற்பிக்கிறேன். செபம் உங்களுக்கு உதவும், செபம் உங்களைப் பாதுகாக்கும், செபம் உலகைப் பாதுகாக்கும். ஆகவே, எனது பிள்ளைகளே, வார்த்தைகளுடன், உணர்வுடன், இரக்கமுள்ள இதய அன்புடன் செபியுங்கள். எனது மகன் உங்களுக்குப் பாதையைக் காட்டியுள்ளார். அவர், மாமிசமாகியவர், என்னிடமிருந்தே முதல் கிண்ணமாகினார், அவர் உங்களுக்கு தன்னைப் பலியாக்கியதன் மூலமாக, எவ்வாறு மற்றவர்களை அன்புசெய்ய வேண்டும் எனக் காட்டியுள்ளார். ஆகவே, எனது பிள்ளைகளே, உண்மையை உரைப்பதற்கு நீங்கள் பயப்படாதீர்கள். உங்களையும் உலகையும் மாற்றுவதற்கு பயப்படாதீர்கள். எனது மகன் எவ்வாறு அன்புடனும் செயல் வடிவிலும் காட்டியுள்ளாரோ அதுபோன்றே நீங்களும் செய்யுங்கள். நான் அன்னையாக என்றும் உங்களுடன் இருப்பேன். நான் எனது மகனிடம் உங்களுக்கு உதவுமாறு அன்புடன் இரந்து மன்றாடிக்கொள்வேன். அன்பே நிலையானது. இவ்வாறான அன்பையே நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன் - அதாவது தூய அன்பை. எனது தூதர்களே, இதை நீங்கள் அடையாளம் கண்டு, அதைப் பரப்புவது உங்களிலேயே தங்கியுள்ளது. உங்கள் மேய்ப்பர்கள் எனது மகனின் அன்புக்கு சாட்சிகளாகத் திகழ நீங்கள் உணர்வுடன் செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.




2017-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! இந்த மன்னிப்பின் காலத்தில் உங்கள் இதயத்தை இறைவனை நோக்கித் திறக்குமாறு நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன், இதன்மூலம் நீங்கள் செபத்தின் ஊடாக, மன்னிப்புப் பெற்று தூயவர்களாகப் புதுவாழ்வை ஆரம்பிக்க முடிவுசெய்யுங்கள். இந்த வசந்த காலத்தில் உங்கள் எண்ணங்கள் மற்றும் இதயத்தை புதிய வாழ்விற்கு மாற்றிக்கொள்ள முனையுங்கள். ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் ஒருமித்து இறைவனுக்கும் அவரது இறை படிப்பினைகளுக்கும் ஆம் என்று கூறுவீர்களானால், நான் உங்களுக்கு உதவுவதற்காக உங்களுடன் இருப்பேன். நீங்கள் தனியாக இல்லை, நான் மன்னிப்பின் மூலமாக, உன்னதமானவர் என்னிடம், உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் வழங்கியவைகளை உங்களுக்கு வழங்குவேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக நன்றி கூறுகிறேன்.„




2017-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! தாயின் அன்புடன் நான் உங்களுக்கு மேலும் அன்பாக உதவ வருகிறேன், இதன் அர்த்தம் மேலும் நம்பிக்கை கொள்வதாகும். நான் உங்களுக்கு உதவுவதற்காக, எனது மகனின் வார்த்தைகளை அன்புடன் வாழ்வதற்காக வருகின்றேன், இதன்மூலம் உலகம் மாற்றமடையட்டும். ஆகவே, எனது அன்பின் திருத்தூதர்களே, என்னைச் சுற்றியுள்ள உங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன். உங்கள் இதயத்தால் என்னைப் பாருங்கள், உங்கள் அன்னையிடம் பேசுவது போன்று உங்கள் வேதனைகளை, துன்பங்களை, மகிழ்ச்சிகளை என்னிடம் கூறுங்கள். எனது மகனிடம் நான் உங்களுக்காக வேண்டிக்கொள்ள என்னைத் தேடுங்கள். எனது மகன் இரக்கமுள்ள இதயமுள்ளவர், நீதியானவர். நீங்களும் அவ்வாறே இருக்க வேண்டுமென அன்னையாம் எனது இதயமும் விரும்புகிறது. ஆகவே எனது பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், இதயத்தால் செபியுங்கள், அன்புடன் செபியுங்கள், நற்செயல்களால் செபியுங்கள். அனைவரும் எனது மகனை அறிந்து கொள்வதற்காகச் செபியுங்கள், இதனால் உலகம் மாற்றம் பெறட்டும், இதனால் உலகம் பாதுகாக்கப்படட்டும். எனது மகனின் அன்பு வார்த்தைகளுடன் வாழுங்கள். தீர்ப்பிடாதீர்கள், மாறாக ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள், இதன்மூலம் எனது இதயம் வெற்றி பெறும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“.




2017-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை விசுவாசத்தில் ஆழமாக வாழ்வதற்கும் அதில் உறுதியாக இருப்பதற்கும் மன்றாட அழைக்கிறேன். இதன் மூலமாக காற்றோ அல்லது புயலோ உங்களை அசைக்காதிருக்கட்டும். உங்கள் விசுவாசத்தின் வேர்கள் செபங்களாகவும் நித்திய வாழ்வில் நம்பிக்கை கொண்டதாகவும் இருக்கட்டும். இப்போதிருந்தே, எனது அன்பான பிள்ளைகளே, இந்த இரக்கத்தின் காலத்திற்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள், இதன் வழியாகவே இறைவன் உங்களுக்கு இரக்கத்தை அருளுவார், நீங்கள் பற்றற்று வாழ்வதன் ஊடாகவும் மனம்திரும்புவதனாலும் தெளிவான விசுவாசமும் நம்பிக்கையும் உள்ள மனிதர்களாக இருந்து கொள்ளுங்கள். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி.“




2017-02-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நீங்கள் யாரென்றால், ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வை எனது மகனுக்காக ஒப்புக்கொடுப்பதற்கு முயல்பவர்கள், நீங்கள் யாரென்றால் அவரில் வாழ எத்தனிப்பவர்கள், நீங்கள் யாரென்றால் செபிப்பவர்கள் மற்றும் துன்பப்படுபவர்கள் - நீங்களே சமாதானமற்ற இவ்வுலகிற்கு நம்பிக்கை தருபவர்கள். நீங்களே எனது மகனின் ஒளிக் கதிர்கள் - வாழும் நற்செய்திகள், மற்றும் நீங்களே எனது அன்பிற்குரிய அன்பான தூதர்கள். எனது மகன் உங்களுடன் உள்ளார். எவர் அவரை நினைக்கின்றார்களோ, எவர் அவரிடம் செபிக்கின்றார்களோ அவர்களுடன் அவர் இருக்கிறார். அத்துடன் அவர் தன்னை அறியாதவர்களும் மனம்திரும்பப் பொறுமையுடன் காத்திருக்கின்றார். ஆகவே, நீங்கள், எனது அன்பான தூதர்களே இதயத்தால் செபிப்பதுடன் செயல்கள் மூலமாக எனது மகனின் அன்பை வெளிப்படுத்துங்கள். இதுவே உங்களுக்கு ஒரேயொரு நம்பிக்கையாகவும் அத்துடன் இதுவே உங்கள் நித்திய வாழ்விற்கு ஒரேயொரு வழியாகவும் அமையும். தாயாக நான், இங்கே உங்களோடு உள்ளேன். உங்களால் என்னிடம் வேண்டப்பட்ட செபங்கள்; அனைத்தும் எனக்கான மிகவும் அழகுள்ள அன்பின் றோசாக்கள். எங்கு றோசாவின் நறுமணத்தை உணர்கின்றேனோ அங்கு என்னால் இருக்க முடியாது. ஆனால் நம்பிக்கை உள்ளது. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.“




2017-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை சமாதானத்திற்காக செபிக்க அழைக்கிறேன், மனிதரின் இதயத்தினுள் சமாதானம், குடும்பங்களில் சமாதானம் மற்றும் உலகில் சமாதானத்திற்காக செபிப்போம். சாத்தான் பலமாக இருப்பதுடன் உங்கள் அனைவரையும் இறைவனுக்கு எதிராகத் திருப்பவும், மனிதாபிமானவைகள், இதயத்தில் இறைவனுக்கு சார்ந்த அனைத்து உணர்வுகளை மழுங்கடிக்கவும் இறைவன் சார்ந்த அனைத்தையும் இல்லாதொழிக்க விரும்புகிறான். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உலகம் தரும் பொருட்சாதனங்கள், அழகுச் சாதனங்கள் மற்றும் சுயநல விருப்புகளுக்கு எதிராக செபிப்பதுடன் போராடுங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, தூயவர்களாக இருப்பதற்கு முடிவு செய்யுங்கள், நான் எனது மகன் இயேசுவிடம் உங்களுக்காகப் பரிந்து பேசுவேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக.„




02.01.2017 அன்று மரியன்னை மரிஜானாவுக்கு வழங்கிய செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, எனது மகன் இந்த உலகில் இருந்த போது, உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் அன்பாகவும் ஒளியாகவும் இருந்தார். என் அன்பார்ந்த அப்போஸ்தலர்களே, அவரது ஒளியைப் பின் பெற்றுங்கள். இது இலகுவானது அல்ல. நீங்கள் தாழ்ச்சி உள்ளவர்களாக இருக்க வேண்டும். இயேசுவின் அன்பினாலும் உங்கள் விசுவாசத்தினாலும் நீங்கள் உங்களை மற்றவர்களிலும் பார்க்க தாழ்த்த வேண்டும். விசுவாசம் இன்றி எவரும் தெய்வீக அனுபவங்களை பெறமுடியாது. நான் உங்களோடு இருக்கின்றேன், நான் என்னை இந்த தரிசனத்தின் மூலமும் இவ் வார்த்தைகளின் மூலமும் வெளிப்படுத்துகின்றேன். நீங்கள் எனது தாய்க்குரிய அன்புக்கு சாட்சிகளாக இருக்க வேண்டுமென விரும்புகின்றேன். என் அன்பார்ந்த பிள்ளைகளே, தேவையற்ற கேள்விகளை கேட்டு உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள். அவற்றிக்கு நீங்கள் ஒருபோதும் விடைகாண மாட்டீர்கள். இவ்வுலக வாழ்க்கைப்பயணம் முடிவடைகின்ற போது, பரலோக தந்தை அவற்றுக்கு முடிவு தருவார். எப்போதும் கடவுள் எல்லாவற்றையும் அறிவார் என்பதையும் அவர் எல்லாவற்றையும் பார்க்கின்றார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். என் அன்பார்ந்த மகன் வாழ்வை வழங்குகின்றார், இருளை அகற்றுகின்றார் எனது தாய்க்குரிய அன்பு என்னை உங்களிடம் கொண்டு வருகின்றது, இது வார்த்தைகளால் வெளிக்காட்ட முடியா ஆனால் உண்மையான் அன்பு. நான் எனது தாய்க்குரிய அன்பை உள்ளுணர்வுடன் வெளிப்படுத்துகின்றேன். நான் உங்களிடம் செப ரோஜாக்களை உங்கள் அன்பிற்கு அடையாளமாக கேட்கின்றேன். நான் இந்த செபங்களை உங்களுக்காக பிறந்த எனது மகனிடம் ஒப்படைப்பேன். அவர் உங்களைப் காண்பார் உங்கள் செபங்களைக் கேட்பார். நாங்கள் எப்போதும் உங்களுக்கு அருகில் இருக்கின்றோம். இந்த எமது அன்பு தான், உங்களை அழைத்து, மாற்றி, ஒன்றாக்கி, ஊக்குவித்து நிறைவடையச் செய்கின்றது. ஆகவே என் அப்போஸ்தலர்களே, ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்யுங்கள். எல்லாவற்றிக்கும் மேலாக எனது மகனை அன்பு செய்யுங்கள். இதுவே மீட்பிற்கும் முடிவில்லா வாழ்வுக்கும் ஒரே வழி. இதுவே எனது அன்பார்ந்த செபமும், என் உள்ளத்தை நிரப்பும் வாசனை மிகுந்த ரோஜாவும் ஆகும். செபியுங்கள், உங்கள் மேய்ப்பர்கள் எனது மகனின் ஒளியினால் பெலமடையவும் செபியுங்கள், நன்றி




25-12-2016 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, மிகுந்த மகிழ்ச்சியோடு எனது மகனை சுமந்தபடி அவரது சமாதானத்தை உங்களுக்கு தருவதற்காக வருகின்றேன். உங்களுடைய இருதயத்தை அவரது சமாதானத்திற்க்காக திறவுங்கள். மிகுந்த மகிழ்ச்சியோடு நீங்கள் அதைப்பெற்றுக் கொள்வீர்கள். உங்களிலும் உங்கள் குடும்பங்களிலும் சமாதானத்தை தருவதற்காக விண்ணகம் விளைகின்றது. உங்களின் செபத்தினால் இந்த சமாதானத்தை பெற்று கொள்வீர்கள். உங்களுடைய நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என, எனது மகனுடன் உங்களை அசீர்வதிக்கின்றேன். உங்களுடைய உள்ளம் தளராத உள்ளத்தோடு எப்போதும் பரலோகத்தை நோக்கி இருப்பதாக. அப்போது கடவுளின் திட்டம் நிறைவேறும். எனது அழைப்பிற்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.




2016-12-02 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது பிள்ளைகள் நடந்து கொள்ளும் விதத்தை நான் பார்க்கும்போது, எனது தாய்மைக்குரிய இதயம் அழுகின்றது. பாவங்கள் அதிகரிக்கின்றன, தூய்மையான ஆன்மா எப்பொழுதும் முக்கியமானது என்பதுடன் எனது மகனை பலர் மறந்து விடுகின்றனர், பலவேளைகளில் அவரை மதிப்பது குறைவடைகின்றது, எனது பிள்ளைகள் தண்டிக்கப்படுகின்றனர். ஆகவே நீங்கள், எனது பிள்ளைகளே, எனது அன்பின் சீடர்களே, எனது மகனின் பெயரால் இதயத்தாலும் ஆன்மாவாலும் அழைக்கிறேன். அவரே ஒளியின் வார்த்தைகளாக உங்களுக்கு இருப்பார். அவர் உங்களுக்குத் தன்னை வெளிப்படுத்துவார், அவர் உங்களுடன் அப்பத்தைப் பிட்பதுடன் அதை அன்பு வார்த்தைகளாக வழங்குவார், இதன்மூலம் நீங்கள் அதை இரக்கமுள்ள இதயச் செயல்களாக மாற்றுவதுடன் உண்மைக்கு சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள். ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, பயம் கொள்ளாதீர்கள். உங்களில் எனது மகன் இருப்பதற்கு அனுமதியுங்கள். அவர் உங்களின் காயங்களைப் பராமரிப்பதுடன் இழந்துபோன ஆன்மாவை மீட்டெடுக்க உதவுவார். ஆகவே, எனது பிள்ளைகளே, செபமாலை செபிப்பதற்கு திரும்பி வாருங்கள். அவரிடம் நல்ல உணர்வுகளுடன், இரக்கமுள்ள இதயத்துடன் செபியுங்கள். வார்த்தைகளால் செபிப்பதோடு மட்டும் நின்றுவிடாது, இரக்கச் செயல்களாலும் காட்டுங்கள். அன்புடன் அனைத்து மனிதர்களுக்காகவும் செபியுங்கள். எனது மகன் அன்பைக் காணிக்கையாக்குபவர்களின் வேண்டுகோள்களைக் கேட்டுக்கொள்வார். ஆகவே, அவருடன் வாழுங்கள், அன்பாக இருப்பது மற்றும் பலமும் நம்பிக்கையும் கொள்வது, நித்திய வாழ்விற்கு இட்டுச்செல்லும். இறைவனின் அன்பின் மூலம் நான் உங்களுடன் இருப்பதுடன் தாய்மையின் அன்பில் வழிநடத்துவேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.“




2016-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை, மீளவும் செபிப்பதற்கு வருமாறு அழைக்கிறேன். இந்த இரக்கத்தின் காலத்தில் இறைவன் உங்களை தூயவர்களாக மற்றும் மிகச் சாதாரணமான வாழ்க்கையை வாழ என் மூலமாக அழைக்கிறார், இதன்மூலம் நீங்கள் சிறு விடயங்களிலும் இறைவனின் படைப்பை அறிந்து கொள்வதுடன், அவரை அன்பு செய்து அவர் தந்துள்ள அனைத்திற்காகவும் அவருக்கு நன்றி கூறுங்கள். அன்பான பிள்ளைகளே, உங்கள் வாழ்வு மற்றவர்களுக்கு அன்பைக் கொடுப்பதாக அமையட்டும், அதற்காக இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார், நீங்கள் அவருக்குச் சாட்சிகளாக இருப்பதுடன் இறைவனின் அன்பை விரும்பாதவர்களாக வாழாதீர்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் அனைவருக்காகவும் எனது மகனிடம் மன்றாடிக்கொள்வேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!"




2016-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! உங்களிடம் வருவதும் என்னை உங்களுக்கு வெளிப்படுத்துவதும் எனது தாயன்புமிகு இதயத்திற்கு பெரு மகிழ்வைத் தருகின்றது. இது உங்களுக்கும் இங்கு வருகைதரும் ஏனையவர்களுக்குமான எனது மகனின் ஒரு பரிசாகும். தாயாக உங்களை அழைக்கிறேன், அனைத்திலும் பார்க்க எனது மகனை அன்பு செய்யுங்கள். அவரை முழு இதயத்தாலும் அன்பு செய்வதற்கு, நீங்கள் அவரை நன்கு அறிந்திருக்க வேண்டும். செபிக்கும்போது நீங்கள் அவரை அறிந்து கொள்வீர்கள். இதயத்தாலும் உணர்வாலும் செபியுங்கள். செபம் என்பதன் அர்த்தம், அவரது அன்பையும் அவரது அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வதாகும். செபம் என்பதன் அர்த்தம் அன்பு செய்தல், கொடுத்தல், துன்பப்படல் மற்றும் அதில் ஈடுபடல் என்பதாகும். எனது பிள்ளைகளே, உங்களை செபத்தினதும் அன்பினதும் தூதர்களாகுமாறு அழைக்கிறேன். எனது பிள்ளைகளே, இது விழிப்பாக இருக்கும் காலம். இவ் விழிப்பான வேளையில் அன்பிலும் நம்பிக்கையிலும் செபிக்குமாறு உங்களை அழைக்கிறேன், எனது மகன் உங்கள் இதயத்தைப் பார்க்கும்போது, அவர் உங்களிடம் நிபந்தனையற்ற நம்பிக்கையையும் அன்பையும் காண வேண்டுமென தாயான எனது இதயம் விரும்புகிறது. எனது தூதர்களின் ஒன்றுசேர்ந்த அன்பு வாழ்வழிக்கும், வெற்றிகொள்ளும் அத்துடன் சாத்தானை விரட்டிவிடும். எனது பிள்ளைகளே, நானே இறைமனிதனைப் பெற்றெடுத்த பாத்திரம், நானே இறைவனுக்கு வழிகாட்டி. ஆகவே எனது தூதர்களே நீங்கள் எனது மகனின் உண்மையான தூய அன்புள்ள பாத்திரங்களாக இருக்க உங்களை அழைக்கிறேன், இறைவனின் அன்பை இதுவரை அறியாதவர்களுக்கு, அதை உணராதவர்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் வாழ உங்களை அழைக்கிறேன். எனது பிள்ளைகளே நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்,.“ இறையன்னையின் காட்சி மறைவுற்ற வேளையில், மிர்ஜான ஒரு இரசப் பாத்திரத்தைக் கண்டார்.




2016-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை அழைக்கிறேன்: சமாதானத்திற்காக செபியுங்கள்! சுயநலப்போக்கை விட்டுவிடுவதுடன் நான் உங்களுக்கு விடுக்கும் வேண்டுதல்களை செவிமடுங்கள். அது இல்லாமல் நீங்கள் உங்கள் வாழ்வை மாற்றியமைக்க முடியாது. செபத்தை விரும்பவதன் மூலம் உங்களுக்கு அமைதி கிடைக்கும், அமைதியில் வாழும்போது உங்கள் தேவைகள் பற்றி அறிந்து கொள்வீர்கள், அதற்கு சாட்சியம் வழங்குவீர்கள். தற்போது இறைவன் தொலைவில் இருப்பதாக எண்ணும் நீங்கள் அவரைக் கண்டுகொள்வீர்கள். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள் அத்துடன் இறைவன் உங்கள் இதயத்தின் உள்வர அனுமதியுங்கள். நோன்பிருத்தலுக்கு மற்றும் ஒப்பரவாகுதலுக்கு திரும்பி வாருங்கள், இதன்மூலம் நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!“




2016-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! தூய ஆவியானவர் வானகத் தந்தையின் சித்தப்படி என்னை இயேசுவின் தாயாகச் செய்தார், இதன்மூலம் நான் உங்களுக்கும் தாயானேன். ஆகவேதான் நான் உங்களின் வேண்டுதல்களைக் கேட்பதற்காக அன்னையாகிய எனது கரங்களை அகல விரிக்கிறேன், இதன்மூலம் நான் உங்களுக்கு எனது இதயத்தைத் தருவதுடன் என்னோடு இருக்குமாறும், எனது மகனின் சிலுவையில் நம்பிக்கை வைக்கவும் உங்களை அழைக்கிறேன். இருப்பினும் எனது பல பிள்ளைகள் எனது மகனின் அன்பை இன்னும் அறியாதிருக்கின்றனர், பலர் அவரைக் கண்டறிய விருப்பமில்லாது உள்ளனர். ஓ, எனது பிள்ளைகளே, எத்தனை செயல்களை செய்து அல்லது கண்டு நம்பிக்கை கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, நீங்கள், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது தூதர்களே, உங்கள் இதய அமைதியுடன், எனது மகனின் குரலைக் கேளுங்கள், இதன்மூலம் உங்கள் இதயம் அவரது இல்லமாகட்டும், இதன்மூலம் அது தாகமில்லாது கவலையில்லாது இருக்கட்டும், எனது மகனின் ஒளியால் பிரகாசிக்கட்டும். விசுவாசத்திற்கு ஊடாக நம்பிக்கையைத் தேடுங்கள், ஏனென்றால் விசுவாசமே உயிரின் ஊற்றாக உள்ளது. மீண்டும் உங்களை நான் அழைக்கிறேன்: செபியுங்கள், செபியுங்கள், நீங்கள் விசுவாசத்தில் உற்சாகமாகவும், ஆன்மீகத்தில் அமைதியுடனும் ஒளி பரப்பியும் வாழுங்கள். எனது பிள்ளைகளே! அனைத்தையும் ஒன்றாக விளங்கிக்கொள்ள முயலாதீர்கள், ஏனென்றால் நானும் அனைத்தையும் விளங்காதவள், ஆனால் நான் அன்பு செய்ததுடன் எனது மகன் உரைத்த இறை வார்த்தையின்படி வாழ்ந்தவள், அவரே, முதலாவது ஒளியும் மாட்சிமையும் ஆனவர். தூதர்களான எனது பிள்ளைகளே, செபிக்கும், காணிக்கையைச் செலுத்தும் நீங்கள் உண்மையைப் பரப்புங்கள், எனது மகனின் வார்த்தையான இறைச் செய்தியைப் பரப்புங்கள், ஏனென்றால் நீங்களே உயிர்வாழும் இறைவார்த்தையாக உள்ளீர்கள், நீங்களே எனது மகனின் ஒளியைப் பிரகாசிப்பவர்களாக உள்ளீர்கள். உங்களை உற்சாகப்படுத்தவும் கண்காணித்துக் கொள்ளவும் எனது மகனும் நானும் உங்கள் பக்கத்தில் இருக்கிறோம். எனது பிள்ளைகளே, எப்பொழுதும் எனது மகன் கரங்களால் ஆசீர் பெற்ற உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“




2016-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை செபிப்பதற்கு அழைக்கிறேன். செபங்கள் உங்களுக்கு வாழ்வை வழங்கட்டும். இதன்மூலமாக மட்டுமே உங்கள் இதயத்தில் அமைதியும் மகிழ்வும் நிரம்பும். இறைவன் உங்கள் அருகில் இருப்பதுடன் உங்கள் இதயத்தில் அவரை உங்கள் நண்பனாக உணர்ந்து கொள்ளுங்கள். நன்கு பழகிய ஒருவருடன் கதைப்பதுபோல் நீங்கள் அவருடன் கதைப்பதுடன், அதற்கு நீங்கள் சாட்சியம் வழங்க வேண்டிய தேவையும் உள்ளது, ஏனென்றால் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இயேசு உங்கள் இதயத்தில் இருப்பதுடன் நீங்கள் அவருடன் ஒன்றித்துள்ளீர்கள். நான் உங்களுடன் என்றும் இருப்பதுடன் தாய்ப் பாசத்துடன் உங்கள் அனைவரையும் அன்பு செய்கின்றேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!“




2016-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது மகனின் விருப்பத்திற்கும் அன்னையான எனது அன்பிற்குமாக நான் உங்களிடம் வருகின்றேன், எனது பிள்ளைகளே, அனைத்திற்கும் மேலாக, எனது மகனின் அன்பை இதுவரை கண்டறியாதவர்களுக்காக வருகின்றேன். என்னை நினைப்பவர்களுக்கும், என்னைக் கூவி அழைப்பவர்களுக்குமாகவே உங்களிடம் வருகின்றேன். நான் உங்களுக்கு அன்னையாகிய எனது அன்பையும் எனது மகனின் ஆசீரையும் எடுத்து வருகின்றேன். உங்களுக்கு தூய மற்றும் திறந்த இதயம் உள்ளதா? நான் வந்திருக்கும்போது எனது கொடைகளையும் அடையாளங்களையும் காண்கின்றீர்களா? எனது பிள்ளைகளே, உங்கள் பாவ வாழ்வை விடுத்து எனது முன்மாதிரிகை உங்களை வழிநடத்தட்டும். எனது வாழ்வு வேதனை, இரகசியம் மற்றும் வானகத்தந்தையில் அளவில்லா விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டதாய் இருந்தது. வேதனை, மகிழ்ச்சி, அன்பு அனைத்தும் தற்செயலாக ஏற்பட்டவை அல்ல. அவை எனது மகன் உங்களுக்குக் காட்டிய இரக்கத்தால் நித்திய வாழ்விற்கு இட்டுச்செல்பவை. எனது மகன் உங்களிடமிருந்து அன்பு மற்றும் அவரில் செபிப்பதை எதிர்பார்க்கின்றார். அன்னையாக நான் உங்களுக்குக் கற்பிப்பது: அவரை அன்பு செய்வது மற்றும் அவரிடம் அமைதியாகச் செபிப்பது என்பதன் அர்த்தம், உதடுகளை அசைத்துக் கொள்வது மட்டுமல்லாது அமைதியாக உங்கள் ஆன்மாவால் செபிப்பதாகும். இதுவே எனது மகனுக்காக நீங்கள் செய்யும் சிறிய மற்றும் அழகான செயலாகும். எனது பிள்ளைகளே, எனது மகன் உங்களிடம் எதிர்பார்த்திருக்கிறார். செபியுங்கள், இதன் மூலம் நீங்கள் அவரது முகத்தைக் காணுங்கள், இதனால் உங்களுக்கு வெளிப்படுத்தல் நிகழ முடியும். எனது பிள்ளைகளே, நான் உங்களுக்கு ஒரேயொரு உண்மையை வெளிப்படுத்துகிறேன். செபியுங்கள், இதன்மூலம் நீங்கள் இதை விளங்கிக்கொள்ள முடியும், இதன்மூலம் நீங்கள் அன்பை மற்றும் நம்பிக்கையை பரப்ப முடியும், இதன்மூலம் நீங்கள் எனது அன்பின் சீடர்களாக முடியும். எனது அன்னைக்குரிய இதயம் விசேடமாக உங்கள் மேய்ப்பர்களை அன்பு செய்கின்றது. அவர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட கரங்களுக்காகச் செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“




2016-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களுடன் வானகத் தந்தையின் மகிழ்வைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இதயத்தின் கதவுகளைத் திறவுங்கள், இதன்மூலம் உங்கள் இதயத்தில் இறைவனால் மட்டும் தரக்கூடிய நம்பிக்கை, சமாதானம் மற்றும் அன்பு வளர்ச்சிபெறும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் அதிகளவில் இவ்வுலகுடனும் அதன் மாயைப் பொருட்களிலும் கட்டுண்டுள்ளீர்கள், ஆகவேதான் சாத்தான் வீசும் கடல் காற்றைப்போல உங்களை அலைக்கழிக்கிறான். ஆகவே நீங்கள் உங்கள் வாழ்வை இதயத்தின் செபங்களுடன் இணைத்து எனது மகன் இயேசுவிடம் வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலத்தை அவரிடம் ஒப்படையுங்கள், அதன்மூலம் நீங்கள் அவரிலும் ஏனையவர்களிலும் மகிழ்வடைவதுடன் உங்கள் வாழ்வை இதற்கு உதாரணமாக்குங்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பபைப் பின்பற்றுவதற்கு“




2016-08-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களிடம், உங்களிடையே வருகை தந்துள்ளேன், இதன்மூலம் நான் உங்கள் நலனுக்காக அவரிடம் வேண்டிக் கொள்வேன். எனக்குத் தெரியும் உங்களில் ஒவ்வொருவருக்கும் கவலைகள் உண்டு, சோதனைகள் உண்டு, ஆகவே தாயாக உங்களை அழைக்கிறேன், எனது மகனின் திருவிருந்துக்கு வாருங்கள். அவர் உங்களுக்காக அப்பத்தைப் பிட்பார், அவராகவே உங்களுக்கு அதைத் தருவார், அவர் உங்களுக்கு நம்பிக்கையைத் தருவார். அவர் உங்களிடம் மேலும் விசுவாசத்தை, நம்பிக்கையை மற்றும் உற்சாகத்தைத் தேடுகின்றார். அவர்- சுயநலம், தீர்ப்பிடுவது மற்றும் மனித பலவீனங்களுக்கு எதிரான உங்களது உள்ளார்ந்த எதிர்ப்பை எதிர்பார்க்கின்றார். ஆகவே தாயாக உங்களுக்குக் கூறுகின்றேன்: செபியுங்கள், இதனால் செபங்கள் உங்களுக்கு உள்ளார்ந்த எதிர்ப்பைக் காட்டுவதற்கான பலத்தைத் தரும். எனது மகன் சிறுவனாக இருந்தபோது அடிக்கடி என்னைப் பலர் விரும்புவார்கள் மற்றும் தாய் என்று அழைப்பார்கள் எனக் கூறிவந்தார். நான், இங்கு உங்கள் மத்தியில் அன்பை உணர்கின்றேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். இந்த அன்பின் பிரகாரம் நான் எனது மகனிடம் வேண்டிக் கொள்கின்றேன், உங்களில் எவரும், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, வீடு திரும்பும்போது, இங்கு வருகை தந்த மாதிரியே செல்லமாட்டீர்கள். நீங்கள் மிக அதிக நம்பிக்கை, இரக்கம் மற்றும் அன்பை எடுத்துச் செல்வதுடன், நீங்கள் எனது அன்பின் தூதர்களாக இருந்து கொள்ளுங்கள், இதை உங்கள் வாழ்வில் சாட்சியமாக்கும்போது, வானகத் தந்தை சாவின் அல்லாது வாழ்வின் ஊற்று என்பதை அறிந்து கொள்வீர்கள். அன்பான பிள்ளைகளே, மீண்டும் உங்களிடம் தாயாகத் தயவாகக் கேட்டுக்கொள்வது, எனது மகனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக அவர்களது ஆசீர்வதிக்கப்பட்ட கரங்களுக்காக, உங்கள் மேய்ப்பர்களுக்காக, செபியுங்கள், அவர்கள் எனது மகன் குறித்து எவ்வளவு இயலுமோ அவ்வளவு அன்புடன் அறிவிக்கின்றனர் இதன்மூலமே மனம்திரும்புதல் ஏற்படுகின்றது. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“




2016-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! நீங்கள் தவறிச்செல்வதை நான் பார்ப்பதுடன், உங்கள் இதயத்தில் செபமோ அல்லது மகிழ்வோ தெரியவில்லை. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபத்திற்குத் திரும்புவதுடன் மனிதருக்கு அல்லாது இறைவனுக்கு முதலிடம் கொடுங்கள். நான் உங்களுக்கு எடுத்து வரும் நம்பிக்கையை இழக்காதிருங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இந்த வேளையில் நீங்கள் ஒவ்வொரு நாளும் இதயத்தில் அமைதியுடன் இறைவனை மென்மேலும் தேடிக்கொள்ளுங்கள், செபியுங்கள், செபியுங்கள், செபம் உங்களுக்கு மகிழ்வைத் தரும்வரை செபியுங்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!“




2016-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நான் உண்மையாக உங்கள் மத்தியில் வந்துள்ளது உங்களை மகிழ்விக்கும் ஏனென்றால் இது எனது மகனின் மிகுந்த அன்பால் நிகழவது. அவர் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார், இதன்மூலம் நான் உங்களுக்கு அன்னையின் அன்புடன் பாதுகாப்பு வழங்குகிறேன், இதன்மூலம் நீங்கள் வேதனை மற்றும் மகிழ்வு, துன்பம் மற்றும் அன்பு போன்றவற்றை விளங்கிக்கொண்டு உங்கள் ஆன்மாவில் அவற்றை மிக ஆழமாகப் பதித்துக்கொள்வதுடன், நான் உங்களை மீண்டும் புதிதாக அழைக்கும்போதெல்லாம், இயேசுவின் இதயம், அதாவது நம்பிக்கையின் இதயத்தைப் போற்றிப்புகழ வேண்டும். எனது மகன், முடிவில்லா வாழ்வுடையவர் நாளுக்கு நாள் உங்களிடம் திரும்புகிறார். அவர் உங்களிடம் திரும்பி வருகிறார், அவர் உங்களைவிட்டு ஒருபோதும் விலகமாட்டார். எனது பிள்ளைகளே உங்களில் ஒருவர், அவரிடம் திரும்பி வரும்போது அன்னையாகிய எனது இதயம் மகிழ்வால் துள்ளுகின்றது. ஆகவே, எனது பிள்ளைகளே, எனது மகனிடம் திரும்பி வாருங்கள். எனது மகனிடம் வரும் வழி கடினமானது, முழுமையாக வேதனை தருவது, ஆனால் இறுதியில் எப்பொழுதும் வெளிச்சமானது. நான் உங்கள் வேதனைகள் மற்றும் துன்பங்களை அறிவேன் அத்துடன் அன்னையின் அன்புடன உங்கள் கண்ணீரைத் துடைக்கிறேன். நீங்கள் எனது மகனில் நம்பிக்கை கொள்ளுங்கள், ஏனென்றால் அவர் நீங்கள் ஒருமுறையாவது ஒரு விடயத்திற்காகத் தேடாத போதும் உங்களுக்காக அதைச் செய்வார். நீங்கள், எனது அன்பான பிள்ளைகளே, உங்கள் ஆன்மாவை மட்டும் பராமரியுங்கள், ஏனென்றால் அது ஒன்றுதான் உங்களுக்கு உலகில் சொந்தமானது. நீங்கள் அதை அசுத்தமாகவோ அல்லது பரிசுத்தமாகவோ வானகத் தந்தையிடம் எடுத்து வரலாம். கவனத்திற் கொள்ளுங்கள், எனது மகனின் அன்பில் நம்பிக்கை கொள்பவர்களுக்கு எப்பொழுதும் வெகுமதி கிட்டும். நான் உங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், விசேடமாக அவரில் அன்பு செலுத்தி அவரது மந்தைகளை மேய்ப்பவர்களுக்காக செபித்துக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்"




2016-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களுடன் இருப்பதற்காக என்னுடன் சேர்ந்து இறைவனுக்கு நன்றிகூறுங்கள். செபியுங்கள், எனது அன்பான பிள்ளைகளே, கடவுளின் கட்டளைகளின்படி வாழுங்கள், அதன்மூலம் பூமியில் உங்களுக்கு நலம் கிடைக்கட்டும். இன்று, இந்த இரக்கத்தின் நாளில், நான் உங்களுக்கு அன்னையின் சமாதான ஆசீரையும் எனது அன்பையும் வழங்குகின்றேன். நான் எனது மகனிடம் உங்களுக்காக வேண்டிக்கொள்வதுடன், தொடர்ந்து செபித்துக் கொள்ளுங்கள், இதன்மூலம் நான் உங்களுடன் சேர்ந்து எனது திட்டங்களை செயற்படுத்த முடியும். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!




02.06.2016 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! திருச்சபையின் தாயாகவும், உங்களின் தாயாகவும், நீங்கள் எவ்வாறு என்னிடம் வருகின்றீர்கள், நீங்கள் எவ்வாறு என்னைச் சுற்றி ஒன்றுகூடுகின்றீர்கள், நீங்கள் எவ்வாறு என்னைத் தேடுகின்றீர்கள் என்பதைப் பார்த்து நான் சிரித்துக் கொள்கின்றேன். மீண்டும் மீண்டும் நான் உங்களிடம் வருவது வானகம் எவ்வாறு உங்களை நேசிக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அது உங்களுக்கு நித்திய வாழ்விற்கான வழியைக் காட்டுவதுடன் குணப்படுத்துகின்றது. எனது தூதர்களே, நீங்கள் தூய இதயத்தையும் அதில் எனது மகனையும் கொண்டிருக்க செய்யும் முயற்சிகள் நீங்கள் சரியான வழியில் செல்வதை எடுத்துக் காட்டுகின்றது. அவர் தனது அன்பை பல சமிக்கைகள் மூலம் விட்டுச்சென்றுள்ளார். அவர் நம்பிக்கையை விட்டுச்சென்றுள்ளார். நீங்கள் உங்களை ஒப்புக்கொடுப்பதற்கும் ஒப்புரவாக்குவதற்கும் தயாராக இருந்தால், நீங்கள் பொறுமையாக இருந்தால், அயலாருடன் இரக்கமுள்ள இதயத்தோடும் அன்போடும் இருந்தால் அவரைக் கண்டுபிடிப்பது மிக இலகுவானது. பலர் எனது வார்த்தைகளையும் எனது செயல்களையும் ஏற்றுக்கொள்வதில்லை, ஆனால் எனது மகன் என் மூலமாக அனைவரையும் அழைக்கிறார். அவரது ஆவி எனது அனைத்துப் பிள்ளைகளுக்கும் வானகத் தந்தையிடமிருந்து ஒளியாக பிரகாசிக்கப்படுகின்றது. ஆகவே எனது தூதர்களே, உங்கள் திருச்சபைக்காக செபியுங்கள், அதை அன்புசெய்வதுடன் அன்பை செயற்படுத்துங்கள். உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள், அவர்களில் நீங்கள் எனது மகனின் அளப்பெரிய அன்பைக் கண்டுகொள்வீர்கள். நான் நன்றி கூறுகிறேன்.




2016-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! எனது தரிசனம் உங்கள் அனைவருக்கும் இறைவனின் ஒரு கொடை என்பதுடன் மனம்திரும்பலுக்கான ஒரு சந்தர்ப்பமாகும். சாத்தான் வலிமையாக இருப்பதுடன் உங்கள் இதயத்தில் குழப்பங்களையும் சச்சரவுகளையும் ஏற்படுத்த விரும்புகிறான். ஆகவே நீங்கள் செபியுங்கள், எனது அன்பான பிள்ளைகளே, உங்களை தூய ஆவியானவர் மகிழ்வானதும் சமாதானமும் கொண்ட சரியான பாதையில் வழிநடத்தட்டும். நான் உங்களுடன் இருப்பதுடன் எனது மகனிடம் உங்களுக்காக வேண்டுகிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!




2016-05-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

எனது அன்பார்ந்த பிள்ளைகளே! உங்கள் உண்மையான மனம்திரும்புதலையும் உறுதியான நம்பிக்கையையும் எனது இதயம் விரும்புவதுடன், அதன்மூலம் உங்கள் அன்பு மற்றும் அமைதி நீங்கள் விரும்பும் அனைவருக்கும் பரவட்டும். ஆனால் எனது பிள்ளைகளே, நீங்கள் ஒவ்வொருவரும் வானகத்தந்தைக்கு முன்பாக தனித்துவமான பெறுமானமுள்ளவர்கள் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். இதனால் தூயஆவியின் இடைவிடாத கொடைகள் உங்களில் நிரம்பட்டும். எனது உளத்தூய்மையான பிள்ளைகளே! உங்கள் உள்ளம் தூய்மையாய் இருக்கட்டும். உளரீதியான அனைத்தும் உயிரோட்டமானவை மற்றும் மிகவும் அழகானவை. நம்பிக்கையின் இதயம் திருப்பலி என்பதை மறவாதீர்கள், அதனூடாகவே எனது மகன் எப்பொழுதும் உங்களுடன் உள்ளார். அவர் உங்களிடம் வருவதுடன் உங்களுக்காக அப்பத்தைப் பிட்டுப் பகிர்கின்றார், ஏனென்றால் எனது பிள்ளைகளே அவர் உங்களுக்காக இறந்து உயிர்த்தெழுந்தார் அத்துடன் மீண்டும் வருவார். எனது வார்த்தையை அறிந்த உங்களுக்கு நான் கூறுகின்றேன், அதுவே உண்மையானது, உண்மை ஒருபோதும் மாறாதது. எனது பல பிள்ளைகள் இதை மறந்துவிட்டனர். எனது பிள்ளைகளே எனது வார்த்தைகள் புதியதோ அல்லது பழையதோ அல்ல, அது என்றும் நிலையானது. ஆகவேதான் நான் உங்களை அழைக்கிறேன் எனது பிள்ளைகளே, நீங்கள் இந்தக் காலத்தின் அடையாளங்களை நன்கு புரிந்துகொள்வதுடன், நீங்கள் „உடைந்துபோயுள்ள சிலுவையைப் பொறுக்கி எடுங்கள்“ மற்றும் அதை வெளிப்படுத்தும் திருத்தூதர்களாக வாழுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.




2016-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! எனது மாசற்ற இதயம் உங்களது பாவத்தையும் பாவத்துக்கான பழக்க வழக்கங்களையும் பார்த்துக் குருதி வடிக்கிறது. நான் உங்களை அழைக்கிறேன், இறைவனிடம் செபத்துடன் திரும்புங்கள், இதுவே மண்ணில் உங்களை நன்கு வாழ வைக்கும். தன்னை விட்டு விலகியுள்ள அனைவருக்கும் உங்கள் இதயம் நம்பிக்கையையும் மகிழ்வையும் கொடுக்க இறைவன் என் மூலமாக உங்களை அழைக்கிறார். எனது அழைப்பு உங்கள் ஆன்மாக்கும் இதயத்துக்கும் இதமளிக்கும் மருந்தாகட்டும், இதன்மூலம் அனைத்தையும் படைத்த இறைவன், உங்களை நேசிப்பதுடன் எப்பொழுதும் நீங்கள் அவரைப் போற்றிப் புகழ அழைக்கிறார். எனது அன்பான பிள்ளைகளே, வாழ்க்கை குறுகியது, நீங்கள் நன்மை செய்வதற்கு இக்காலத்தைப் பயன்படுத்துங்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!




2016-04-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்களுக்கு இறுக்கமான, மூடியுள்ள மற்றும் பயம் நிறைந்த இதயம் தேவையில்லை. எனது தாயின் அன்பை அதற்குள் அனுமதியுங்கள், அது கதிர்களைப் பரப்பி அன்பாலும் நம்பிக்கையாலும் நிரப்பட்டும், அது உங்கள் வேதனைகளைக் குறைக்கட்டும், அவைகளை நான் அறிந்துள்ளேன், அவைகளை நானும் அனுபவித்துள்ளேன். வேதனை மனத்தாங்கல்களை எழுப்புவதுடன் அதிகம் செபிக்க வைக்கின்றது. எவர் வேதனைகளைக் நீங்கச் செய்கின்றார்களோ, அவர்களை எனது மகன் அன்பு செய்கிறார். உங்களைத் தேற்றவும் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கவுமே அவர் என்னை உங்களிடம் அனுப்பினார். அவரில் நம்பிக்கை கொள்ளுங்கள். எனக்குத் தெரியும், நீங்கள் தொடர்ந்தும் இருட்டில் சுற்றித்திரிவது எவ்வளவு கடினம் என்பது. எனது பிள்ளைகளே, நீங்கள் செபிப்பதுடன் அன்பைக் கொடுப்பது அவசியமாகின்றது. எவர் செபித்து அன்பு செய்கின்றாரோ, அவர் பயம் கொள்வதில்லை, அவர் நம்பிக்கை கொள்வதுடன் இரக்கமுள்ள இதயத்தைக் கொண்டிருப்பார், அவர் ஒளியையும் எனது மகனையும் கண்டுகொள்வார். எனது திருத்தூதர்களான உங்களை நான் அழைக்கிறேன், நீங்கள் இரக்கமுள்ள இதயத்தையும் நம்பிக்கiயையும் கொண்ட முன்னுதாரணமானவர்களாக இருப்பதுடன் ஒளியை வழங்குகங்கள், இதன்மூலம் அனைத்து இருள்களும் அகலட்டும், இதை எனது மகன் வழங்குவார். நீங்கள் பயப்படாதீர்கள், நீங்கள் தனியாக இல்லை, நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன், உங்கள் மேய்ப்பர்களுக்காகச் செபியுங்கள், அவர்கள் எந்த வேளையிலும் அன்பைக் கொண்டிருக்கவும், எனது மகனின் அன்பு போன்று அன்பைச் செலுத்தவும், அவரின் ஊடாகவும் அவரின் நினைவிலும் வாழவும் செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2016-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பார்ந்த பிள்ளைகளே! இன்று நான் எனது அன்பை உங்களுக்கு எடுத்து வருகின்றேன். உங்களை அன்பு செய்யவும், அன்பு செய்பவர்களாக நீங்கள் மாறுவதற்குக் குரல் கொடுக்கவும் கடவுள்; எனக்கு அனுமதியளித்துள்ளார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் அன்பு செய்வதில் ஏழைகளாக உள்ளதுடன், எனது மகன் இயேசு உங்கள் மீது கொண்ட அன்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்ததுடன், உங்களை மீட்டு நித்திய வாழ்வைத் தரவுள்ளார் என்பதை இன்னும் நீங்கள் விளங்கிக் கொள்ளாமல் உள்ளீர்கள். ஆகவே, செபியுங்கள் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபியுங்கள் அதனால் இறைவனின் அன்பைப் புரிந்து கொள்வீர்கள். நன்றி நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு“




2016-03-18 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட வருடாந்த செய்தி

„அன்பான பிள்ளைகளே! தாயின் இதயத்தோடு, உங்கள்மீது அன்பு நிறைந்தவளாக, கடவுளாகிய தந்தை மீது முழு நம்பிக்கை வைத்து உங்களுக்கு நான் கற்பிக்க விரும்புகிறேன். நீங்கள் உள்ளகப் பார்வைகளினால் மற்றும் உள்ளக கேட்கும் புலன்களினால் இறைவனின் சித்தத்தை கற்றுக்கொண்டு அதைப் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் அவரது எல்லையற்ற இரக்கமான இதயத்தைத் தெரிந்துகொண்டு அவரது அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள், அதாவது நான் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டிருந்தபோல நீங்களும் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஆகவே எனது பிள்ளைகளே, உங்கள் இதயத்தை தூய்மையாக்குங்கள். உங்களை சோதனையில் சிக்கவைக்கும் மற்றும் இறைவனின் அன்பைத் தேட செபம் மற்றும் ஒறுத்தல்களை சிதைத்துவிடும் பல்வேறு காரணிகள் அனைத்திலுமிருந்தும் விடுபடுவதுடன், இவைகளால் எனது மகனுடன் சச்சரவு செய்வதையும் விட்டுவிடுங்கள். ஆனால் இவை அனைத்திலும் பார்க்க, எனது பிள்ளைகளே, நீங்கள் அன்பையும் இரக்கமுள்ள இதயத்தையும் அதிகம் கொண்டிருங்கள். நீங்கள் தூய்மையான மற்றும் சாதாரண இதயத்தை கொண்டிருப்பதுடன் பணி செய்வதற்கு எப்பொழுதும் தயாராக இருங்கள். எனது பிள்ளைகளே, எனது சொல்லைக் கேளுங்கள், நான் உங்கள் ஈடேற்றத்திற்காகவே பேசுகிறேன். நான் நன்றி கூறுகின்றேன்“




2016-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! நான் உங்களிடம் வருவது வானகத் தந்தை உங்களுக்குத் தரும் ஒரு பரிசாகும். உங்களுக்கு உதவவும், உண்மையின் வழியைக் கண்டடையவும், எனது மகனின் வழியைக் கண்டுகொள்ளவும் அவரின் அன்பால் நான் வருகை தருகிறேன். நான் உங்களுக்கு உண்மையை உறுதிப்படுத்தவே வருகை தருகின்றேன். நான் உங்களுக்கு எனது மகனின் வார்த்தைகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் முழு உலகும் நலமடையும் வார்த்தைகளைக் கூறினார், அந்த வார்த்தைகள் அனைவருக்கும் அன்பைக் கொடுத்தது, இந்த அன்பாலேயே அவர் தன்னைப் பலியாக்கி அதை உறுதிப்படுத்தினார். ஆனால் இன்றும் எனது பல பிள்ளைகளுக்கு அவரைத் தெரியவில்லை, அவர்கள் அவரைக் கண்டறிய விரும்பவில்லை, அவர்கள் அதை விரும்பாதவர்களாக உள்ளனர். அவர்களின் இவ் விரும்பாத்தனத்தால் எனது இதயம் வேதனையால் வாடுகின்றது. எனது மகன் எப்பொழுதும் தந்தையில் இருக்கிறார். அவரால் பூமியில் பிறந்ததால், அவர் இறை மைந்தனாகவும் என்னால் அவர் மனிதனாகவும் உருவாக்கப்பட்டார். அவருடனேயே வார்த்தைகள் எமக்குள்ளாக வந்தன. அவருடனேயே உலகிற்கு ஒளி வந்தது, அது இதயத்தினுள் நுழைந்து, ஒளிர்வதுடன் உங்களை அன்பு மற்றும் தேற்றுதலால் நிரப்புகின்றது. எனது பிள்ளைகளே, எனது மகன் அவரை அன்பு செய்யும் அனைவரையும் கண்டுகொள்கிறார். அன்பால் அவரை நிரப்பியுள்ளோமா என்பதை அவர் ஆன்மாக்கு ஊடாகப் பார்த்து அறிந்து கொள்கிறார். ஆகவே, எனது பிள்ளைகளே, எனது திருத்தூதர்களே, எனது சொல்லைக் கேளுங்கள்! சிறுவிடயங்களையும் அடிமைத்தனங்களையும் விட்டுவிடுங்கள்! தேவையற்றவைகளுக்காகவும், பொருட்களுக்காகவும் மட்டும் வாழாதீர்கள்! எனது மகனில் வாழுங்கள், அதன் மூலம் நீங்கள் அவரில் வைத்துள்ள அன்பை பிறர் கண்டுகொள்ளட்டும். அவரை மென்மேலும் கண்டறிவதற்கு நான் உங்களுக்கு உதவுவேன். நான் உங்களுக்கு அவர் குறித்து அறியத்தருவோன். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2016-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இரக்கத்தின் காலமாகிய இவ் வேளையில் நான் உங்களை மனம்திரும்ப அழைக்கிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் குறைவாக அன்பு செய்கிறீர்கள், நீங்கள் இன்னும் குறைவாகவே செபிக்கின்றீர்கள். நீங்கள் தொலைந்துபோயுள்ளதுடன் உங்களுக்குத் தெரியவில்லை உங்கள் குறிக்கோள் எதுவென. சிலுவையை கண்ணோக்குங்கள், அதிலிருக்கும் இயேசுக் கிறிஸ்துவைப் பார்த்து அவரைப் பின்தொடருங்கள். அவர் உங்களை அன்பு செய்வதாலேயே சிலுவையில் உங்களுக்காகத் தன்னைப் பலியாக்கினார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இதயத்தால் செபிக்க வருமாறு மீளவும் உங்களை நான் அழைக்கிறேன், இதன்மூலம் நீங்கள் செபத்தால் நம்பிக்கையும் உங்களுக்குச் சொந்தமாக உள்ளவைகளுக்கான அர்த்தங்களையும் கண்டடைவீர்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக செபித்துக்கொள்கிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!




2016-02-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களை மீண்டும் அழைக்கிறேன், எனது மகனைக் கண்டறிவதற்கும் உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கும் புதிதாக அழைக்கிறேன். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் வெற்றிக்காகச் செபிக்கிறேன். எனது பிள்ளைகளே, நீங்கள் அதிகம் செபிக்க வேண்டும், இதன்மூலம் உங்களுக்கு மேலும் அன்பும் பொறுமையும் பெருகும். எனது மகன் தூய ஆவியானவர் ஊடாக எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார். செபியுங்கள், நீங்கள் எனது மகனை அறிந்து கொள்வதற்காக, செபியுங்கள், உங்கள் ஆன்மா அவரில் ஒன்றிப்பதற்காக. இதுவே செபம், இதுவே அன்பு, இது மற்றவர்களை கவர்ந்து இழுப்பதுடன் உங்களை எனது தூதர்களாக்கட்டும். நான் உங்களை தாயின் அன்போடு பார்க்கிறேன். நான் உங்களை அறிவேன், உங்கள் வேதனைகளையும் அறிவேன், ஏனென்றால் நானும் இவ்விதமான வேதனைகளை அமைதியாக அனுபவித்தவள். எனது நம்பிக்கை எனக்கு அன்பையும் நம்பிக்கையையும் தந்தது. நான் மீண்டும் கூறுகிறேன், எனது மகனின் உயிர்ப்பும் நான் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும் உங்களுக்கு நம்பிக்கையும் அன்புமாக இருக்கட்டும். ஆகவே, எனது பிள்ளைகளே, செபியுங்கள், நீங்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்வதுடன் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள், அது உங்கள் இதயத்தில் இருந்து வெளிப்பட்டு உங்கள் வேதனைகள் மற்றும் துயரங்களைப் போக்கி நம்பிக்கையைத் தரட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2016-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்கள் அனைவரையும் செபிக்க அழைக்கிறேன். செபம் இல்லாமல் நீங்கள் வாழ முடியாது, இது ஒரு சங்கிலித்தொடர் போன்று உங்களை இறைவன் அருகே எடுத்துச் செல்கின்றது. ஆகவே எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இதயத்தில் துணிவுடன் இறைவனிடமும் அவரது கட்டளைகளிடமும் திரும்புங்கள், இதன்மூலம் நீங்கள் உங்கள் முழு இதயத்திலிருந்தும் வானகத்தில் இருப்பது போல மண்ணகத்திலும் இருப்பதாக எனக் கூற முடியும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் சுயமாக இறைவனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். அதேவேளை எங்கு சாத்தான் உங்களைப் பாவத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இழுக்க விரும்புகிறான் எனவும் பார்த்துக்கொள்ளுங்கள். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது இதயத்திற்குத் திரும்பி வாருங்கள், இதன்மூலம் நான் உங்களை எனது மகன் இயேசுவிடம் அழைத்து செல்ல முடியும், அவரே வழி, உண்மை மற்றும் வாழ்வு. நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!




2016-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! தாயாக நான் உங்களுடன் இருப்பது குறித்து மகிழ்வுற்றுள்ளேன், ஏனென்றால் நான் புதிதாக எனது மகனின் வார்த்தைகள் குறித்தும் அவரது அன்பு குறித்தும் உங்களுடன் பேச விரும்புகின்றேன். நான் நம்புகிறேன், நீங்கள் என்னை இதயத்தால் ஏற்றுக்கொள்வதுடன், எனது மகனின் வார்த்தைகள் மற்றும் அவரது அன்பு ஒன்றே இருளில் இருந்து விடுவித்து நம்பிக்கை எனும் ஒளிக்கு உங்களை அழைத்துச் செல்லும். இது ஒன்றே உண்மை, அதை நீங்கள் ஏற்றக்கொண்டு வாழ்ந்தால் தூய இதயத்தைக் கொண்டு வாழ்வீர்கள். எனது மகன் தூயவர்களையும் உற்சாகப்படுத்துபவர்களையும் நேசிக்கிறார். தூய மற்றும் உற்சாகமான இதயங்கள் எனது மகனின் வார்த்தைகளை விரும்புகின்றன, அவை அதை வாழ்க்கைக்கு உகந்ததாக்குவதுடன் அதை கேட்டுக்கொள்கின்றன. எனது மகனின் வார்த்தைகள் அன்பையும் நம்பிக்கையையும் கொண்டு வருகின்றன. அவர் உங்களை அன்பு செய்வது போன்று. ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள். அவர் பெயரால் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள், அவர் நினைவாக அன்பு செய்யுங்கள். எனது மகனின் வார்த்தைகளைக் கேட்டாலே திருச்சபை ஆசீர்வதிக்கப்பட்டு வளர்ச்சிபெறும், எனது மகனின் வார்த்தைகளைக் கேட்பவர்களுக்கு நன்றி கூறுங்கள், அதை விரும்புபவர்களுக்கு நன்றி கூறுங்கள், அமைதியாகவும் நம்பிக்கையுடனும் முடிவடையும் தருவாயில் துன்பத்துடன் அவற்றை ஏற்றுக்கொள்பவர்களுக்கு நன்றி கூறுங்கள். ஆகவே எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது மகனின் வார்த்தைகளை விரும்புங்கள் மற்றும் அவரது அன்பே நாளில் முதலாவதும் இறுதியானதுமான எண்ணமாக இருக்கட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.




2015-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை எனது மகன் இயேசுவிடம் அழைத்துச் செல்வதுடன் எனது அரணைப்பில் உங்களுக்கு நான் அவரது சமாதானத்தையும் வானகம் குறித்த பேரவாவையும் வழங்குகின்றேன். நான் உங்களுடன் சேர்ந்து சமாதானத்திற்காக செபிக்கின்றேன் சமாதானத்தில் நிலைத்திருக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். நான் உங்கள் அனைவருக்கும் அன்னையின் சமாதான ஆசீரை வழங்குகின்றேன். நன்றி நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!




2015-12-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பார்ந்த பிள்ளைகளே! நான் என்றும் உங்களோடு உள்ளேன், ஏனென்றால் எனது மகன் உங்களில் நம்பிக்கை கொண்டுள்ளார். அத்துடன் எனது பிள்ளைகளே, உங்களுக்கு நான் தேவைப்படுகின்றேன், நீங்கள் என்னைத் தேடுகின்றீர்கள், நீங்கள் என்னிடம் வருவதுடன் எனது தாய்க்குரிய இதயத்தால் மகிழ்வடைகின்றீர்கள். உங்களுக்காக, உங்கள் துன்பங்கள் வேதனைகள் மற்றும் எனது மகனின் பாடுகளையும் என்னிடம் கொண்டுவருவதால், நான் என்றும் எப்பொழுதும் உங்களுக்காக அன்பைக் கொண்டுள்ளேன், அன்பிற்கு ஊடாக இயேசு வானகத்திற்கும் பூமிக்கும், எனது பிள்ளைகளுக்கும் – அவரது மக்களுக்கும் இடையே ஒன்றிணைவைத் தேடுகிறார், ஆகவே அனைவரும் நன்கு செபிக்க வேண்டும், தாம் சார்ந்துள்ள மறைகள் ஊடாக செபிக்க வேண்டும். தற்போது திருச்சபை துன்பப்படுகின்றது அதற்கு திருத்தூதர்கள் தேவைப்படுகின்றார்கள், ஒன்றிணைந்து வாழ்ந்து, கடவுளின் வழியைக் காட்டுவதற்கு சான்று பகர்பவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். திருத்தூதர்கள் தேவைப்படுகின்றார்கள், அவர்கள் திருப்பலியை இதயத்தால் போற்றி வாழ்பவர்களாகவும் பெரும் செயல்களை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். நீங்கள் தேவைப்படுகின்றீர்கள் எனது அன்பின் திருத்தூதர்களே. எனது பிள்ளைகளே, திருச்சபை ஆரம்பம் முதற்கொண்டே துன்பப்படுத்தப்பட்டது மற்றும் காட்டிக்கொடுக்கப்பட்டது, ஆனால் நாளுக்கு நாள் அது வளர்ந்து செல்கின்றது. அதை உடைத்துவிட முடியாது, ஏனென்றால் நீங்கள் எனது மகனுக்கு உங்கள் இதயத்தைக் கொடுத்துள்ளீர்கள் - திருப்பலி மூலமாக அவரது உயிர்ப்பின் ஒளி உங்கள் மீது ஒளிரட்டும். ஆகவே நீங்கள் அச்சமடைய வேண்டாம். உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள், அவர்கள் பலமும் அன்பும் கொண்ட குணமாக்கும் பாலமாகத் திகழட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்“




2015-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்கள் அனைவரையும் எனது விடயத்திற்காக செபிக்குமாறு அழைக்கிறேன்: அமைதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, ஆகவே எனது பிள்ளைகளே, சாத்தான் தாக்கி அனைத்து வழிகளிலும் முயன்று அமைதியைக் குலைக்கும் இவ் உலகில் செபிப்பதுடன் சமாதானத்தையும் நம்பிக்கையையும் எடுத்துச் செல்பவர்களாக வாழுங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபிப்பதில் உறுதியாகவும் இறை நம்பிக்கையில் துணிவுடனும் இருங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் எனது மகன் இயேசுவிடம் உங்கள் அனைவருக்காகவும் பரிந்து பேசுகிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!“




2015-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நான் புதிதாக உங்களுடன் அன்பு குறித்து பேச விரும்புகிறேன். நான் உங்களோடு எனது மகனின் பெயராலும் அவரது விருப்பினாலும் ஒன்றுகூடியுள்ளேன். அன்பிற்கு முன்னுரிமை கொடுக்கும் உங்கள் நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எனது மகனின் அன்பைப் புரிந்து கொண்டு அவரைப் பின்தொடரும் எனது ஒவ்வொரு பிள்ளையும் அன்பிலும் நம்பிக்கையிலும் வாழ்வார்கள். அவர்கள் இறைவனின் அன்பை கண்டறிந்தவர்கள். ஆகவே, எனது பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், மேலும் அன்பிலும் மற்றும் அன்புச் செயல்களிலும் ஈடுபடுங்கள். நம்பிக்கை தனியாக அன்பிலும் மற்றும் அன்புச் செயல்களிலும் இல்லாமல் இருப்பதை நான் எதிர்பார்க்கவில்லை. எனது பிள்ளைகளே, இது நம்பிக்கையின் மறுஉருவமாகும். இது சொந்தமாகப் பாராட்டப்பட வேண்டியது. எனது மகன் நம்பிக்கையையும் செயற்பாடுகளையும், அன்பையும் நன்மையையும் தேடுகிறார். நான் செபிப்பதுடன் உங்களிடம் இரந்து கேட்பது, செபியுங்கள் மற்றும் அன்பில் வாழுங்கள், ஏனென்றால் நான் விரும்புகிறேன், எனது மகன், எனது பிள்ளைகளின் இதயத்தைப் பார்க்கும்போது, அவர்களில் அன்பையும் நன்மையையும் காணவேண்டுமே தவிர வெறுப்பையும் வேறுபாடுகளையும் அல்ல. எனது பிள்ளைகளே, எனது அன்பின் தூதர்களே, நம்பிக்கையை இழக்காதீர்கள், பலத்தை இழக்காதீர்கள். இது உங்களால் முடியும். நான் உங்களை உற்சாகப்படுத்துவதோடு உங்களை ஆசீர்வதிக்கிறேன். பல்வேறு உலக மாயைகளுக்கு, எனது பல பிள்ளைகள் முதல் இடம் கொடுக்கின்றனர், இவை அழிந்துவிடும், ஆனால் அன்பும் அன்புச் செயற்பாடுகளுமே தொடர்ந்து நிலைப்பதோடு வானக அரசின் கதவுகளை திறக்கச் செய்யும். அந்தக் கதவுகளில் நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். அந்தக் கதவில் நான் எனது பிள்ளைகள் அனைவரையும் வரவேற்பதோடு கட்டியணைத்துக் கொள்வேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன் ".




2015-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது செபம் இன்றும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக, அனைத்திலும் முதலாக, எனது அழைப்பைக் கேட்டும் கடின இதயத்துடன் இருப்பவர்களுக்கு எனது செபம் உதவட்டும். இறைவன் எனது பிரசன்னத்தால் வழங்கும் இரக்கத்தில் நீங்கள் நாளாந்தம் வாழ்வதோடு அவர் உங்களுக்கு வழங்கும் கொடைகளையும் நினைவிற் கொள்ளுங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இன்றும் நீங்கள் தூயவர்களாக இருப்பதற்கு முடிவுசெய்வதுடன், இன்றைய காலத்தின் புனிதர்களை உதாரணமாகக் கொள்ளுங்கள், இதன்போது நீங்கள் அனைவரும் புனிதத்துவத்தின் உண்மை எதுவென்பதை அறிந்து கொள்வீர்கள். அன்பில் மகிழுங்கள் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, கடவுளின் பார்வையில் நீங்கள் இன்னுமொருமுறை உருவாக்க முடியாத மற்றும் மாற்ற முடியாதவர்கள், ஏனென்றால் நீங்கள் இவ் உலகில் இறைவனின் மகிழ்வாய் உள்ளீர்கள். அமைதிக்கும் அன்பிற்கும் சாட்சிகளாக வாழுங்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!“




2015-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நான் இங்கு, உங்களை உற்சாகப்படுத்த, உங்களை எனது அன்பினால் நிரப்ப மற்றும் புதியவற்றை வெளிப்படுத்த, எனது மகனின் அன்புக்கு சாட்சிகளாக வாழ உங்களோடு உள்ளேன். எனது பல பிள்ளைகளுக்கு நம்பிக்கையில்லை, அமைதியில்லை, அன்பு இல்லை. அவர்கள் எனது மகனைத் தேடுகின்றார்கள், ஆனால் எப்படி மற்றும் எங்கு அவரைக் காணலாம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. எனது மகன் அவர்களுக்காகத் தனது கைகளை அகல விரித்துள்ளார், அவரது கைகளுக்குள் அவர்கள் வருவதற்கு நீங்கள் உதவவேண்டும். ஆகவேதான் எனது பிள்ளைகளே நீங்கள் அன்புக்காக செபிக்க வேண்டும். நீங்கள் மேலும் அதிகமாக செபிக்க வேண்டும், அதன்மூலம்; அன்பு அதிகரித்து, மரணத்தை வெற்றி கொண்டு வாழ்வை தொடரச் செய்யட்டும். எனது அன்புத் திருத்தூதர்களே, எனது பிள்ளைகளே, நீங்கள் ஒருவர் ஒருவரைவிட்டுத் தொலைவில் இருந்தாலும், உங்கள் இதயத்தை இலகுவாக ஒருமனப்படுத்திச் செபத்தில் ஒன்றிணையுங்கள். நான் உங்களை உற்சாகப்படுத்துவது போன்று நீங்களும் ஆவியின் வல்லமையால் ஒருவர் ஒருவரை உற்சாகப்படுத்துங்கள். நான் உங்களுக்குக் காவலாக இருப்பதுடன், நீங்கள் என்னை நினைக்கும் போதெல்லாம் நான் உங்களுடனேயே இருப்பேன். உங்கள் மேய்ப்பர்களுக்காகவும் செபியுங்கள், அவர்கள் எனது மகனுக்காகவும் மற்றும் உங்களுக்காகவும் அனைத்தையும் துறந்தவர்கள். அவர்களை அன்பு செய்வதுடன் அவர்களுக்காக செபியுங்கள். வானகத் தந்தை உங்கள் செபங்களைக் கேட்பார். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."




2015-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் தூய ஆவியானவரிடம் உங்கள் இதயங்களை உறுதியான விசுவாசத்தால் நிரப்புமாறு வேண்டுகிறேன். மன்றாட்டுக்களும் நம்பிக்கையும் உங்கள் இதயங்களை அன்பாலும் மகிழ்வாலும் நிரப்புவதுடன், இறைவனிடமிருந்து தூர இருப்போருக்கு அவை ஒரு அடையாளமாக இருக்கட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, ஒருவர் ஒருவருக்காக இதயத்தால் செபியுங்கள், இதனால் செபங்கள் உங்கள் வாழ்வை மலரச்செய்வதுடன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, ஒவ்வொரு நாளும் அனைத்திற்குமாக சாட்சிகளாக இருந்து, இறைவனிடம் செபித்து மற்றவர்களின் தேவைகளுக்கு உதவுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் அனைவருக்குமாக வேண்டிக்கொள்கின்றேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!




2015-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! எனது அன்புத் திருத்தூதர்களே, உண்மையைத் தாங்கிச் செல்லும் எனதவர்களே, மீண்டும் நான் உங்களை என்னிடம் ஒன்றுகூடுமாறு அழைக்கிறேன். இதன்மூலம் நீங்கள் அன்புக்கும் உண்மைக்கும் ஏங்கித் தவிக்கும் பிள்ளைகளுக்கு - அதாவது எனது மகனைப்பற்றி அறிந்து கொள்ளத் தாகத்துடன் இருப்பவர்களுக்கு உதவுங்கள். நானே, எனது மகனின் வார்த்தையாக, வானகத்தந்தையால் இரக்கத்துடன் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளேன். நானும் உங்களைப்போன்று குழப்பமான வாழ்க்கையை வாழ்ந்தவள். அத்துடன் அது எளிதானதல்ல என்பதும் எனக்குத் தெரியும். நீங்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்வதுடன், இதயத்தால் செபித்தால் நீங்கள் தியானத்தில் உயர்நிலையை அடைவதுடன் உங்களுக்காக விண்ணகத்துக்கான வழிகள் திறக்கப்படும். அங்கு உங்கள் அன்னையான நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். நீங்கள் எனது மகனுக்குப் பிரமாணிக்கமாக இருப்பதுடன் மற்றவர்களுக்கும் பிரமாணிக்கமாக நடந்து கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன், உங்களுக்கு உதவுவேன். நான் உங்களுக்கு உண்மையைக் கற்பிப்பதால், நீங்கள் வித்தியாசத்தை உணர்ந்து கொள்வீர்கள். உங்களுக்கு அன்பைக் காட்டுவதால் எது உண்மையான அன்பு என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். எனது பிள்ளைகளே, எனது மகன் உங்களது வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கு நிச்சயமாக செவிமடுப்பார். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2015-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை செபிக்குமாறு அழைக்கிறேன். உங்கள் செபங்கள் இறைவனைச் சந்திப்தற்கான செட்டைகளாக இருக்கட்டும். உலகம் இறைவனை மறப்பதும் விட்டு விலகுவதும் இன்றைய சோதனைகளாக உள்ளது. ஆகவே எனது அன்பான பிள்ளைகளே நீங்கள் ஒவ்வொருவம் இறைவனைத் தேடுவதுடன் அவரை அன்பு செய்யுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களை எனது மகனிடம் அழைத்துச் செல்வேன், ஆனால் நீங்கள் வெளிப்படையாக இறைவனின் பிள்ளைகளென உங்களை வெளிப்படுத்த வேண்டும். நான் உங்களுக்காகப் பரிந்து பேசுவதுடன் உங்களை முடிவில்லாமல் அன்பு செய்கிறேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே. நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!




ஆகஸ்ட் 2, 2015 அன்று மிர்யானாவுக்கு அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பு பிள்ளைகளே! எவ்வளவு கடினமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான், உங்களை அன்பு செய்யும் தாயாக உணர்ந்திருக்கிறேன். நான் உங்களின் வேதனைகளை காண்கிறேன். ஆனால் நீங்கள் தனிமையில் இல்லை. என் மகன் எப்போதும் உங்களோடு இருக்கிறார். எங்கும் இருக்கிறார். அவர் காணக்கூடியவரல்ல. ஆனாலும் அவர் வழி வாழ்ந்தால் அவரை காணலாம். உங்களின் ஆன்மாவை ஒளிர்விக்கும் ஒளி அவரே. உங்களுக்கு அமைதி அருள்பவரும் அவரே. அவரே திருச்சபை. அத்திருச்சபையை அன்பு செய்யுங்கள். அத்திருச்சபைக்காக செபியுங்கள். வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல, அன்பான செயல்பாடுகளைக் கொண்டு இவ்வுலகில் போராடுங்கள். என் மகனின் அன்பை மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள். இயேசுவை அன்பு செய்ய தூண்டுங்கள். ஏனென்றால் அவரில் உண்மை இருக்கிறது. அவரே நமக்காக பிறந்த கடவுளின் மகன். பேசியே காலத்தை வீணடிக்காதீர்கள். இதனால் உண்மையை விட்டு விலக நேரிடும். எளிமையான உள்ளத்தோடு வார்த்தையை நம்புங்கள், வாழுங்கள்.. வார்த்தையை வாழ்பவர்கள் செபம் செய்வார்கள். வார்த்தையை வாழ்ந்தால், நீங்கள் பிறரை அன்பு செய்வீர்கள். எவ்வளவுக்கு அன்பு செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு மரணத்தைவிட்டு தொலைவில் இருப்பீர்கள். இயேசுவின் வார்த்தையை வாழ்பவர்கள் அன்பின் மூலம் மரணத்தையும் வென்று வாழ்வார்கள். உங்களுக்கு நன்றி. இறைமகன் இயேசுவை ஆயர்களில், குருக்களில் காண அவர்களுக்காக செபியுங்கள். இயேசுவை அரவணைத்துச் செல்ல அவர்களுக்காக செபியுங்கள்.




2015-07-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களோடு மகிழ்வடைந்து அழைக்கிறேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அனைவரும் விழித்தெழுங்கள், செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள், இதனூடாக எனது அன்பை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். எனது அன்பு பலமானது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, ஆகவே நீங்கள் இறைவன் அருகே வாருங்கள் இதனூடாக நீங்கள் எனது இறை மகிழ்வை உணர்வீர்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இறைவன் இன்றி உங்களுக்கு எதிர்காலமில்லை, உங்களுக்கு நம்பிக்கையில்லை, உங்களுக்க மீட்பில்லை, ஆகவே தீமைகளை விட்டு நல்லவற்றைத் தெரிவுசெய்யுங்கள். நான் உங்களோடு இருப்பதுடன் உங்களுக்காக இறைவனிடம் உங்கள் தேவைகள் அனைத்திற்குமாக மன்றாடுவேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!




ஜுலை 2, 2015 அன்று மிர்யானாவுக்கு அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

பாசமுள்ள என் பிள்ளைகளே! என் மகனின்மீது உங்களுக்குள்ள விசுவாசத்தை பரப்பவே நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் தூய ஆவியாரின் ஒளியால் நிரப்பப்பட்டிருக்கிறீர்கள். அதை விசுவசியாத, அறியாத மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள். இது கடவுளின் அன்பான கொடை. ஆனால் அதற்காக நீங்கள் நிறைய செபிக்கவேண்டும். அன்பே உண்மையான விசுவாசத்திற்கு ஆதாரம். நீங்கள் அன்பின் சீடராயிருப்பீர்கள். மகிழ்வினையும், பாடுகளையும் ஒருசேர நினைவுகூறும் திருவிருந்தை தினமும் புதுப்பியுங்கள். திருவிருந்து இயேசுவின் பாடுகளை புதுப்பித்து, இயேசு நம்மை எவ்வளவு அன்பு செய்தார் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. திருவிருந்தின் வழியாக நமக்கு கிடைக்கும் ஆன்மீக உணவு நமக்கு மகிழ்வையும் தருகிறது. திருவிருந்தின் வழியாக நாம் அவரோடு ஒன்றித்திருக்கிறோம். உங்களை உறுதியான விசுவாசத்திற்கு அழைத்துச்செல்ல உங்கள் மீது கொண்டுள்ள என் அளவில்லா அன்பு என்னை பலப்படுத்துகிறது. இதுவே என் விருப்பம். ஏனெனில் அவரில் வாழுங்கள், அன்பில் வாழுங்கள், உங்களை ஒளிர செய்யும் ஒளியாய், திருவிருந்தாய் வாழுங்கள். உங்கள் ஆயர்களுக்காகவும், குருக்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். அவர்கள் இயேசு அளித்த அன்பில் வாழ செபியுங்கள். அந்த அன்பை அவர்கள் மற்றவர்களுக்கு அறிவிக்க செபியுங்கள். அவர்களை அன்பு செய்யுங்கள். அன்பு என்பது தாங்குவது, பொறுத்துக்கொள்வது, கொடுப்பது. ஆகவே அவர்களை தீர்ப்பிடாதீர்கள். உங்களுக்கு நன்றி!




2015-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் அனைத்திலும் வல்லவர், நான் உங்களை நேசிக்கவும் மனம்திரும்புமாறு அழைக்கவும் எனக்கு இரக்கத்தைத் தந்துள்ளார். எனது அன்பான பிள்ளைகளே, கடவுளை விரும்புவதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும், யுத்தமும் அமைதியின்மையும், கவலையும் இல்லாமல் மகிழ்வும் சமாதானமும் அனைத்து மனித இதயங்களிலும் குடிகொள்ள ஆரம்பிக்கட்டும், ஆனால் கடவுளின் துணை இல்லாமல் நீங்கள் ஒருபோதும் அமைதியைக் காணப்போவதில்லை. ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, இறைவன் பக்கம் செபத்தோடு திரும்புங்கள், அதனால் உங்கள் இதயம் மகிழ்வுடன் இசைபாடும். நான் உங்களுடன் இருப்பதுடன், அளவிடமுடியாத வகையில் உங்களை நான் அன்பு செய்கிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!




ஜூன் 2, 2015 அன்று மிர்யானாவுக்கு அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பு பிள்ளைகளே! நான் உங்கள் வழியாக செயல்பட ஆவலாய் இருக்கிறேன் என் பிள்ளைகளே, என் சீடர்களே. இறுதிநாளில் நமக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மகிழ்வான இடத்திற்கு உங்களை கூட்டிச்சேர்ப்பேன். நான் உங்களுக்காக செபிக்கிறேன். உங்கள் நற்செயல்கள் மூலம் மற்றவர்களை மனமாற்றுங்கள். ஏனென்றால் மனுமகனின் காலம் வந்துவிட்டது, உண்மையின் காலம் அண்மித்துவிட்டது. என் அன்பு உங்களில் செயல்படும். நான் உங்களை கருவியாக பயன்படுத்துவேன். என் மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள். நான் ஆசைப்படுவது அனைத்தும் உங்களின் நன்மைக்கே; விண்ணகத்தந்தை ஏற்படுத்திய முடிவில்லா நன்மைக்கே. என் பிள்ளைகளே! என் சீடர்களே! நீங்கள் இயேசுவின் அன்பை அறியாதவர்களோடும், என்னை அம்மா என்று அழைக்காதவர்களோடும் இம்மண்ணுலகில் வாழ்ந்துவருகிறீர்கள். ஆனால் அவர்கள் முன் உண்மையின் சாட்சியாக இருக்க பயப்படாதீர்கள். அஞ்சாத, தைரியமான சாட்சியாக இருக்கும்போது, உண்மை ஒருநாள் வெல்லும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நம் பலம் அன்பில்தான் இருக்கிறது. அன்பு என்றால் மனமாற்றம், அன்பு என்றால் மன்னிப்பு, அன்பு என்றால் செபம், அன்பு என்றால் தியாகம், அன்பு என்றால் இரக்கம், கருணை. உங்கள் செயல்கள், பணிகள் வழியாக எப்படி மற்றவரை அன்பு செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தால், மற்றவரை மனமாற்றுவது எளிது. மற்றவரின் ஆன்மாவில் இயேசுவின் ஒளியைப் பாய்ச்சுவதும் எளிது. உங்களுக்கு நன்றி. உங்களுடைய ஆயர்களுக்காக, குருக்களுக்காக செபியுங்கள். அவர்கள் என் மகனைச் சார்ந்தவர்கள். ஏனென்றால் அவரே அவர்களை அழைத்தார். குருக்களுக்காகவும், ஆயர்களுக்காகவும் செபியுங்கள். நற்செய்தி அறிவிக்க ஆற்றலையும், தைரியத்தையும் இயேசு அவர்களுக்கு அருள செபியுங்கள்.




2015-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களுடன் இருப்பதுடன் மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்: செபியுங்கள் மற்றும் செபத்தின் பலத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் இதயத்தை திறவுங்கள் எனது அன்பான பிள்ளைகளே, இறைவன் அதைத் தனது அன்பால் நிரப்புவதுடன் அதன்மூலம் நீங்கள் மற்றவர்களுக்கு மகிழ்வைக் கொடுங்கள். உங்களுக்கான சான்றிதழ்கள் பலமாக இருப்பதுடன், நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும், இறைவனைப் போன்று மென்மையானவைகளாக இருக்கட்டும். நீங்கள் மனம்திரும்பி இறைவனை முதல் இடத்தில் வைக்கும் காலம் வரை, நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக செபித்துக்கொள்வேன். நன்றி நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!




2015-05-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்கள் இதயங்களைத் திறப்பதுடன் நான் உங்களை எவ்வாறு விருப்பத்துடன் அதிகம் அன்பு செய்கிறேனோ, அதேபோன்று எனது மகனையும் நீங்கள் அன்பு செய்வதை உணர முயலுங்கள். நீங்கள் அவரை நன்கு அறிந்து கொள்வதை நான் விரும்புகிறேன் - அதாவது அவரே அன்பின் வடிவம். நான் உங்களை அறிவேன் எனது பிள்ளைகளே. நான் உங்கள் வேதனைகள் மற்றும் துன்பங்களை அறிவேன், இவைகளை நான் அனுபவித்துள்ளேன். நான் உங்கள் மகிழ்வில் சிரிப்பதுடன், உங்கள் வேதனைகளில் உங்களுடன் சேர்ந்து அழுகின்றேன். நான் உங்களை விட்டு ஒருபோதும் விலகமாட்டேன். நான் எப்போதும் தாயின் பரிந்துரையை உங்களுக்காக செய்து கொள்வேன். எனக்கு அதாவது, தாய்க்கு, உங்கள் திறந்த இதயமே தேவைப்படுகின்றது, இதன்மூலம் நீங்கள் அறிவாற்றலையும் எளிமையையும் எனது மகனின் அன்பில் பரவச்செய்வீர்கள். எனக்கு உங்கள் திறந்த, நலமான மற்றும் இரக்கமுள்ள உள்ளம் தேவைப்படுகின்றது. நீங்கள் எனது மகனுடன் ஒன்றித்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன், ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் எனது அனைத்துப் பிள்ளைகளுடனும் அதிஸ்டத்தை பகிர்ந்து கொள்வதில் எனக்கு உதவுங்கள். எனது தூதர்களே, எனக்கு நீங்கள் தேவைப்படுகின்றீர்கள், இதன்மூலம் எனது இதயம், அன்று எத்தனையோ துன்பங்களை அனுபவித்தது, இன்றும் அனுபவித்துக்கொண்டிருப்பது, அன்பில் வெற்றி கொள்ள முடியும். உங்கள் ஆயர்களின் தூய வாழ்விற்காக மன்றாடுங்கள், இதன்மூலம் அவர்கள் எனது மகனின் பெயரால் அற்புதங்களை ஆற்ற முடியும், ஏனென்றால் தூய வாழ்வு அற்புதங்களை ஏற்படுத்தும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.




2015-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை நலமான வழியில் நடத்திச்செல்ல உங்களுடன் உள்ளேன். உங்கள் ஆன்மா சலனப்படுகின்றது, ஏனென்றால் எண்ணங்கள் பலவீனமானவையாகவும் அனைத்து முரண்பாடான விடயங்களாலும் இளைத்துப்போயுள்ளது. எனது அன்பான பிள்ளைகளே, தூய ஆவியிடம் மன்றாடுங்கள், அவர் உங்களில் மாற்றங்களைக் கொணர்ந்து அவரது விசுவாசம் எனும் பலத்தால் உங்கள் நம்பிக்கையை திடமாக்குவார், இதன்மூலம் நீங்கள் சாத்தானுக்கு எதிரான போரில் உறுதியாக இருப்பீர்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக எனது மகன் இயேசுவிடம் மன்றாடுகிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!




2015-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் அனைத்திலும் உயர்ந்தவர் என்னை, உங்களுடன் இருப்பதற்கும் உங்களை மனம்திரும்பும் வழியில் நடத்துவதற்கும் அனுமதித்துள்ளார். அநேக இதயங்கள் இரக்கத்தின் முன்பாக தம்மை மூடிக்கொள்வதுடன் எனது அழைப்பிற்கும் தமது காதுகளை மூடிக்கொள்கின்றன. எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் செபிப்பதுடன் சோதனைகளுக்கு எதிராகவும், புதுமைப்படுத்துவது என்ற பெயரில் சாத்தான் வழங்கும் தவறான திட்டங்களுக்கு எதிராகவும் போராடுங்கள். நீங்கள் செபத்தில் உறுதியாக இருப்பதுடன் கைகளில் சிலுவையை வைத்துக் கொள்ளுங்கள், செபியுங்கள், சாத்தான் உங்களைப் பயன்படுத்தாமலும் வெற்றிகொள்ளாமலும் இருக்கட்டும். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக செபிக்கின்றேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!




2015-03-18 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

செறின் மிர்ஜானா றாகிசேவிச்-சொல்டோ 24 ஆனி 1981 தொடக்கம் 25 மார்கழி 1982 வரையாக நாளாந்தம் மரியன்னையின் காட்சிகளைப் பெற்றார். இறுதி நாட்களில் இடம்பெற்ற காட்சிகளின்போது இறை அன்னை, தனது 10வது மறை உண்மையில் நம்பிக்கை கொண்ட இவளுக்கு, வருடத்தில் ஒருமுறை, அதாவது பங்குனி 18ல், காட்சி கொடுப்பதாக வாக்களித்தார். அப்படியே ஒவ்வொரு வருடமும் நிகழ்வதுடன் இவ்வருடமும் நிகழ்ந்தது. பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் செபமாலை வழிபாட்டில் ஒன்றுகூடியிருந்தனர். காட்சி 13.47க்கு ஆரம்பித்து 13.53 வரையாக இடம்பெற்றது. அன்பான பிள்ளைகளே! நிரம்பிய இதயத்தோடு தயவாக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், தயவாகக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், எனது பிள்ளைகளே, உங்கள் இதயத்தை பாவத்திலிருந்து கழுவிக்கொள்வதுடன் கடவுளுக்கும் நிலையான வாழ்விற்கும் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்பதாகும். நான் தயவாகக் கேட்டுக்கொள்வது, நீங்கள் விழித்திருப்பதுடன் உண்மையின் வழியில் நடந்து கொள்ளுங்கள். உலக மாயைகளுக்கும், எனது மகனிடமிருந்து உங்களை விலக வைக்கும் கூட்டு முயற்சிகள் அனைத்திற்கும் இடம்கொடுக்காதீர்கள். நான் உங்களை நிறைந்த அறிவுள்ளவர்களாக வழிநடத்துவேன், இதன்மூலம் நீங்கள் உண்மையான சமாதானத்தைக் கண்டுகொள்வீர்கள். நேரத்தை இழந்துவிடாதீர்கள், உரிய காலத்திலேயே நீங்கள் வானகத் தந்தையிடம் ஒரு அடையாளத்தைத் தயவுடன் கேளுங்கள். அவர் ஏற்கனவே உங்களுக்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்துள்ளார்: அது தான் எனது மகன். ஆகவே, எனது பிள்ளைகளே, செபியுங்கள், இதன்மூலம் தூயஆவி உங்களை உண்மையில் வழிநடத்துவதுடன், அவர் உங்களை அறிந்துகொண்டு, வானகத் தந்தையும் எனது மகனும் உங்களை மேலும் விரும்பச் செய்வார். இதுவே உலகில் ஒரு மகிழ்ச்சியைத் தரும் ஒரு வெளிப்பாடு, நிலையில்லா வாழ்விற்கான கதவு மற்றும் எல்லையில்லா அன்புக்குத் திறவுகோல். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2015-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இரக்கத்தின் காலமான இவ்வேளையில் நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது: அதிகம் செபியுங்கள் மற்றும் குறைவாகப் பேசுங்கள். செபத்தின்போது இறை சித்தத்தைத் தேடுவதுடன் இறைவன் வழங்கிய கற்பனைகளின்படி வாழ்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுடன் சேர்ந்து செபிக்கிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றவதற்கு!




2015-02-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் இங்கு உங்களோடு உள்ளேன். நான் உங்களைப் பார்க்கிறேன், உங்களைப் பார்த்துச் சிரிக்கிறேன், உங்களை அன்பு செய்கிறேன், அதாவது ஒரு தாய் செய்வது போன்று. தூய ஆவியானவர் ஊடாக, அவர் தூய்மையில் இருந்து வருபவர், உங்கள் இதயத்தைப் பார்ப்பதுடன் உங்களை எனது மகனிடம் அழைத்துச் செல்கிறார். பல காலம் தொடக்கம், நீங்கள் எனது தூதுவர்களாக செயற்பட்டு கடவுளை அறியாதவர்களுக்காக செபிக்குமாறு முயற்சித்தேன். செபங்கள் அன்பாகவும், செயல்களை செய்து அதிலிருந்து பலன் கிடைக்கும் செபங்களாகவும் இருக்க வேண்டுமெனத் ஆசிக்கிறேன். ஆகவே அதைப்பற்றி எண்ணி நேரத்தை வீணே செலவழியாது, நீங்கள் எனது தூதுவர்களாக இருப்பதற்குத் தயாராக உள்ளீர்களா என்பதை அறிய விரும்புகிறேன். வானகத் தந்தை ஒவ்வொர்வருக்கும் தீர்ப்பளிப்பார், ஆனால் நீங்கள் அவருடன் அன்பாகவும் அவரைப் போற்றுபவர்களாகவும் உள்ளீர்கள். எனக்குத் தெரியும் இவை அனைத்தும் உங்களை குழப்பமடையைச் செய்யலாம், ஆனால் நான் இங்கு வருகைதந்து உங்களுடன் இருப்பதற்கு மகிழ்ச்சியுடனும் செபத்துடனும் மன்றாடுங்கள், இதன்மூலம் நீங்கள் மறு உலகிற்காக செயற்பட ஆயத்தமாக உள்ளீர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். எனது அன்பு உங்கள் மேல் உள்ளது. செபியுங்கள், எனது அன்பு அனைத்து இதயங்களையும் வெல்லட்டும், அந்த அன்பு மன்னிப்பாக மாறட்டும், அது முடிவில்லாமல் தொடரட்டும். நான் நன்றி கூறுகிறேன்.




2015-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை அழைக்கிறேன், உங்கள் அழைத்தலை செபத்தின் மூலம் வாழ்ந்து கொள்ளுங்கள். இப்போது, முன்னர் எப்போதும் இல்லாதவாறு, சாத்தான் தொற்றும் காற்றைப் போல மனிதருக்குள் வெறுப்பு மற்றும் அமைதியைக் குலைக்க விரும்புகிறது. இறைவனையும் செபத்தையும் பலர் தேடாததால் பல இதயங்களுக்கு மகிழ்ச்சி இல்லாத நிலை உள்ளது. நாளுக்கு நாள் வெறுப்பும் யுத்தமும் வளர்ந்து செல்கின்றது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களை அழைக்கிறேன், மீண்டும் புனிதத் தன்மை மற்றும் அன்பை ஆச்சரியப்படத்தக்க விதத்தில் கொடுக்க ஆரம்பியுங்கள், இதற்காகவே நான் உங்களிடம் வந்துள்ளேன். ஒன்றிணைந்து அன்பை மற்றும் மன்னிப்பை வழங்குவோம், இதை மனிதத்தன்மையுடன் வாழ விரும்பும் அனைவரும் அறிவார்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நாளை நன்றாக அமையும் என்ற நம்பிக்கையை எப்போதும் உங்கள் இதயத்தில் இருத்திக் கொள்ளுங்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக.




2015-01-02 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! இங்கு நான் உங்கள் தாயாக இருந்து, உண்மையை அறிந்து கொள்ள உதவ விரும்புகிறேன். நான் உலகில் வாழ்ந்தபோது, உண்மையை அறிந்திருந்தேன், இதனால் உலகில் ஒரு மோட்சத்தைக் கண்டுகொண்டேன். ஆகவே இதுபோன்றே நீங்களும் அடையுமாறு எனது பிள்ளைகளே, உங்களை நான் வாழ்த்துகிறேன், வானகத் தந்தை, உண்மைகளைக் கண்டுகொண்டு அதனால் நிரம்பிய தூய இதயத்தையே விரும்புகிறார். அவர், நீங்கள் அனைவரும் ஒருவரை ஒருவரும், சந்திப்போரையும் அன்பு செய்வதை விரும்புகிறார், ஏனென்றால் எனது மகன் உங்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். இதுவே உண்மையைத் தெரிந்துகொள்வதன் ஆரம்பமாகும். உங்களுக்கு பல பிழையான உண்மைகள் தெரிவிக்கப்படும். நீங்கள் அவற்றை நோன்பு, செபம், மன்னிப்பு மற்றும் விவிலிய வார்த்தைகளால் நிரப்பப்பட்ட இதயத்தால் ஒதுக்கிவிடுங்கள். எனது மகன் உங்களுக்கு விட்டுச் சென்றதே ஒரே ஒரு உண்மை, அதை நீங்கள் மதித்து நடந்து கொள்ளுங்கள். நான் எவ்வாறு நடந்து கொண்டேனோ அவ்வாறே அன்பு செய்யவும் பிறருக்கு வழங்கவும் முன்வாருங்கள். எனது பிள்ளைகளே, நீங்கள் உண்மையாக அன்பு செய்வீர்களானால் என்னையும் எனது மகனையும் உங்கள் இதயத்தில் வாழச் செய்வதுடன், எனது மகனின் வார்த்தைகளை உங்கள் வாழ்வின் வழிகாட்டியாகக் கொள்வீர்கள். எனது பிள்ளைகளே, நான் உங்களை அன்பின் தூதர்களாகவும், எனது அனைத்துப் பிள்ளைகளுக்கு உதவுபவர்களாகவும் பாவிப்பதுடன் இதன்மூலம் அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளட்டும். எனது பிள்ளைகளே, நான் எப்பொழுதும் எனது மகனின் நோக்கிற்காக செபிக்கிறேன், அதேபோன்று செபிக்குமாறு உங்களையும் கேட்டுக் கொள்கின்றேன். செபியுங்கள், உங்கள் மேய்ப்பர்கள் எனது மகனின் அன்பில் மிளிரட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2014-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை என் கைகளில் ஏந்தி எனது மகன் இயேசுவிடம் உங்களுக்கும் உங்கள் மத்தியிலும் அமைதி உண்டாக வேண்டுகிறேன். செபியுங்கள், எனது மகனிடம் செபியுங்கள், இதன்மூலமே அவரது இதயத்திலிருந்து அமைதியும், மகிழ்வும் மீண்டும் கிடைக்கும். நான் உங்களுக்காக செபிக்கின்றேன், இதனால் நீங்கள் மென்மேலும் செபிக்கத் தூண்டப்படுவீர்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!




2014-12-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நீங்கள் நினைவிற் கொள்கின்றீர்களா, அதாவது நான் உங்களுக்கு கூறுகிறேன், அன்பே வெற்றிபெறும். எனக்குத் தெரியும், உங்களில் பலர் நம்பிக்கையை இழந்து விடுகின்றீர்கள், ஏனென்றால் உங்களைச் சுற்றி துன்பம், வேதனை, சந்தேகம், பொறாமை... போன்றவைகளையே காண்கின்றீர்கள். ஆனால் நான் உங்கள் அன்னை. நான் மோட்ச இராச்சியத்தில் இருக்கிறேன், இருப்பினும் இங்கு உங்களுடனும் உள்ளேன். எனது மகன் உங்களுக்கு உதவுவதற்காக மீளவும் என்னை அனுப்பியுள்ளார். ஆகவே நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள், மாறாக என்னைப் பின்பற்றுங்கள், எனது இதயத்தை வென்றுவிடுவது கடவுளின் பெயராலேயே நடக்கக்கூடியது. எனது அன்பான மகன் எப்படி எப்போதும் உங்களை நினைப்பது போலவே தற்போதும் உங்களை நினைவிற் கொள்கிறார். அவரில் நம்பிக்கை கொள்வதுடன் அவரை அன்பு செய்யுங்கள். அவரே உலகின் வாழ்வாய் இருக்கிறார். எனது பிள்ளைகளே, எனது மகனை அன்பு செய்வதென்பதன் அர்த்தம், விவிலிய நற்செய்தியின்படி வாழ்வதாகும். இது இலகுவானதல்ல. இதன் அர்த்தம்: அன்பு, மன்னிப்பு மற்றும் இழத்தல் என்பதாகும். ஆகவே நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள், மாறாக என்னைப் பின்பற்றுங்கள். மீண்டும் உங்களிடம் நான் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன், உலகின் முதல் ஆயரான எனது மகனையும் மற்றும் அவரது குடும்பமான முழு உலகையும் எப்பொழுதும் கண்டுணர்ந்து கொள்ள உங்கள் ஆயர்களுக்காகச் செபியுங்கள். நான் நன்றி கூறுகிறேன்"




2014-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று உங்களை விசேடவிதமாக செபிக்க அழைக்கிறேன், செபியுங்கள், எனது அன்பான பிள்ளைகளே, அதன்மூலம், நீங்கள் யார் என்பதையும் நீங்கள் எதை நோக்கிப் பயணிக்கின்றீர்கள் என்பதையும் விளங்கிக் கொள்வீர்கள். நீங்கள் மகிழ்ச்சிச் செய்தியை அறிவிப்பவர்களாகவும் மனிதர்களுக்கு நம்பிக்கை கொடுப்பவர்களாகவும் இருந்து கொள்ளுங்கள். அன்பிற்காக ஏங்கும் அனைவருக்கும் அன்பைக் கொடுங்கள். எனது பிள்ளைகளே, நீங்கள் இறைவனின் சித்தத்திற்கு ஏற்ப திறந்த மனதுடன் செபிக்கும்போது, நீங்கள் அவருக்கு அனைத்துமாகி, அனைத்தையும் நிறைவேற்றுவதுடன் அவர் உங்களுக்கு நித்திய வாழ்வை வழங்கி ஆசீர்வதிப்பார். நான் உங்களுடன் இருப்பதுடன் நாளாந்தம் எனது மகன் இயேசுவிடம் உங்களுக்காகப் பரிந்து பேசுகிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!




2014-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் எனது மகனின் ஆசீரோடு, என்னை அன்பு செய்து என்னைப் பின்பற்ற முயற்சிக்கும் உங்கள் அனைவரோடும் உள்ளேன். அத்துடன் என்னை ஏற்றுக்கொள்ளாதவர்களோடும் இருக்க விரும்புகின்றேன். உங்கள் அனைவருக்காகவும் நான் எனது இதயம் நிறைந்த அன்பைத் திறந்து கொள்வதுடன், உங்கள் அன்னையாக எனது கரத்தால் ஆசீர் வழங்குகின்றேன். நீங்கள் விளங்கிக்கொள்ளும் அளவில் நான் உங்கள் ஒரு அன்னையாக உள்ளேன். நான் உங்களைப்போல் வாழ்ந்து, துன்ப துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிகளை அனுபவித்தேன், தமது துன்பங்களுடன் வாழ்பவர்கள் எனது துன்ப துயரங்களையும் அறிவார்கள், ஆனால் இருட்டில் வாழ்பவர்கள் எனது மகனின் ஒளியின் பிரகாசத்தை உள்ளேவர அனுமதிப்பதில்லை. ஆகவேதான் நீங்கள் எனக்குத் தேவைப்படுகின்றீர்கள், நீங்கள் அந்து ஒளியின் பிரகாசத்தைப் பெற்றவர்கள், நீங்கள் இந்த உண்மையை விளங்கிக் கொண்டவர்கள். உங்களைää எனது மகனிடம் மன்றாடுமாறும், அதன்மூலம் உங்கள் ஆன்மாவை வளப்படுத்தவும்;, உண்மையான தெய்வீகத்தை அடைந்து கொள்ளவும் அழைக்கிறேன். எனக்கு உதவிசெய்வது என்பதன் அர்த்தம், எனது மகனின் அன்பை இதுவரை அறிந்து கொள்ளாதவர்களுக்காக செபிப்பதாகும். இவர்களுக்காக செபிப்பதால் நீங்கள் எனது மகனை அன்பு செய்வதாகவும் அவரைப் பின்பற்றுவதாகவும் அவருக்குக் காட்டிக் கொள்கின்றீர்கள். சாத்தான் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை என எனது மகன் எனக்கு உறுதியளித்துள்ளார், நீதியாளர்களின் ஆன்மாவைக் கொண்ட நீங்கள் இதயத்திலிருந்து எழுப்பும் செபங்களால், உங்கள் துன்ப துயரங்களை எனது மகனிடம் கூற முயற்சிப்பதுடன், வாழ்வு ஒரு இமைப்பொழுதில் முடிந்து விடும் ஆனால் வானக இராச்சியம் நிரந்தரமானது என்பதனை விளங்கிக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் உங்களை எனது தூதர்களாக ஆக்குவதுடன், நீங்கள் எனது இதயத்தை வெற்றி கொள்ள வழிசமைக்கும். ஆகவே, எனது பிள்ளைகளே, உங்கள் இதயத்தைத் தூய்மைப்படுத்தி எனது மகனிடம் செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்!




2014-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இந்தக் காலத்தில் இரக்கத்திற்காக செபிப்பதுடன், ஏற்கனவே ஒளியில் உள்ள புனிதர்களின் வேண்டுதல்களைத் தேடிக்கொள்ளுங்கள். அவர்கள் நாளுக்கு நாள் உங்களுக்கு முன்மாதிரிகையாக இருப்பதுடன் நீங்கள் மனம்திரும்ப உற்சாகம் வழங்கட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் வாழ்வு குறுகியது மற்றும் அழியக்கூடியது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆகவே, முடிவில்லா வாழ்வை நினைத்து உங்கள் இதயத்தை செபத்தில் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் எனது மகனின் முன்பாக உங்கள் ஒவ்வொருவருக்காகவும் வேண்டிக்கொள்வதுடன், விசேடமாக என்னையும் எனது மகனையும் புனிதப்படுத்தும் அனைவருக்காகவும் மன்றாடுவேன். நன்றி நீங்கள் எனது அழைப்பை பின்தொடர்வதற்காக!




02-10-2014 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பு பிள்ளைகளே! தாயன்போடு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள். தொடக்கத்திலிருந்தே என் மகன் இயேசு விரும்பியதைப்போல வானகத் தந்தையையும், அடுத்திருப்பவரையும் அன்பு செய்வதே உங்கள் முதன்மையான கடமையாக கொள்ளுங்கள். இதுவே உலகத்திலுள்ள அனைத்திலும் சிறந்தது.
என் அன்பு பிள்ளைகளே! இக்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள், அறிகுறிகள் என்னவென்பதை நீங்கள் உணரவில்லையா? உங்களை சுற்றி நடக்கும் அனைத்து சம்பவங்களும் இவ்வுலகில் அன்பு குறைந்துவருகிறது அல்லது அன்பு இல்லாமையால் நடக்கிறது என்பதை காட்டவில்லையா? உண்மையான மதிப்பீடுகளில்தான் மீட்பு உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். வானகத்தந்தையின் வல்லமையை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவரை அன்பு செய்யுங்கள்; அவரை மகிமைப்படுத்துங்கள். என் மகன் யேசு விட்டுச்சென்ற பாதையில் நடங்கள்.
என் பிள்ளைகளே! என் சீடர்களே! நீங்கள் என்னை எப்போதும் சூழ்ந்து நிற்பதற்கான காரணம், உங்களின் தாகமே. உங்களின் தாகம் அமைதிக்கான தாகம்; அன்பிற்கான தாகம்; மகிழ்ச்சிக்கான தாகம். என்னுடைய கைகளிலிருந்து பருகி அந்த தாகத்தைத் தணித்துக்கொள்ளுங்கள். என் கைகள் வழியாக என் மகன் இயேசுவே உங்களுக்கு வற்றாத ஜீவ ஊற்றை அருள்கிறார். அவர் உங்கள் விசுவாசத்தை புதுப்பிப்பார். உங்கள் மனதை தூய்மையாக்குவார். தூய்மையான இதயத்தை இயேசு அன்பு செய்கிறார். தூய்மையான இதயமே இயேசுவை நாடும். தூய இதயம் தாழ்ச்சி நிறைந்தது; உறுதியான விசுவாசம் கொண்டது. அத்தகைய தூய இதயத்தை அணிந்துகொள்ளவே நான் உங்களிடம் கேட்கிறேன். "நான் உலகனைத்திற்கும் தாய்" என்று இயேசு கூறுகிறார். உங்களின் வாழ்வு, செபம், தியாகம் அனைத்தினாலும் என்னை உங்கள் அன்னையாக நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். நிச்சயம் நான் உங்களை அந்த வற்றாத வாழ்வுதரும் ஜீவ ஊற்றுக்கு அழைத்துச்செல்வேன்.
என் அன்பான பிள்ளைகளே உங்களுக்கு நன்றி! உங்களின் குருக்கள் தங்களது புனித கரங்களால் உங்களுக்கு ஒவ்வொரு திருப்பலியின்போது என் மகனின் உடலையும் இரத்தத்தையும் உங்களுக்கு தருகிறார்கள். இதற்காக இயேசுவின் தியாகத்தை எண்ணி அவருக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் குருக்கள் அதை ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்து, புதுப்பித்து வழங்குவதால் அவர்களுக்கும் நன்றி கூறுங்கள்.




2014-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை அழைக்கிறேன், நீங்கள் விண்மீன்கள் போன்று உள்ளதுடன், அவைகளின் பிரகாசத்தினால் அயலவர்களுவர்களுக்கு ஒளியையும் அழகையும் கொடுத்து மகிழ்விக்கின்றீர்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் பிரகாசம், அழகு, மகிழ்வு மற்றும் சமாதானம் இன்னும் விசேடமாக உங்கள் செபம், என்னை மற்றும் எனது மகன் இயேசுவை விட்டு விலகி இருப்பவர்களுக்குக் கிடைக்கட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே! உங்கள் விசுவாசத்திற்கும் உங்கள் செபத்திற்கும் மகிழ்வுடன் சாட்சிகளாகுங்கள், இதயத்திலுள்ள உங்கள் விசுவாசத்தின் மகிழ்வால், இறைவனின் பெறுமதிமிக்க சமாதானத்திற்காக தொடர்து செபியுங்கள். நன்றி நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!




2014-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான், உங்கள் அன்னை, மீண்டும் அன்பின் காரணமாக உங்களிடம் வருகின்றேன், வானகத்தந்தையின் முடிவற்ற அன்பிற்கு எல்லையே இல்லை. நான் உங்கள் இதயங்களைப் பார்க்கும் போது, உங்களில் பலர் என்னைத் தாயாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன் நேர்மையான மற்றும் தூய இதயத்துடன் எனது தூதர்களாக இருக்க விரும்புவதை நான் காண்கிறேன். ஆனால், உங்கள் நடுவில் என்னை தாயாக ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் மற்றும் தமது இதயத்தைக் கடினமாக வைத்திருப்பதால் எனது மகனின் அன்பை அறிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கும் அன்னையாக இருக்க விரும்புகிறேன். எனது இதயம் எவ்வளவு துன்பப்படுகின்றது மற்றும் உங்களுக்காக எனது மகனிடம் எந்த அளவில் வேண்டிக் கொள்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. அவர் உங்கள் ஆன்மாவைக் குணப்படுத்துமாறு வேண்டுகின்றேன், இது அவராலேயே முடியும். தூய ஆவியின் வல்லமையை உங்கள்மீது பொழியுமாறு வேண்டுகிறேன். எனது மகன் மட்டுமே உலகின் ஒளியாகவும் மீட்பாகவும் இருப்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென நான் எனது முழு இதயத்தாலும் செபிக்கிறேன். எனது பிள்ளைகளே, எனது தூதர்களே, உங்கள் இதயத்திலும் எண்ணத்திலும் எனது மகனை காவிச் செல்லுங்கள். அதாவது நீங்கள் அன்பை காவிச் செல்லுங்கள். எவர் ஒருவராவது அவரை அறியாதிருந்தால், உங்கள் அன்பில் அவரைக் கண்டுகொள்ளட்டும். நான் என்றும் உங்கள் பக்கத்தில் உள்ளேன். விசேடமாக நான் உங்களை மேய்ப்பவர்கள் பக்கத்தில் இருக்கிறேன், முடிவில்லா வாழ்விற்கு வழிகாட்ட அவர்களை எனது மகனே அழைத்துள்ளார். எனது தூதர்களே, உங்கள் இழப்புகளுக்கும் அன்பிற்கும் நான் நன்றி கூறுகிறேன்.




2014-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! எனது விடயத்திற்காக மன்றாடுங்கள், சாத்தான் எனது திட்டத்தை குழப்புவதுடன் உங்களிடமிருந்து அமைதியைக் களவாட முயல்கின்றான். ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள். கடவுள் உங்கள் ஒவ்வொருவரது வேண்டுதலையும் கேட்கட்டும். உங்கள் இதயத்தை இறைவனின் சித்தத்திற்காக திறந்து வையுங்கள். நான் உங்களை அன்பு செய்வதுடன் உங்கள்மீது அன்னையின் ஆசீரை வழங்குகிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைபப் பின்பற்றுவதற்கு!




02 ஆகஸ்டு 2014 நாளின் அன்னை மரியாவின் செய்தி

அன்புப் பிள்ளைகளே!
நான் என்றும் உங்களோடு இருக்கிறேன்; நன்மை என்றும் வெல்லவேண்டும். அதற்காகவே உங்களோடு இருக்கிறேன். நன்மைத்தனம் என்ற அந்த இலக்கை அடைய இப்போது உங்களால் இயலாமல் போகலாம். என் மகன் இயேசு குழந்தை பருவத்தில் என்னோடு வளரும்போது எனக்கு சொன்னதை சில நேரங்களில் புரிந்துகொள்ள இயலாமல் போனதுபோலவே, இப்போதும் உங்களால் பலவற்றை புரிந்துகொள்ள இயலாது. இருப்பினும் நான் என் மகன் இயேசுவை விசுவசித்தேன், அவரை பின்பற்றினேன். நான் உங்களைக் கேட்டுக்கொள்வது: நீங்களும் என்னை நம்பி, பின்பற்றுங்கள். என் பிள்ளைகளே! என்னை பின்பற்றுங்கள் என்று நான் சொல்வதன் பொருள் என் மகன் இயேசுவை அன்புசெய்யுங்கள் என்பதுதான். ஒவ்வொரு மனிதரிலும் இயேசுவைக் கண்டு எந்த வித வித்தியாசமுமில்லாமல் எல்லோரையும் அன்பு செய்யவேண்டும். இதைச் செய்ய நீங்கள் தகுதிபெற வேண்டுமாயின், உங்களை ஒறுத்தல், நோன்பு, செபம் மூலமாக புதுப்பித்துக்கொள்ளுங்கள். உங்களை நற்கருணை திருப்பலி கொண்டாட்டத்திற்கு அழைக்கிறேன். இதுவே உங்கள் ஆன்மாவை வாழவைக்கும் உணவு. இவ்வுலகில் அன்பு, இரக்கம், கருணை போன்ற புண்ணியங்களை பரப்பும் ஒளியின் திருத்தூதர்களாக வாழ உங்களை அழைக்கிறேன்.

என் பிள்ளைகளே! உங்கள் வாழ்வை நித்திய வாழ்வோடு ஒப்பிடுகையில் ஒரு சிறு நொடிப்பொழுதே. என் மகன் இயேசுவின் முன்னால் நீங்கள் நிற்கும்போது, அவர் உங்கள் இதயங்களில் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை பார்ப்பார். இவ்வுலகில் அன்பை விளைவிக்கவேண்டுமாயின், ஒற்றுமை உங்களிலே வளரவேண்டும். உங்களிடையிலும், உங்களுக்கும் உங்கள் ஆயர், குருக்களிடையிலும் ஒற்றுமை ஓங்க நான் என் மகன் இயேசுவிடம் மன்றாடுகிறேன். இயேசு, உங்கள் ஆயர்கள், குருக்கள் வழியாக உங்களை, உங்கள் ஆன்மாக்களை புதுப்பிக்கிறார். இதை மறவாதீர். உங்களுக்கு நன்றி!




ஜூலை 25, 2014 அன்று அன்னை மரியாவின் செய்தி

அன்புப் பிள்ளைகளே!
கடவுளின் அருளால் நீங்கள் வாழ்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கவில்லை. இந்நேரத்தில் ஆண்டவர் மனமாற உங்களுக்கு அறிகுறி தருகிறார். கடவுளிடம் திரும்புங்கள். கடவுளிடம் மன்றாடுங்கள். செபத்தின் மூலம் கடவுளிடம் இணையுங்கள். செபம் உங்கள் இதயங்களை ஆட்சி செய்வதாக! உங்கள் குடும்பங்களை, குழுமங்களை ஆட்சி செய்வதாக! ஏனெனில் செபத்தின் வாயிலாக தூய ஆவியானவர் உங்களை வழிநடத்துவார். கடவுளின் விருப்பத்தை, திட்டத்தை தூய ஆவியானவர் உங்களுக்கு அறிவுறுத்துவார். நான் என்றும் உங்களோடு இருக்கிறேன். மேலும் புனிதர்களோடும், வானதூதர்களோடும் சேர்ந்து உங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி செபிப்பேன். எனக்கு செவிமடுத்தமைக்கு நன்றி




2014-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இங்கு ஒன்றுகூடியிருக்கும் உங்களின் அன்னையாகிய நான், அனைத்துலகின் தாய், உங்களுக்கு அன்னையின் ஆசீரை வழங்குவதுடன் பணிவான வழிகளில் செல்லுமாறு உங்களை அழைக்கின்றேன். இந்தப் பாதையே எனது மகனின் அன்பை அறிந்துகொள்வதற்கு வழிசமைக்கும். எனது மகன் அனைத்து அதிகாரமும் கொண்டவர், அவரே அனைத்துமாக உள்ளார். எனது பிள்ளைகளே, நீங்கள் இதைத் தெரிந்து கொள்ளாது விட்டால், உங்கள் ஆன்மாவை இருளே ஆட்சிசெய்யும். பணிவாக வாழ்தல் மட்டுமே உங்களை குணமாக்க முடியும். எனது பிள்ளைகளே, நான் எப்பொழுதும் பணிவுடனும், துணிவுடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்தவள். கடவுள் எம்மிலும் நாம் கடவுளிலும் இருக்கிறோம் என்பதை நான் அறிந்துள்ளதுடன், இதையே நான் உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன். நீங்கள் அனைவரும் என்னுடன் எப்பொழுதும் இருப்பதையே விரும்புகிறேன், ஏனென்றால் நீங்கள் என்னில் ஒரு பாகமாக உள்ளீர்கள். உங்கள் வழிகளில் நான் இருந்து உதவுவேன். எனது அன்பு ஒரு போர்வை போன்று உங்களை மூடிக்கொள்வதுடன், எனது ஒளி உங்களுக்கு வழிகாட்டி இறைவனின் ஒளியைக் காட்டட்டும். அன்பால், நீங்கள் பணிவுக்கு முன்னிலை வழங்கி, இருள் உள்ள இடங்களில் ஒளியைப் பரப்புங்கள். நீங்கள் உலகின் ஒளியாக உள்ள எனது மகனிடம் வாருங்கள். நான் எப்பொழுதும் உங்கள் மேய்ப்பர்களுடன் இருப்பதுடன், அவர்கள் பணிவுக்கு முன்மாதிரிகையாகத் திகழ்வார்களாக. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்"




2014-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! அனைத்திலும் உயர்ந்தவர், நான் உங்களுடன் இருப்பதற்கும் எனது வேண்டுதலின் மூலம் உங்களை அமைதியின் பாதையில் நடத்திச் செல்வதற்கும் எனக்கு இரக்கம் காட்டியுள்ளார். உங்கள் இதயமும் உங்கள் ஆன்மாவும் சமாதானத்திற்கும் அன்புக்கும், கடவுளுக்கும் அவரது மகிழ்வுக்கும் ஏங்குவதாக இருக்கட்டும். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள்! செபங்களில் நீங்கள் வாழ்வின் அறிவைக் கண்டடைவீர்கள். நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பதுடன் உங்களுக்காக எனது மகன் இயேசுவின் முன்பாக பரிந்துரைப்பேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!




2014-06-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இந்த அமைதியற்ற காலத்திலே, நீங்கள் எனது மகனைப் பின்தொடரவும், அவரைப் பின்பற்றவும் மீண்டும் உங்களை அழைக்கிறேன். நான் உங்களது வேதனைகளை, துன்பங்களை மற்றும் தேவைகளை அறிந்துள்ளேன், அவற்றுக்காக எனது மகனில் நீங்கள் ஆறுதலடைவதுடன், அவரில் அமைதியையும் சுகவாழ்வையும் பெறுவீர்களாக. எனது பிள்ளைகளே, மறக்க வேண்டாம், எனது மகன் அவரது சிலுவை ஊடாக உங்களை மீட்டதுடன், உங்களை கடவுளின் புதிய பிள்ளைகளாகவும், வானகத் தந்தையை, தந்தாய் என அழைப்பதற்கான சந்தர்ப்பத்தையும் தந்துள்ளார். இதற்காக நீங்கள் இறைவனைப் புகழ்ந்து அன்பு செய்வதுடன், மன்னித்து வாழுங்கள் ஏனென்றால் உங்கள் தந்தை அன்பானவராகவும் மன்னிப்பவராகவும் உள்ளார். செபியுங்கள் மற்றும் நோன்பிருங்கள், ஏனென்றால் இந்த வெளிச்சமே உங்களுக்கு வழிகாட்டுவதாகவும், இந்த வழியே வானகத் தந்தையை அறிவதற்கும் அவரை ஏற்றுக்கொள்வதற்கும் வழிவகுக்கும். நீங்கள் தந்தையை அறிந்து கொண்டால், அவர் மட்டுமே தேவை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். நான் தாயாக மக்கள் இனத்தில் இருக்கும் எனது பிள்ளைகளிடமிருந்து அவர்கள் இறை வார்த்தையை கேட்கவும் அதன்படி நடக்கவும் விரும்புகின்றேன். ஆகவே, எனது பிள்ளைகளே, எனது மகனைப் பின்தொடருங்கள், அவரோடு ஒன்றித்திருங்கள், இறைவனின் பிள்ளைகளாக வாழுங்கள். எனது மகன் உங்களை எவ்வாறு அன்பு செய்கிறாரோ அதுபோன்று நீங்களும் உங்கள் மேய்ப்பர்களை அன்பு செய்யுங்கள், அவரே இவர்களை உங்களுக்குப் பணியாற்றுவதற்காக அழைத்தார். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“




2014-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! செபியுங்கள், அத்துடன் இறைவன் இல்லாவிட்டால் நீங்கள் தூசியைப்போல் இருப்பீர்கள் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். ஆகவே, உங்கள் எண்ணங்களையும் இதயத்தையும் இறைவன் பக்கம் திருப்பி செபியுங்கள். அவரது அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள். இறை ஆவியில் எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் அனைவரும் சாட்சிகளாய் வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் பெறுமதியானவர்கள் என்பதுடன் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களை தூயவர்களாக வாழவும் நித்திய வாழ்வு பெறவும் அழைக்கிறேன். எவ்வாறாயினும், இந்த வாழ்வு என்றோ ஒருநாள் மறைந்து விடும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். நான் உங்களை அன்பு செய்வதுடன் உங்களது புதிய வாழ்விற்காகவும், நீங்கள் மனமாற்றம் பெறவும் அழைக்கிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!“




2014-05-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்கள் அன்னை, நீங்கள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காகவும் உங்கள் தேவைகள் விருப்பங்கள் காரணமாகவும் உங்களோடு உள்ளேன். வானகத் தந்தை உங்களுக்கு தனியாக முடிவெடுக்கவும் தனியாகப் புரிந்து கொள்ளவும் கூடிய சுதந்திரத்தைத் தந்துள்ளார். நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். நான் உங்கள் தாயாக இருக்க விரும்புவதுடன், உங்களுக்கு உண்மையைப் கற்பிப்பதால் நீங்கள் திறந்த இதயத்துடன் அளவிடமுடியாத தூய்மையை அறிந்து கொள்வதுடன், உங்களிடமிருந்து பிறக்கும் ஒளி உங்கள் முன்பாகச் சென்று இருளை அகற்றுவதுடன், அந்த ஒளி நம்பிக்கையைக் கொண்டு வருவதாக. எனது பிள்ளைகளே, நான் உங்கள் வேதனைகளையும் துயரங்களையும் விளங்கிக் கொள்கிறேன். ஒரு தாயை விட எவரால் உங்களை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்? ஆனால் நீங்கள், எனது பிள்ளைகளே? மிகச் சொற்பமானவர்களே என்னைப் புரிந்து கொள்வதுடன் என்னைப் பின்பற்றுகின்றனர். தொலைந்து போனவர்கள் பலர், அவர்கள் எனது மகன் இயேசு குறித்த உண்மையை இதுவரை அறிந்து கொள்ளவில்லை. ஆகவே, எனது தூதர்களே செபியுங்கள் அதனால் பலன் கிடைக்கும். ஒளியைக் கொண்டு வாருங்கள், நம்பிக்கையை இழக்காதீர்கள். நான் உங்களுடன் உள்ளேன். விசேடமாக நான் உங்கள் மேய்ப்பர்களுடன் உள்ளேன். தாயின் இதய அன்புடன் நான் உங்களைப் பாதுகாக்கின்றேன், அது எனது மகன் இயேசு உங்களுக்கு வாக்களித்தவாறு வானகத்திற்கு உங்களை வழிநடத்தட்டும்!




2014-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்கள் இதயத்தை, இறைவன் என் மூலமாக வழங்கும் இரக்கத்திற்காகத் திறவுங்கள், அது வெப்பமான சூரியக் கதிர்களைக் கண்டு விரியும் மலர்கள் போன்று திறக்கட்டும். இறைவனிடமிருந்தும் அவரது அன்பிலிருந்தும் விலகியுள்ளவர்களுக்காக செபிப்பதுடன் அவர்களையும் அன்பு செய்யுங்கள். நான் உங்களுடன் இருந்து உங்களுக்காக எனது மகன் இயேசுவிடம் மன்றாடுவதுடன் நான் உங்களை அளவிட முடியாத விதத்தில் அன்பு செய்கிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!




2014-04-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! தாயின் அன்புடன் நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன், உங்கள் செப மற்றும் தப வாழ்வால் நீங்கள் எனது மகனின் ஒளிக்கு அண்மையாக வர உண்மையாகவே முயற்சிப்பதால், நீங்கள் பாவத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு செபமும், ஒவ்வொரு திருப்பலியும் மற்றும் ஒவ்வொரு நோன்பும் எனது மகனுக்கு நெருக்கமாக உங்களை அழைத்துச் செல்லும் முயற்சி என்பதுடன், அவரது மாட்சிமையை நினைவுபடுத்தி பாவ வாழ்விலிருந்து விடுபடச் செய்கின்றது. இதுவே புதிதாக ஒரு நல்ல தகப்பனும் அவரது பிள்ளைகளும் ஒன்றுசேர்வதற்கான வழியாகும். ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, திறந்த இதயத்துடனும் முழுமையான அன்புடனும் வானகத் தந்தையின் பெயரை உரக்கக் கூவுங்கள், இதனால் அவர் தூய ஆவியை அருளுவாராக. தூய ஆவி மூலமாக நீங்கள் இறை அன்பின் ஊற்றுக்களாக மாறுவீர்களாக. இந்த ஊற்றுக்களை, எனது மகனை அறியாதவர்கள், எனது மகனின் அன்பிலும் சமாதானத்திலும் தாகமாக இருக்கும் ஒவ்வொருவரும் அருந்தட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்! உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள். நான் உங்களுக்காக செபிப்பதுடன், நீங்கள் எப்பொழுதும் அன்னையாகிய எனது கரங்களின் ஆசீரையும் எனது அன்னை இதயத்தின் உதவிகளையும் உணர்ந்து கொள்வதை விரும்புகிறேன்“




2014-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களை மீண்டும் புதிதாக அழைக்கிறேன்: ஆரம்ப நாட்களில் இருந்தது போன்று பாவத்திற்கு எதிராகப் போராட தொடங்குவதுடன், ஒப்பரவு அருட்சாதனத்துக்குச் சென்று உங்களைப் புனிதப்படுத்த முடிவுசெய்யுங்கள். இறைவனின் அன்பு உங்கள் மூலமாக உலகத்திற்குப் பரவ ஆரம்பமாவதுடன், உங்கள் இதயத்தில் சமாதானம் ஆட்கொள்ளத் தொடங்கி, இறைவனின் ஆசீரால் நீங்கள் நிறைவீர்களாக. நான் உங்களுடன் இருப்பதுடன் எனது மகன் இயேசுவிடம் உங்கள் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!“




மிர்ஜானா சொல்டோ 18 பங்குனி 2014ல் பெற்ற வருடாந்தக் காட்சி

செறின் மிர்ஜானா றாகிசேவிச்-சொல்டோ 24 ஆனி 1981 தொடக்கம் 25 மார்கழி 1982 வரையாக நாளாந்தம் மரியன்னையின் காட்சிகளைப் பெற்றார். இறுதி நாட்களில் இடம்பெற்ற காட்சிகளின்போது இறை அன்னை, தனது 10வது மறை உண்மையில் நம்பிக்கை கொண்ட இவளுக்கு, வருடத்தில் ஒருமுறை, அதாவது பங்குனி 18ல், காட்சி கொடுப்பதாக வாக்களித்தார். அப்படியே ஒவ்வொரு வருடமும் நிகழ்வதுடன் இவ்வருடமும் நிகழ்ந்தது. பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் செபமாலை வழிபாட்டில் ஒன்றுகூடியிருந்தனர். காட்சி 13.46க்கு ஆரம்பித்து 13.51 வரையாக இடம்பெற்றது. "அன்பான பிள்ளைகளே! அன்னையாக நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். நான் அன்னையின் அன்புடன் உங்களுக்கு உதவுவதுடன், நீங்கள் உங்கள் இதயத்தைத் திறந்து அதில் நீங்கள் எனது மகனை முதல் இடத்தில் இருத்துவதை விரும்புகிறேன். நீங்கள் எனது மகனிடம் வைத்துள்ள அன்பு மற்றும் உங்கள் செபங்கள் ஊடாக இறைவனின் பிள்ளைகளாக ஒளிரவும், இறை இரக்கத்தால் உங்களை நிரப்பிக் கொள்ளவும் விரும்புகின்றேன். மறைவாகவும் நிழலாகவும் தொடரும், உங்களை நெருங்குவதையும், ஆட்கொள்வதையும் விலக்கிவிட நான் விரும்புகிறேன். நீங்கள் இறை ஆசீரால் நிரப்பப்பட்டு மகிழ்வதைக் காண நான் விரும்புகின்றேன். நீங்கள் மனிதக் குழந்தைகள், நீங்கள் இறைவனின் பிள்ளைகள், நீங்கள் என் பிள்ளைகள். ஆகவே, எனது பிள்ளைகளே, உங்களை எனது அன்பால் நடத்துபவர்கள், உங்களுக்கு அறிவைப் புகட்டுபவர்கள், வானகத்தந்தையின் பாதையைக் காட்டுபவர்களின் வழியில் செல்லுங்கள். என்னை ஏற்றுக்கொள்ளாதவர்கள், என்னைப் பின்பற்றாதவர்கள் மற்றும் தங்கள் இதயத்தைக் கடினமாக்கி வைத்துள்ளவர்களுக்காக என்னுடன் சேர்ந்து செபியுங்கள். உங்கள் மேய்ப்பர்கள் எப்பொழுதும் தமது ஆசீர்வதிக்கப்பட்ட கரங்களால் இறைவனின் மங்கள ஆசீரை உங்களுக்கு வழங்க வேண்டும் என செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்!"




2014-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! நான் தாயாக உங்களிடம் வருகின்றேன், நீங்கள் என்னிடம் அடைக்கலத்தையும், தேறுதலையும், ஆறுதலையும் பெற நான் விரும்புகின்றேன். ஆகவே எனது பிள்ளைகளே, எனது அன்பை எடுத்துச் செல்லும் தூதர்களே, செபியுங்கள்! சலிப்படையாது செபிப்பதுடன், வானகத் தந்தை கொடுப்பார் என்ற முழு நம்பிக்கையுடன் செபியுங்கள். நான் உங்களை நம்புவது போன்று நீங்களும் நம்புங்கள், எனக்குக் கூறப்பட்டது போன்று, நான் ஆசீர்களைக் கொண்டு வருவேன். உங்களது இதயத்திலிருந்து, உதடு வழியாக, எப்பொழுதும், “உம் சித்தத்தின்படியே ஆகக் கடவது“ என வெளிவரட்டும். ஆகவே நம்புங்கள், மற்றும் செபியுங்கள், இதன்மூலம் நான் இறைவனிடம் உங்களுக்காகப் பரிந்து பேசமுடியும், அவர் உங்களுக்கு வானக ஆசீரை வழங்குவதுடன் உங்களைத் தூய ஆவியினால் நிரப்புவார். அதன்பின் நீங்கள் இறைவனை அறியாத அனைவருக்கும் அவரை அறிவித்துக் கொள்ள முடியும். எனது தூதர்களான அன்பார்ந்தவர்களே, நீங்கள் முழு நம்பிக்கையுடன் அப்பா என அழைத்தால் அவர் உங்களுக்கு உதவுவார். உங்கள் மேய்ப்பர்களுக்காக செபிப்பதுடன் அவர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட கரங்களை நம்புங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்!“




2014-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! அநேக மனிதர்களின் இதயத்தில் இறைவன் இல்லாமல் இருப்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள், கேட்கின்றீர்கள், உணர்கின்றீர்கள். அவர்களுக்கு இறைவன் தேவையில்லை, ஏனென்றால் அவர்கள் செபத்திற்கு வெகு தொலைவில் இருப்பதுடன் சமாதானத்தை விரும்பவில்லை. நீங்கள், எனது அன்பான பிள்ளைகளே, செபியுங்கள், இறைவனின் கட்டளைகளின்படி வாழுங்கள். நீங்களே செபமாகுங்கள், நீங்கள் எனது அழைப்பிற்கு ஆரம்பம் முதலே “ஆம்“ என்று கூறியவர்கள். எனது இருப்புடன் இறைவனுக்கு சாட்சியாகுங்கள், மறக்க வேண்டாம், எனது அன்பான பிள்ளைகளே, நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களை அன்பு செய்கின்றேன். நாளுக்கு நாள் நான் உங்கள் அனைவரையும் எனது மகன் இயேசுவிடம் அழைத்துச் செல்கின்றேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!“




2014-02-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! தாயின் அன்புடன் நான் உங்களுக்கு நேர்மையை கற்பிக்க விரும்புகிறேன். இதில் நீங்கள் சரியாக எனது தூதர்களாகச் செயற்படுவதுடன் ஒன்றிணைந்து நேர்மையுடன் இருப்பீர்களாக. நீங்கள் கடவுளின் இரக்கத்தின் ஆசீருக்கு உங்கள் உள்ளத்தைத் திறந்து வைத்திருப்பதை நான் விருமபுகின்றேன். நீங்கள் நோன்பு மற்றும் செபம் மூலம் வானகத் தந்தையின் இயற்கையான மற்றும் பரிசுத்தமான செயல்களைத் தெரிந்து கொள்வதை நான் விரும்புகின்றேன். இதை நிறைவேற்றுவதன் மூலம் எனது மகனின் பாதுகாப்பைப் பெறுவதுடன் எனது தூதர்களாக இருந்து, இறை வார்த்தைகளை அறியாத ஒவ்வொருவருக்கும் அதை அறிவியுங்கள். அதன்போது அந்த வழிகளில் ஏற்படும் தடைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ளுங்கள். எனது பிள்ளைகளே, ஆசீரின் மூலமாக இறைவனின் இரக்கம் உங்கள் மேல் பொழிவதாக. ஆனால் நீங்கள் நோன்பு, செபம், வெளிப்படுத்தல் மற்றும் ஒப்புரவாகுதல் ஊடாக அவைகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். நான் உங்களிடமிருந்து விரும்புவதுபோன்று, உங்களுக்கு இவை பலன் அளிக்கட்டும். உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள், இறைவனின் இரக்கத்தின் கதிர்கள் உங்கள் வழிகளில் பிரகாசிக்கட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்“




2014-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள், இதன்மூலம் உங்கள் செபங்களின் பலன்கள் நீங்கள் சந்திக்கும் ஏனையவர்களுக்கும் கிடைக்கட்டும். தூய விவிலியத்தை உங்கள் குடும்பத்தில் கண்ணுக்குத் தென்படும் இடத்தில் வைப்பதுடன் அதை வாசியுங்கள், இதன்மூலம் சமாதானத்தின் வார்த்தைகள் உங்கள் இதயத்தில் பாயத் தொடங்கட்டும். நான் உங்களுடனும், உங்களுக்காகவும் செபிக்கிறேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இதன்மூலம் நீங்கள் நாளுக்கு நாள் இறைவனின் சித்தத்திற்காக இன்னும் மேலாக உங்களைத் திறந்து கொள்வீர்களாக. நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!“




2014-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! இதன்மூலம் நீங்கள் எனது தூதர்களாக இருக்க முடியும் என்பதுடன், இருட்டில் வாழ்பவர்கள் எனது மகனைக் கண்டுணர ஒளியாகவும், இரக்கமுள்ள இதயமுள்ளவர்களாகவும் இருங்கள். எனது மகன் ஒருவரது இதயத்தில் பிறக்காவிட்டால் உங்களால் எவ்வித உதவியையும் செய்ய முடியாது, அவர் உங்கள் இதயத்தில் அரசராக வீற்றிருக்க வேண்டும். நான் உங்களோடு உள்ளேன். நான் தாயாக உங்களுடன் வருகின்றேன். நான் உங்கள் இதயங்களைத் தட்டுகின்றேன். சிலர் இதை உணராமல் உள்ளதால் இதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக உள்ளனர். நான் செபிக்கிறேன், நீங்களும் செபியுங்கள், எனது அன்பார்ந்த பிள்ளைகளே நீங்கள் எனது மகனின் மாசற்ற இதயத்தை திறப்பதுடன் காணிக்கைகளை அவர் வாக்குறுதியளித்தபடி பெற்றுக் கொள்ளத் திறக்கச் செய்யுங்கள். இதனால் நீங்கள் எனது மகனின் அன்பின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும். இதனால் நீங்கள் எனது தூதர்களாக இருப்பதுடன், சுற்றுப்புறம் எங்கும், இறைவனின் அன்பின் ஊற்றுக்களைப் பரப்ப முடியும். உங்களிடமிருந்து மற்றும் உங்கள் ஊடாக நீங்கள் ஒன்றாக இருப்பதற்கு எனது மகன் அருள் புரிவார். இதன்பின் எனது தாய்க்குரிய இதயம் எனது பிள்ளைகள கொள்ளப்பட்ட- உங்கள் மேய்ப்பர்கள் அனைவருக்குமாக மிகவும் அன்புடன் ஆசீர் வழங்குகின்றேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2013-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! நான் உங்களுக்கு சமாதானத்தின் அரசரைக் கொண்டு வருகிறேன், இதன்மூலம் அவர் உங்களுக்கு அவரது சமாதானத்தை வழங்குவார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபம் செய்யுங்கள், செபம் செய்யுங்கள், செபம் செய்யுங்கள். செபத்தினது பலனை மனிதர்கள் தமது வரலாற்றில் காண்பதுடன், அவை இறை சந்நிதியில் கேட்கப்படுகின்றது. நான், எனது மகன் இயேசுவுடன் சேர்ந்து, உங்கள் அனைவருக்கும் சமாதானத்தின் ஆசீர்களை வழங்குகின்றேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!




2013-12-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

மரியன்னையின் செய்தி 2 மார்கழி 2013 அன்பார்ந்த பிள்ளைகளே! தாயின் அன்புடனும் அன்னையின் பொறுமையுடனும் உங்களது தொடர் பிழைகளையும் தவறல்களையும் நான் பார்க்கிறேன். ஆகவேதான் நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன், முதலில் நீங்கள் உங்களை அறிந்து கொள்ள வேண்டும், அதன்மூலம் உங்களுக்கு வானகத் தந்தையை உங்கள் இதயத்தால் அன்பு செய்வதற்கு எவை அனுமதிக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனது பிள்ளைகளே, தந்தையை நீங்கள் சிலுவைகள் ஊடாக அறிந்து கொள்வீர்கள். ஆகவே, சிலுவைகளை மறுக்காதீர்கள், அதை விளங்கிக்கொள்ள முயல்வதுடன் எனது உதவியுடன் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் சிலுவைகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த உடனேயே, நீங்கள் வானகத் தந்தையின் அன்பை புரிந்துகொள்வீர்கள். நீங்கள் எனது மகனுடனும் என்னுடனும் செல்வீர்கள், நீங்கள் வானகத் தந்தையின் அன்பை அறிந்திராதவர்கள், மற்றும் அவரின் வார்த்தைகளைக் கேட்காதவர்கள், அவரை விளங்கிக் கொள்ளாதவர்கள், அவருடன் செல்லாதவர்கள், அவரை உணர்ந்து கொள்ளாதவர்கள் இடையே வித்தியாசம் காணப்படுவீர்கள். நீங்கள் எனது மகன் குறித்த உண்மையை அறிவதுடன், எனது தூதர்களாக, இறைவனின் பிள்ளைகளாக, மனித சிந்தனைகளுடன் எப்பொழுதும் கடவுளின் புதிய திட்டங்களை தேடுபவர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன். எனது பிள்ளைகளே, செபம் செய்வதுடன் தவமிருங்கள், இதன்மூலம் நான் எதற்காக உங்களை அழைக்கிறேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வீர்கள். உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள் இதன்மூலம் வானகத் தந்தை, உங்களுடன் சேர்ந்த அனைவருக்கும் அன்பைப் பொழிவதைக் கண்டுகொள்வீர்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2013-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று உங்கள் அனைவரையும் செபிக்க அழைக்கிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் இதயக் கதவுகளை செபத்திற்காக அகலத் திறவுங்கள், இதயத்தால் செபிக்கும்போது, மாட்சிமை பொருந்தியவர் உங்கள் மனந்திரும்பலை ஏற்றுக்கொள்வார். நம்பிக்கை உறுதியாகும்போது நீங்கள் உங்கள் முழு இதயத்தாலும் கூறுவீர்கள்: எனது கடவுளே எனக்கு அனைத்தும் என! எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இவ்வுலகில் அனைத்தும் மறைந்துவிடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நன்றி, எனது அழைப்பை நீங்கள் பின்பற்றுவதற்காக!“




2013-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! அன்னையாக உங்களை நான் மீண்டும் அழைக்கிறேன், நீங்கள் அன்பு செய்து, வரம்பெற இடைவிடாது செபிப்பதுடன், வானகத் தந்தையின் அனைத்து நன்மைகளுக்காகவும் அன்பு செய்யுங்கள். நீங்கள் அவரை அன்பு செய்தால், நீங்கள் உங்களையும் உங்களது அயலாரையும் நேசிப்பீர்கள். அதை நிறுத்தாதீர்கள். வானகத் தந்தை ஒவ்வொரு மனிதரிலும் இருக்கிறார், அவர் ஒவ்வொருவரையும் நேசிப்பதுடன், அவர் ஒவ்வொருவரையும் அவர்களின் பெயர் சொல்லி அழைக்கிறார். ஆகவே, எனது பிள்ளைகளே, செபத்தினூடக வானகத் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுங்கள். அவருடன் பேசுங்கள். தந்தையுடன் ஒரு தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம்- எனது பிள்ளைகளே உங்கள் உறவுகளிடமும், எனது விருப்பத்தை மேலும் ஆழமாக்குங்கள். அன்னையாக, நான் உங்களிடமிருந்து விரும்புவது, நீங்கள் அன்பின் மூலம் வானகத் தந்தையை அவமதிக்காது பிறருக்கு உதவி செய்யுங்கள், இதன்மூலம் படிப்படியாக வானகத் தந்தையை கண்டறிவதுடன் அவருக்கு அண்மையாக வருவீர்களாக. எனது பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள், அன்பைப் பகிர்வதற்காக செபியுங்கள், அந்த அன்பு எனது மகனாகவுள்ளது. உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள், இதன்மூலம் அவர்கள் எப்பொழுதும் உங்களுடன் அன்பாக இருப்பார்களாக, எப்படி எனது மகன் இருந்தாரோ, வாழ்ந்து காட்டினாரோ, அதேபோன்று அவர் அவர் தனது வாழ்வை உங்களது மீட்பிற்காக வழங்குவார். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2013-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை இறைவனிடம் செபிக்க முன்வருமாறு அழைக்கிறேன். செபங்கள் உங்களுக்கும், உங்களாலும் புதுமைகளை ஏற்படுத்தும். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இலகுவான இதயத்தோடு நீங்கள் எல்லாம் வல்ல இறைவனை வேண்டும்போது, அவர் தனது பிள்ளைகளாகிய உங்களுக்கு உறுதியைத் தருவார், இதன்மூலம் காற்றில் அசைந்தாடும் கிளைகளைப்போல சாத்தான் உங்களை உலுப்ப முடியாது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே! நீங்கள் கடவுளுக்காக புதியனவற்றை முடிவுசெய்வதுடன் அவரது சித்தத்தின்படி நடந்து கொள்வதால் அவரில் நீங்கள் மகிழ்வையும் சமாதானத்தையும் அடைந்து கொள்வீர்கள். எனது அழைப்பை பின்பற்றுவதற்காக நன்றி!




2013-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பு பிள்ளைகளே,
தாயின் அன்பாலும் பொறுமையாலும் உங்களை அன்பு செய்து, உங்களுடைய அன்பிற்காகவும் ஒற்றுமைக்காகவும் காத்திருக்கின்றேன். நீங்கள் அனைவரும் இறைவனுடைய பிள்ளைகளாகவும் என்னுடைய பிள்ளைகளாகவும் இருக்க செபிக்கின்றேன். ஒரே சமூகமாக நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் என்மகனை அன்பு செய்து விசுவாசவாழ்விற்கு மீண்டும் வர வேண்டுமென்று செபிக்கின்றேன். நான் உங்கள் அனைவரையும் எனது சீடர்களாக ஒருங்கிணைத்து எனது மகனின் அன்பைப்பற்றியும், நற்செய்தியை மற்றவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டுமென்று நான் கற்பிப்பேன். உங்களுடைய தூய்மையான திறந்த உள்ளத்தை என்னிடம் கொடுக்கவும், நான் எனது மகனின் அன்பால் உங்களை நிரப்புவேன். அவருடைய அன்பு உங்களுடைய வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக்கும். நான் உன்னோடு இருப்பேன். வானகத் தந்தையை சந்திக்கும்வரை நான் உங்களோடு இருப்பேன். என்னுடைய பிள்ளைகளே அன்பிலும் விசுவாசத்திலும் வானகத் தந்தையை நோக்கி நடப்பவர்கள் மீட்புப் பெறுவார்கள். பயப்பட வேண்டாம் நான் உங்களோடு இருக்கின்றேன். என்னுடைய மகன் தான் தேர்ந்தெடுத்தவர்களை நம்பியதுபோல் நீங்களும் உங்களுடைய மேய்ப்பர்களை நம்ப வேண்டும். அவர்கள் உங்களை வழிநடத்த பலமும் அன்பும் இருக்க செபிக்க வேண்டும். நன்றி




2013-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை செபிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன். உங்கள் செபங்களின் வடிவம் நாளாந்த வாழ்க்கையை எடுத்துக்காட்டுவதாக அமையட்டும். செபங்கள் உங்களுக்கும், உங்கள் மூலமாகவும் புதுமைகளை வழங்கட்டும், ஆகவே அன்பான பிள்ளைகளே, செபம் உங்களுக்கு மகிழ்வைக் கொடுக்கட்டும். அதன்பின் உங்கள் வாழ்வின் நிலை மேலும் ஆழமாகவும் திறந்த மனதுள்ளதாகவும் இருப்பதோடு, உங்கள் வாழ்வு உங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட ஒரு கொடை என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!




2013-09-02 அன்று அன்னைமரியாளினால் மிரியானாவுக்கு வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே,
நான் உங்களை அன்பு செய்கின்றேன். என் எல்லா பிள்ளைகளையும் அன்பு செய்கின்றேன். நீங்கள் எல்லாரும் தாயாகிய என்னுடைய அன்புக்கு உரியவர்கள். எனக்கு உங்கள் எல்லோரையும் இறைவனுடைய உண்மை அன்பினை நோக்கி வழி நடத்துவதே, என் நோக்கம். அதனால் தான் உங்களை அழைக்கின்றேன். இறைவனுக்காக திறந்த இருதயத்தோடு இறைவனது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து மற்றவர்களை ஆண்டவரின் பாதையில் வழிநடத்தும் எளிமையான அப்போஸ்தலர்கள் எனக்குத் தேவை. இதை செய்வதற்கு, நீங்கள் உபவாசித்து செபிக்க வேண்டும். உங்களை அர்பணித்து வாழவேண்டும். மற்றவர்களுக்கு செவிகொடுக்க கற்று கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்களை இறைவனிமிருந்து பிரிக்கும் எல்லாவற்றையும் விட்டு விலகிவிட கற்று கொள்ள வேண்டும். ஆண்டவரிடம் உங்களை கூட்டி சேர்க்கும் எல்லாவற்றையும் நீங்கள் நாடித்தேட வேண்டும். பயப்பட வேண்டாம், நான் உங்களோடு இருக்கின்றேன். நீங்கள் தனித்தவர்கள் இல்லை. தூய ஆவியானவர் உங்களை பலப்படுத்த் வேண்டுமென்று, உங்களுக்காக வேண்டுகின்றேன்.
நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது, நீங்களும் குணமாக வேண்டுமென்று நான் தூய ஆவியானவிடம் வேண்டுகின்றேன். தூய ஆவி வழியாக, நீங்கள் கடவுளுடைய பிள்ளைகளாகவும் என் அப்போஸ்தலர்களாகவும் இருக்க வேண்டுகின்றேன்.

இறுதியாக மிகுந்த கவலையோடு அன்னை மரியாள் கூறினார்.
இயேசு கிறிஸ்துவாகிய எனது மகனின் பொருட்டு, அவர் தமது சேவைக்காக அழைத்தவர்களை அன்புசெய்யுங்கள். இயேசு அபிஸேகம் செய்த, அவர்கள் வழியாக இறையாசீர் பெற ஆர்வமுள்ளோராய் இருங்கள். சாத்தான் உங்களை ஆளுகை செய்ய அனுமதிக்காதீர்கள். மீண்டும் சொல்கின்றேன், அவர்களுடன் சேர்ந்தே எனது இருதயமும் பேருகவை கொள்ளும். குருக்களிடமிருந்து உங்களை பிரிக்கும் எந்த சாத்தானையும் அனுமதிக்காதீர்கள். நன்றி




2013-08-25 அன்று அன்னைமரியாளினால் மரியாவிற்கு வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்னத பிள்ளைகளே,
இன்றும் சர்வவல்ல கடவுள், உங்களை மனமாற்றத்தினை நோக்கி வழிநடத்த எனக்கு கிருபை தந்துள்ளார். ஒவ்வொரு நாளும் நான் உங்களிடம் மன்மாற்றம் என்ற விதையினை விதைக்கின்றேன். நீங்கள் அன்பில் சமாதானத்தில் செபிப்பதில் தரித்திருங்கள். மண்ணில் விழுகின்ற விதையே நூறு மடங்கு பலன் தரும். நீங்கள் நன்மை செய்திருக்க கூடிய எத்தனையோ சந்தர்ப்பங்களை, தவறவிட்டமையினை முன்னிட்டு மனம் திரும்புங்கள். அதனால், என் சிறிய பிள்ளைகளே, ஊக்கத்திடன் இன்றே முடுவெடுங்கள், "நான் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருப்பேன்" என்று. எனது அழைத்தலுக்கு செவிகொடுத்தமைக்கு நன்றி.




2013-08-02 அன்று அன்னைமரியாளினால் மிர்ஜானாவிற்கு வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே,
நீங்கள் உங்கள் இருதயத்தை என்னை நோக்கி திருப்பும் போது, உங்களால் என்னை புரிந்து கொள்ள முடியும். அப்போது எவ்வளவு அன்புடன் உங்களை நான் அழைக்கின்றேன் என்பதை, எவ்வளவு அன்புடன் உங்களை மாற்ற விரும்புகின்றேன் என்பதை, எவ்வளவு அன்புடன் உங்களை என் மகனுடைய சீடர்களாக மாற்ற விரும்புகின்றேன் என்பதை, எவ்வளவு அன்புடன் உங்களை என் மகன் அருளும் அன்பினால் நிரப்ப விரும்புகின்றேன் என்பதை, என்னுடைய அள்விடமுடியாத தாய்க்குரிய அன்பினை, நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
என் அன்பார்ந்த பிள்ளைகளே செபியுங்கள், செபிப்பதால் விசுவாசம் மலர்கின்றது, அன்பு பிறக்கின்றது. அந்த அன்பினால் சுமக்க முடியாத சிலுவைகளைக்கூட நீங்கள் சுமக்க கூடியதாக இருக்கும், ஏனெனில் நீங்கள் சிலுவையை தனியாக சுமக்க போவதில்லை. என் மகனுடன் சேர்ந்து ஒரே குடும்பமாக, பரலோக தந்தையை புகழ்ந்து பாடுங்கள். செபியுங்கள், அன்பு என்ற கொடைக்காக செபியுங்கள், ஏனெனில் அன்பு எல்லாவற்றையும் மன்னிக்கின்றது. அன்பு எல்லோருக்கும் பணிசெய்யும், அன்பு எல்லாரிலும் சகோதரத்துவத்தை காணும்.

என் அன்பார்ந்த பிள்ளைகளே, என் அப்போஸ்தலர்களே, பரலோக தந்தையை அறியாதவர்களுக்கு, அவரை அறியப்படுத்தி அவரை பின்பெற்றச் செயவத்ற்காக, அவரது அடிமையாகிய என்மூலம் உங்களுக்கு விசுவாசம் என்ற கொடையினை தந்திருக்கின்றார். அதனால் தான் உங்களை அன்பு செய்ய அழைக்கின்றேன். நீங்கள் எல்லோரையும் அன்பு செய்தால் மட்டுமே, அவரது அழைத்தலுக்கு செவிகொடுக்க முடியும். இந்த சிக்கலான நேரத்தில் குருக்களுக்காக செபுயுங்கள், எனது மகனின் நாமம், அவர்களது வழிகாட்டுதலில் மகிமைப்படுத்தப்படட்டும். நன்றி




2013-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பார்ந்த பிள்ளைகளே! எனது இதயத்தில் மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன், உங்கள் நம்பிக்கையில் உறுதியாக வாழுங்கள், நீங்கள் அவருக்கு உங்கள் இதயத்தாலும் உதாரணமாக எல்லா வழியிலும் சாட்சியம் பகர்ந்துள்ளீர்கள். அன்பார்ந்த, பிள்ளைகளே, பாவத்திலிருந்து விலகியும் சோதனைகளில் விழாதபடியும் உறுதியோடு முடிவெடுத்து வாழுங்கள். உங்கள் இதயம் மகிழ்வுடனும் அன்புடனும் மாட்சிமை பொருந்திய இறைவனைப் போற்றட்டும். நான், அன்பார்ந்த பிள்ளைகளே, உங்களை அன்பு செய்வதுடன் உங்களை எனது மன்றாட்டால் அனைத்திலும் மேலாக வழிநடத்துவேன். நன்றி, எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!“




2013-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! தாய்க்குரிய அன்புடன் உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்ää உங்கள் இதயத்தை பரிசளியுங்கள்ää இதன்மூலம் நான் உங்களை எனது மகனிடம் அழைத்தச் செல்வதுடன்ää அவர் உங்களை அனைத்து பாவங்களிலுமிருந்தும்ää உங்களை பிழையாக வழிநடத்தும் மற்றும் உங்கள் அமைதியைக் குலைக்கும் அனைத்துச் சக்திகளிலுமிருந்தும் விடுவிப்பார். நான் உங்களை எனது மகனின் விடுதலை வழியில் அழைத்துச் செல்ல விரும்புவதோடுää கடவுளின் முழுவதுமான சித்தத்தை நிறைவேற்ற விரும்புகிறேன். வானகத் தந்தையுயின் மன்னிப்பை நீங்கள் பெறுவதற்கு உங்களது செபம் மற்றும் ஒறுத்தல்கள் துணைபுரிவதுடன்ää அன்புத் தூதுவர்களாக நீங்கள் பிறப்பெடுக்க வேண்டும். எனது அனைத்துப் பிள்ளைகளும் இவ்வாறு ஆகவேண்டும் என விரும்புகிறேன். இதன்மூலம் வானகத் தந்தையின் நம்பிக்கையை நீங்கள் விரிவாக்கிக்கொள்வதோடு மோட்சத்தின் வாசல்களையும் திறந்து கொள்ள முடியும். அன்பான பிள்ளைகளேää உங்களை மேய்ப்பவர்களுக்கு உங்களது மகிழ்ச்சியையும் அன்பையும் உதவிகளையும் வழங்குங்கள்ää இதையே எனது மகன் பெரியளவில் உங்களிடமிருந்து விரும்புகிறார். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




2013.06.25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! இதயத்தில் மகிழ்ச்சியுடன் நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்வதுடன், நான் உங்களை எனது மாசற்ற இதயத்திற்கு அண்மையாக வரும்படி அழைக்கிறேன், இதனால் நான் உங்களை எனது மகன் இயேசுவிற்கு அண்மையாகக் கொண்டுவர முடியும் என்பதுடன், இதனால் அவர் உங்களுக்கு அவரது சமாதானத்தையும் அன்பையும் வழங்குவதுடன், அதுவே உங்கள் அனைவருக்கும் உணவாக அமையட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் செபங்களை வெளிப்படுத்துங்கள், எனது அன்பை வெளிப்படுத்துங்கள். நான் உங்கள் அன்னையாய் இருப்பதுடன், உங்களை பாதுகாத்து உங்கள் அவசர வேளைகளில் ஒருபோதும் உங்களைத் தனியாக விடமாட்டேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் எனது பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள், இதனால் நான் உங்கள் அனைவரையும் எனது மகனிடம் அழைத்துச் செல்ல முடியும். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!




2013-06-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்த அமைதி இழந்த காலத்தில் உங்களை நான் மீண்டும் எனது மகனின் பாதையில் செல்லவும் அவரைப் பின்தொடரவும் அழைக்கிறேன். வேதனைகள், துன்பம் மற்றும் தேவைகளை நான் அறிந்துள்ளேன், ஆனால் எனது மகன் உங்களைத் தேற்றுவதுடன் அவரில் நீங்கள் சமாதானமும் நலமும் பெற்றுக்கொள்வீர்கள். எனது பிள்ளைகளே, மறக்க வேண்டாம், எனது மகன் உங்களைத் தன் சிலுவையால் மீட்டதுடன் கடவுளின் புதிய பிள்ளைகளாக வாழும் சந்தர்ப்பத்தைத் தந்துள்ளார், இதனூடாக இறைத்தந்தையை நீங்கள் "அப்பா" என அழைக்கின்றீர்கள். இதன்மூலம் நீங்கள் இறைத்தந்தையைப் போற்றுவதுடன், அன்பு செய்து மன்னித்து வாழுங்கள், ஏனென்றால் உங்கள் தந்தை அன்பு செய்பவராகவும் மன்னிப்பளிப்பவராகவும் உள்ளார். செபம் செய்வதுடன் தவமிருங்கள், ஏனென்றால் இந்த வழியே உங்களை வழிநடத்தி இறைத்தந்தையைக் கண்டடைய வைக்கும். நீங்கள் தந்தையைக் காண்பீர்களானால் அவர் உங்களுக்குத் தேவையென்பதை உணர்ந்து கொள்வீர்கள். (இதை இறைஅன்னை உருக்கமாகவும் உறுதியாகவும் கூறினார்): "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கும் ஒரு மக்கள் குழுமத்தின் பிள்ளைகளுக்கு நான் தாயாக இருக்க விரும்புகிறேன்". ஆகவே எனது பிள்ளைகளே, எனது மகனைப் பின்தொடர்ந்து செல்லுங்கள், அவருடன் ஒன்றுபடுங்கள், கடவுளின் பிள்ளைகளாக வாழுங்கள். உங்களை மேய்ப்பவர்களை அன்பு செய்யுங்கள், எப்படி எனது மகன் அவர்களை அன்பு செய்து உங்களுக்குப் பணியாற்ற அழைத்துள்ளாரோ அதே போன்று நீங்களும் அவர்களைக் கனம் பண்ணுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்!




அன்னை மரியாள் 25.05.2013 அன்று மிர்யானவுக்கு அளித்த செய்தி

என் அன்புக் குழந்தைகளே!
உங்களுடைய செபங்கள் மிகவும் அன்புக்குரிய என் மகன் இயேசுவின் இரக்கமி குந்த இதயத்தை திறக்கும ளவுக்கு பலமானதாக இருக்க உறுதியுடனும், திடத்து டனும் மன்றாடும்படிஇன்று நான் உங்களை அழைத்து நிற்கின்றேன்.குழந்தைகளே உங்களுடைய இதயங்கள் கடவுளின் அன்புக்காக திறக்கப்படும்வரை இடைவிடாது செபியுங்கள். நான் உங்க ளோடு இருக்கின்றேன், உங்களுக்காகப் பரிந்து பேசுகின்றேன், உங்களுடைய மன ந்திரும்புதலுக்காகச் செபிக்கின்றேன். என்னுடைய அழைப்பிற்கு செவிமடுத்ததற் காக உங்களுக்கு நன்றி.




அன்னை மரியாள் 02.05.2013 அன்று மிர்யானவுக்கு அளித்த செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே,
திரும்பவும் நான் உங்களை மற்றவர்களை தீர்ப்பிட அன்றி அன்பு செய்வதற்கே அழைக்கின்றேன். என்னுடைய மகன் உங்கள் மத்தியில் வாழ்ந்து;இரட்சிப்பிற்கான வழியை காட்டினார். அவர் தந்தையின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்தது உங்களை இரட்சிக்கவே அன்றி உங்களை தீர்ப்பிட அல்ல. நீங்கள் என் மகனை பின்பற்ற விரும்பினால் நீங்கள் மற்றவர்களை தீர்ப்பிட மாட்டீர்கள் மாறாக பரலோக தந்தை உங்களை அன்பு செய்வதைப் போல நீங்களும் மற்றவர்களை அன்பு செய்வீர்கள். வாழ்கையில் வரும் தாங்கமுடியாத சுமையினால் விரக்தியடையும் போது, தீர்ப்பிடாதீர்கள். பதிலாக நீங்கள் பரலோக தந்தையின் அன்புக்கும் மகிமையிற்கும் உரியவர்களாக இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் அவர் அன்பாய் இருக்கிறார்.

    பிள்ளைகளே நான் காட்டும் வழியில் இருந்து விலகாதிருங்கள், அழிவுக்கு இட்டு செல்லும் நரகத்தினை நோக்கி செல்லாதிருங்கள். செபிபதும் நோன்பிருத்தலும் உங்களை இன்னும் விசுவாசத்தில் உறுதிப்படுத்தும். அப்போது நீங்கள் பரலோக தந்தை விரும்புவதைப் போல வாழ முடியும். நீங்கள் விசுவாசத்தினதும் அன்பினதும் அப்போஸ்தலர்களாக இருப்பீர்கள். உங்கள் வாழ்கை நீங்கள் சந்திக்கும் மற்றவர்களுக்கு அசீர்வாதமாக அமையும். அப்போது நீங்கள் பரலோக தந்தையோடும் என் மகனோடும் ஒன்றித்திருப்பீர்கள்.
        என் பிள்ளைகளே இதுவே உண்மை, இந்த உண்மை உங்களில் மாற்றத்தினை ஏற்படுத்தும், நீங்கள் சந்திக்கும் எல்லோரையும் மாற்றும், இன்னும் என் மகனிடம் வந்து சேராதவர்களையும் மாற்றும். என் மகன் மேய்ப்பர்களை உங்களுக்கு பரிசாக தந்து இருக்கின்றார். அவர்களை நன்கு பராமரியுங்கள், அவர்களுக்காக செபியுங்கள். நன்றி.




அன்னை மரியாள் 25.04.2013 அன்று மரியாவுக்கு அளித்த செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே,
செபியுங்கள் செபியுங்கள் செபியுங்கள்....
சூரியனின் வரவிற்காக காத்திருந்து மலரும் பூக்களைப்போல உங்கள் இதயங்களும் திறக்கப்பட செபியுங்கள். என்னை உங்களிடம் அனுப்புவதன் மூலம் ஆண்டவர் ஒரு பெரிய இரக்கத்தின் காலத்தினை உங்களுக்கு தருகின்றார். ஆனால் நிங்களோ, எனது இருதயத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். தனித்தும் குடும்பமாகவும் செபிக்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். வேதாகமம் எப்போழுதும் உங்களை ஊக்கிவிற்கும் வழிகாட்டியாக இருக்கட்டும். தாய்க்குரிய பாசத்துடன் உங்களை நான் ஆசீர்வதிக்கின்றேன். எனது அழைத்தலுக்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.




அன்னை மரியாள் 02.04.2013 அன்று மரியானவுக்கு அளித்த செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே,
என் மகனுடன் நீங்கள் ஒன்றிணைந்து இருக்க உங்களை அழைக்கின்றேன். செபிப்பதாலும் திருப்பலிகளில் தொடர்ந்து பங்கெடுப்பதாலும் என் மகனுடன் இணைந்து இருங்கள். திருப்பலியில் எனது மகன் தன்னை சிறப்பாக உங்களுடன் இணைக்கின்றார். எப்போதும் உங்களுடைய திட்டத்தை அல்ல ஆண்டவருடைய திட்டத்தினையே நிறைவேற்ற முயலுங்கள். ஏனெனில் நீங்கள் இப்போது இருப்பதும் ஆண்டவராலேயே. ஆண்டவர் இன்றி நீங்கள் ஒன்று இல்லாதவர்களாவீர்கள். ஆண்டவராகிய கடவுளை மகிமைப்படுத்துமாறு தாய்க்குரிய அன்புடன் உங்களை அழைக்கின்றேன். அப்பொழுது நீங்களும் அவரால் மகிமைப்படுத்தப்படுவீர்கள். அன்பையும் மனிதத்துவத்தையும் எல்லா மனிதர்களுக்கும் காட்டுங்கள், எனெனில் அதனால் தான் என் மகன் உங்களுக்கு கடவுளிடம் வருவதற்கான வழியினைத் துறந்தார். இன்னும் தந்தை இறைவனின் அன்பினை அறிந்து அவரை இன்னும் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு, அதற்கான வழியினை தொடர்ந்து காண்பியுங்கள். உங்களுடைய வாழ்வின் மூலம் மற்றவர்களுக்கு உண்மை அன்பினை எடுத்துக்காட்டுங்கள். ஒரு நாள் தந்தை இறைவனுக்கு முன்பாக நீங்கள் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை மறவாதிருங்கள். என் மகன் தெரிந்து கொண்ட மேய்ப்பர்களுக்காக மன்றாடுங்கள். என் மகன் அவர்களை உங்களுக்கு தமது அன்பளிப்பாக தந்திருக்கின்றார். என்வே அவர்களுக்காக எப்போதும் செபியுங்கள். நன்றி




அன்னை மரியாள் 25.03.2013 அன்று மரியாவுக்கு அளித்த செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே,
இரக்கத்தின் காலமாகிய இந்நாட்களில், என் மகனின் சிலுவைப்பாடுகளையும் அவரது துன்பகரமான பாடுகளையும் தியானிக்க உங்களை அழைக்கின்றேன். உங்கள் வாழ்க்கையில் வரும் பாடுகளை மகிழ்வோடு சுமப்பதன் மூலம், என் மகனின் பாடுகளுடன் நிலைத்திருங்கள். ஏனெனில் அவர் தம்மையே முழுமையாக கொடுத்து உங்களை அன்பு செய்கின்றார். உங்கள் மனங்களில் அன்பும் மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் வரை செபியுங்கள்.
எனது அழைத்தலுக்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.




2013.03.18 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

மியெர்ஜானா சொல்டோக்கு பங்குனி 18, 2013ல் வருடாந்தக் காட்சி கிடைத்தது மியெர்ஜானா டிறாகிசெவிச்-சொல்டோ 24 ஆனி 1981 தொடக்கம் 25 மார்கழி 1982வரை நாளாந்தம் மரியன்னையின் காட்சிகளைப் பெற்றார். அந்த வேளையிலான இறுதித் தரிசிப்பின்போது அவரது 10வது இரகசியத்தில் நம்பிக்கை வைத்ததால், வருடம் ஒருமுறை, அதாவது பங்குனி 18ல் காட்சியளிப்பார் என மரியன்னையால் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வு கடந்த வருடங்கள் போன்று இவ்வருடமும் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செபமாலை செபிக்கக் குழுமியிருந்தனர். அன்னையின் தரிசிப்பு 13:52க்கு ஆரம்பித்து 13:58வரை இடம்பெற்றது.

"அன்பான பிள்ளைகளே! முழு நம்பிக்கையுடனும் மகிழ்வுடனும் இறைவனின் பெயரைப் புகழவும், எந்நாளும் இதயத்திலிருந்து அவரது பேரன்புக்காக நன்றி கூறவும் நான் உங்களை அழைக்கிறேன். எனது மகன் சிலுவையில் காட்டிய தனது அன்பிற்காக, நீங்கள் அனைத்தையும் மன்னித்துக் கொள்ளுங்கள். எனது மகன் உங்கள் இதயத்தைத் திறக்க மாட்டார் எனும் பயமோ வெட்கமோ கொள்ளத் தேவையில்லை. இதற்கு மாறாக, எனது பிள்ளைகளே, வானகத் தந்தையிடம் நீங்கள் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள், எனது மகன் உங்களை அன்பு செய்வது போன்று நீங்களும் அவரை அன்பு செய்யுங்கள். நீங்கள் உங்களை அன்பு செய்தால், ஏனைய மனிதர்களையும் அன்பு செய்வீர்கள், நீங்கள் அவர்களில் எனது மகனைக் காண்பதுடன் அவரது பேரன்பைக் கண்டுகொள்வீர்கள். இறை நம்பிக்கையில் வாழுங்கள்! எனது மகன் என்னூடாக நீங்கள் ஆற்றவேண்டிய பல செயற்பாடுகளைத் தயார்படுத்துவதுடன் அவற்றை ஆசீர்வதிக்க விரும்புகிறார். அவருக்கு நன்றி கூறுங்கள். விசேடமாக உங்களுக்காக தொடர்பாளர்களாக வானகத் தந்தையின் மன்னிப்பைப் பெற்றுத் தரும் மேய்ப்பர்களுக்கு நன்றி கூறுங்கள். எனது பிள்ளைகளே. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்."




2013-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, தாய்க்குரிய அன்புடன் உங்கள் இதயத்தை கடினப்படுத்தாதிருக்க வேண்டுகின்றேன். பரலோக தந்தை உங்கள் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பினால், உங்களை கண்டித்து உணர்த்தும் வார்த்தைகளை மறந்து விடாதீர்கள். நீங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அன்பு செய்கிறீர்களா? பரலோக தந்தை அளவு கடந்த அன்பினால் தம் ஒரே மகனை சிலுவையில் மரணிக்க அனுப்பினார் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இல்லாவிடில் இப்போதாவது ஏற்று கொள்ளுங்கள்.

என் பிள்ளைகளே, என் மகனின் அளவு கடந்த அன்பினை மறந்து விடாதீர்கள். உபவாசம் செய்து செபித்து அமைதியுடன் கூடிய நம்பிக்கையினை நாடுங்கள். சிலுவையினால் எனது மகன் உங்களை சூழ்ந்துள்ள இருளினை அகற்றியுள்ளார். தம்மில் புதிய வாழ்விற்கான வழியினை காண்பிப்பார். என் மகனில் நீங்கள் வாழும் போது, பாவத்தில் வாழும் மனிதர்களுக்கு நீங்கள் ஓளியாக மாறுவீர்கள். தாயாக நான் உங்களை அன்பு செய்வது போல நீங்களும் என்னை அன்பு செய்யுங்கள், என் மகன் தெரிந்தெடுத்த மேய்ப்பர்களுக்காக செபியிங்கள். நன்றி




2013-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை செபிக்க அழைக்கிறேன். பாவம் உங்களை பிரபஞ்சக் குழியில் தள்ள இழுக்கின்றது, ஆனால் நான் உங்களை பரிசுத்தமான இறை அனுபவத்தில் வாழ வழிகாட்டுகிறேன், இருந்தும் நீங்கள் நன்மை மற்றும் தீமையை நோக்கி போராட உங்கள் சக்தியை செலவிடுகின்றீர்கள். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபியுங்கள், உங்களுக்கு செபங்கள் மகிழ்வைத் தரும்வரை செபியுங்கள். அத்துடன் உங்கள் வாழ்வு இறைவனுக்கு இலகுவில் உகந்ததாக இருக்கும்வரை செபியுங்கள். நீங்கள் என் அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!




2013-02-02அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, அன்பு என்னை உங்களிடம் கொண்டு வருகின்றது. என் மகன் காட்டிய அதே அன்பு, அவர் சிலுவையிலே உங்களுக்காக காட்டிய அன்பு, எல்லோரையும் மன்னிக்கும் அன்பு. நீங்கள் மற்றவர்களை அன்பு செய்கிறீர்களா? எனது தாய் உள்ளம் உண்மை அன்பினை உங்களிடம் தேடுகின்றது. நீங்கள் இறைவன் மீதான அன்பினால், உங்களுடைய வாழ்வின் திட்டங்களை , இறைவனின் திட்டங்களாக கையளிக்கும் நிலையில் இல்லை. உங்களிடம் உண்மை அன்பு இல்லாத காரணத்தால், மற்றவர்களை இறைவனிடம் கொண்டு வர இயலாதவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் இருதயத்தை என் பக்கம் திருப்புங்கள் நான் உங்களை வழி நடத்துவேன். என் மகனைப்போல மற்றவர்களை மன்னிக்க கற்றுத்தருவேன். நான் உங்களை உண்மை ஒளியில் வாசம் செய்யும் பரலோக தந்தையை நோக்கி வழினடத்துவேன். உபவசித்து செபிப்பதால் நீங்கள் மேய்ப்பர்களை உண்மை அன்பினை நோக்கி வழிநடத்துபவர்களாக மாறுவீர்கள். நன்றி




2013-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை செபிக்குமாறு அழைக்கின்றேன். உங்கள் செபம், நீங்கள் உங்கள் வாழ்வை சாட்சியப்படுத்தும்வரை உயிர்த்துடிப்பான கற்கள் போன்று உறுதியானதாக இருக்கட்டும். உங்கள் விசுவாசத்தின் அழகுக்கு சாட்சியமாகுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் எனது மகனிடம் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் பரிந்துபேசுவேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக நன்றி கூறுகிறேன்!




2013-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! மிகவும் அன்புடனும் பொறுமையுடனும் உங்கள் இதயத்தை எனது இதயமாக மாற்ற நான் முயற்சிக்கின்றேன். என் உதாரணத்தின் மூலம் நான் உங்களுக்கு திடம், புத்தி மற்றும் அன்பைக் கற்பிக்க முயற்சிக்கின்றேன். ஏனென்றால் எனக்கு நீங்கள் தேவை. நீங்கள் இல்லாது என்னால் இருக்க முடியாது எனது பிள்ளைகளே. இறைவனின் சித்தத்திற்கமையவே உங்களைத் தேர்வுசெய்தேன். அவரது சக்தியால் நான் உங்களை திடப்படுத்துகின்றேன். ஆகவே எனது பிள்ளைகளே, உங்கள் இதயத்தைத் திறக்கப் பயப்பட வேண்டாம். நான் உங்களை எனது மகனிடம் வழங்குவேன், அவர் உங்களுக்கு இறைஅமைதியைப் பரிசளிப்பார். நீங்கள் அவருக்காக எதிர்கொள்ளும் துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்ள, இறைவனின் அன்பு உங்கள் வாழ்வில் சாட்சியமாகட்டும். எனது மகன் உங்களுக்கு அதற்கான துணிவை வழங்குவார். மன்னிப்பு, நோன்பு மற்றும் செபிப்பதன் ஊடாக நான் உங்களை வழிநடத்துவேன். எனது அன்பு அளவிட முடியாதது. நீங்கள் பயப்பட வேண்டாம். எனது பிள்ளைகளே, ஆயர்களுக்காக செபியுங்கள். தீர்ப்புப் பெறுவதற்கு முன்பாக உங்கள் உதடுகளை மூடிக்கொள்வதுடன், மறக்காதீர்கள், எனது மகனே உங்களைத் தெரிவுசெய்தார், அவருக்கு மட்டுமே தீர்ப்பளிக்க உரிமையுண்டு. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்




2012-12-25 அன்றுபாலகன் இயேசுவும் அன்னைமரியாளும் வழங்கிய செய்தி

இறைவனின் அன்னை, பாலகன் இயேசுவைக் கரங்களில் தாங்கியவாறு வருகை தந்தபோது எவ்விதமான செய்தியையும் வழங்கவில்லை. மாறாக பாலகன் இயேசு பேசுவதற்கு ஆரம்பித்ததுடன்: „நானே உங்களது சமாதானம்> எனது கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்!“ என அவர் கூறினார். இறை அன்னையும் பாலகன் இயேசுவும் ஒன்றுசேர்ந்து சிலுவை அடையாளத்தின் மூலம் எம்மை ஆசீர்வதித்தனர்.




2012-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில் நான் உங்கள் அனைவரையும் செபங்களைப் புதுப்பிக்க அழைக்கிறேன். புனிதமான ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவதன் மூலம் உங்கள் இதயத்தைத் திறப்பதுடன் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் நீங்கள் பாவக் குழியில் விழுவதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வேன், ஆனால் நீங்கள் தூய இறைவனின் வழியில் மனம்மாற வேண்டும், இதனாலேயே உங்கள் இதயம் இறைவனின் அன்பில் சங்கமிக்கும். அவருக்கு காலத்தைக் கொடுங்கள் அவர் தன்னை உங்களுக்கு வழங்குவார், இதன்மூலம் இறைவனின் சித்தத்தின்படி அவரது அன்பையும் வாழ்வில் மகிழ்வையும் கண்டுகொள்வீர்கள். எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!




2012-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை எனது விடயத்திற்காக செபிக்க அழைக்கின்றேன். சாத்தான் புத்திசாலித்தனமாக பலரது இதயத்தை பாவத்திற்கும் அழிவிற்கும் இழுத்துக் கொள்வதால் மீண்டும் மீண்டும் தவமிருந்து செபித்துக் கொள்ளுங்கள். எனது பிள்ளைகளே, நான் உங்களை பரிசுத்தரிடம் அழைப்பதுடன் இரக்கத்தில் வாழ அழைக்கிறேன். எனது மகனிடம் மன்றாடுங்கள், இதனால் அவர் நீங்கள் விரும்பும் தனது சமாதானத்தாலும் தனது அன்பாலும் நிரப்புவார். எனது அழைப்பை நீங்கள் பின்பற்றுவதற்காக நன்றி




2012-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களை அழைப்பதுடன் உங்களிடையே வருகின்றேன், ஏனென்றால் நீங்கள் எனக்குத் தேவைப்படுகின்றீர்கள். எனக்கு தூய இதயம் தேவைப்படுகின்றது. தூயஆவியானவர் உங்களை வழிநடத்திட நான் செபிப்பதுடன், நீங்களும் செபித்துக் கொள்ளுங்கள், அவர் உங்களை அன்பால் வழிகாட்டித் திடப்படுத்துவதுடன், இரக்கத்தாலும் தூய இதயத்தாலும் நிரப்புவார். அதன்பின்பே என்னை விளங்கிக் கொள்வீர்கள், எனது பிள்ளைகளே. அதன்பின்பே இறைவனின் அன்பை விளங்கிக் கொள்ளாதவர்கள் குறித்து நான் படும் வேதனைகளை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதனால் எனக்கு நீங்கள் உதவ முடியும். நீங்கள் அன்பான இறைவனின் விளக்கை ஏந்துபவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பார்வையிருந்தும் பார்க்காமல் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும் விளக்குகளாக இருக்க வேண்டும். எனது பிள்ளைகள் அனைவரும் எனது மகனைப் பார்க்க வேண்டுமென விரும்புகிறேன். எனது பிள்ளைகள் அனைவரும் அவரது இறையாட்சியை அனுபவிக்க வேண்டுமென விரும்புகின்றேன். மீண்டும் நான் உங்களை அழைத்து, எனது மகனை நோக்கிக் கூவியழைப்பவர்களுக்காக செபிக்கும்படி வேண்டுகிறேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.




2012-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நீங்கள் உன்னத இறைவன் தந்துள்ள இயற்கையின் வர்ண ஜாலங்களைக் காணும்போது, உங்கள் இதயத்தைத் திறந்து நன்றியுணர்வுடன் அவர் தந்த அனைத்து நன்மைகளுக்காகச் செபிப்பதுடன்: இங்கு நான் நிரந்தரமாக எதிர்பார்த்திருக்கும் வானக வாழ்விற்காகப் படைக்கப்பட்டுள்ளதுடன், இறைவன் அளவிட முடியாத விதத்தில் எம்மை அன்பு செய்கின்றார் என்று கூறுங்கள். இதனால்தான் அவர் உங்களுக்கு என்னைத் தந்துள்ளதுடன், உங்களுக்குக் கூறச் சொல்கின்றார்: கடவுளில் மட்டுமே உங்கள் சமாதானமும் நம்பி;க்கையும் இருக்கட்டும், அன்பான பிள்ளைகளே. எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்




2012-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! எனது கண்கள் உங்களைப் பார்க்கும்போது, எனது உள்ளம் என்னுடன் ஒன்றித்துள்ள ஆன்மாக்களைத் தேடுவதுடன், விண்ணகத்திலிக்கும் தந்தையை இதுவரை அறிந்திருக்காதவர்களுக்காகச் செபிப்பதன் முக்கியத்தை உணர்ந்துகொள்கின்றது. நான் உங்களை அழைக்கின்றேன் ஏனென்றால் நீங்கள் எனக்குத் தேவைப்படுகின்றீர்கள். பணிகளை ஏற்றுக்கொள்வதுடன் எதற்கும் அஞ்சாதீர்கள், நான் உங்களைத் திடப்படுத்துவேன். நான் உங்களை எனது இரக்கத்தால் நிரப்புவேன். எனது அன்பால் நான் உங்களை தீய ஆவிகளிடமிருந்து பாதுகாப்பேன். நான் உங்களோடு இருப்பேன். எனது பிரசன்னத்தால் உங்களது பிரச்சினையான வேளைகளில் தேற்றுதல் செய்வேன். உங்கள் திறந்த இதயத்திற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். அருட்பணியாளர்களுக்காக மன்றாடுங்கள். நீங்கள் எனது மகனுடன் ஒன்றித்திருப்பதற்காக செபிப்பதுடன், உங்களுக்கிடையே எவ்வளவு உறுதியான ஒன்றிப்பு ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு உறுதியாக இருந்து கொள்ளுங்கள். இதன்மூலம் நீங்கள் ஒன்றித்திருப்பீர்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்




2012-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் இதயத்தில் நம்பிக்கையுடன் உங்களுக்காக மன்றாடுவதுடன் நீங்கள் ஒவ்வொருவரும் எனது வேண்டுகோள்களை இதயத்தில் ஏற்று வாழ்வதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். நான் உங்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்ய முடிந்தமைக்காகவும் எனது மாசற்ற இதயத்தின் ஊடாக உங்களை மனம் திரும்பச் செய்தமைக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இதயத்தைத் திறந்து நீங்கள் பரிசுத்தருக்காகத் தீர்மானம் செய்வதுடன் அந்த நம்பிக்கை உங்கள் இதயத்தில் மகிழ்வை வழங்கட்டும். நீங்கள் எனது வேண்டுகோளைப் பின்பற்றுவதற்காக நன்றி!




2012-08-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களோடு இருப்பதுடன் உங்களைக் கைவிடவில்லை. நான் உங்களை எனது மகனுக்கு அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். எனது பிள்ளைகளே நீங்கள் என்னுடன் நித்திய வாழ்வை அனுபவிக்கவும், அமைதியின் மகிழ்வை உணர்ந்துகொள்ளவும், எப்பொழுதும் நலமுடன் இருந்துகொள்ளவும் விரும்புகின்றேன். நீங்கள் மனித பலவீனத்தை வெற்றிகொள்ளவும், எனது மகன் உங்களுக்கு அவரது தூய இதயத்தை தருமாறும் நான் மன்றாடுகிறேன். எனது அன்பான பிள்ளைகளே, ஒருவர் திருச்சிலுவையை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, எவ்வாறு தனது பாவங்களை அறிக்கையிடுவது, மற்றும் அதனால் விண்ணகத் தந்தையை அவமதித்தது, இன்றும் அவமதித்துக்கொண்டிருப்பது அத்துடன் அவரை அறிந்து கொள்ளாமல் இருப்பது குறித்து தூய இதயத்திற்குத் தெரிந்திருக்கும். நீங்கள் நம்பிக்கையின் ஒளியை அறிந்துகொள்ள தூய இதயத்துடன் நான் மன்றாடுகிறேன். இதன்மூலம் உங்கள் அருகில் இருப்பவர்களும் எனது மகனின் அன்பை உணர்ந்து கொள்வார்கள். எனது மகனை தேர்ந்து கொண்டவர்களுக்காக மன்றாடுங்கள் அத்துடன் அவர்கள் நலமடைய மன்றாடிக் கொள்ளுங்கள். எந்தத் தீர்ப்பின்போதும் உங்கள் வாய் மூடி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.




2012-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை நல்லவற்றிற்காக அழைக்கிறேன். நீங்கள் சமாதானத்தை எடுத்துச் செல்பவர்களாகவும், இந்த உலகின் நற்கனிகளாகவும் இருந்து கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு சக்தியைத் தருவதற்கும், இதனால் உங்கள் இதயத்திலும் வாழ்விலும் நம்பிக்கையும் நிறைவும் எப்பொழுதும் இருப்பதற்குமாகச் செபித்துக் கொள்ளுங்கள், அது இல்லாவிடின் இதயத்தில் மகிழ்ச்சியும் எதிர்காலமும் அற்றுப் போய்விடும், இறைவனுக்காக உங்கள் இதயத்தை நீங்கள் திறந்து கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் இறைவனின் பிள்ளைகள் என்பதுடன் அவரது நம்பிக்கைகளையும் இவ்வுலகில் சுமந்து செல்கின்றீர்கள், நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக நன்றி கூறுகிறேன்!




2012-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இதயத்தில் பெரிதான நம்பிக்கையுடன் இன்றும் உங்களை செபிக்க அழைக்கின்றேன். நீங்கள் செபிக்கும்போது, என்னுடன் இருந்துகொண்டு, எனது மகனின் விருப்பைத் தேடுவதுடன் அவரில் வாழ்கின்றீர்கள். திறந்த மனதுடன் செபத்தில் வாழும்போது ஒவ்வொரு வேளையிலும் உங்கள் உள்ளம் பேருவைகையால் நிறைந்திருக்கும். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் அனைத்து வேண்டுதல்களையும் உங்கள் சார்பாக எனது மகன் இயேசுவிடம் சமர்ப்பிப்பேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக நன்றி!




2012-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை மனந்திரும்பவும் தூய்மையாக இருக்கவும் அழைக்கிறேன். இறைவன் உங்களிடமிருந்து செபத்தின் ஊடாக மகிழ்வையும் சமாதானத்தையும் தர விரும்புகிறார், ஆனால் நீங்கள், எனது அன்பான பிள்ளைகளே, இன்னும் தொலைவிலேயே உள்ளீர்கள், உலகுடன் மற்றும் ஏமாற்றுதலுடன் பின்னிப் பிணைந்துள்ளீர்கள். ஆகவே உங்களை நான் மீண்டும் அழைக்கிறேன், உங்கள் இதயத்தையும் பார்வையையும் கடவுள் மற்றும் கடவுளுக்குரியவைகளுக்காகத் திறவுங்கள், மகிழ்ச்சியும் சமாதானமும் உங்கள் இதயத்தை நிரப்பும். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக நன்றி!




2012-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை செபிக்க அழைக்கிறேன். எனது பிள்ளைகளே. சூரிய வெப்பத்தில் எவ்வாறு மலர்கள் விரிகின்றனவோ அதுபோல் நீங்களும் உங்கள் இதயத்தை இறைவனுக்காக விருப்புடன் திறவுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்வேன். எனது குரலை செவிமடுப்பதற்கு நன்றி கூறுகின்றேன்.




2012-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தாயன்புமிகு எனது ஆசீரை வழங்குவதோடு தொடர்ந்து செபிக்குமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். செபிப்பது உங்கள் கட்டாய கடமையாக இருந்துகொள்வதோடு, அதன்மூலம் நீங்கள் நாளாந்தம் பரிசுத்தத்தில் வளர்ந்து கொள்ளுங்கள். மனந்திரும்பலுக்காக மேலும் உழையுங்கள், ஏனெனில் நீங்கள் தொலைவில் உள்ளீர்கள் அன்பான பிள்ளைகளே. நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!




மிர்ஜானா சொல்டோக்கு 18 பங்குனி 2012ல் இடம்பெற்ற வருடாந்தக் காட்சி

மிர்ஜானா ட்றாகிசேவிச்-சொல்டோ எனும் காட்சி காணுபவர் 24 ஆனி 1981 தொடக்கம் 25 மார்கழி 1982 வரை நாளாந்தம் காட்சிகளைக் கண்ணுற்றார். இதன்போது இறுதியான அன்னையின் தரிசிப்பின்போது அன்னை கூறினார், நீ எனது 10 இரகசியங்களையும் நம்புவதாக இருந்தால், வருடத்தில் ஒருமுறை, அதாவது பங்குனி 18ல் காட்சி தருவதாகத் தெரிவித்தார். இதன்படியே பலவருடங்களாக நடந்துவருகின்றது. இந்த வருடமும் இதுபோன்றே இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான யாத்திகர்கள் ”நீல சிலுவை” இருக்கும் இடத்தில் ஒன்றுகூடி செபமாலை செபித்தனர். காட்சி 14.00 மணிக்குத் தொடங்கி 14.05 வரை இடம்பெற்றது.

”அன்பான பிள்ளைகளே! நான் உங்கள் அன்னையாகவும், உங்களுக்காகப் பரிந்து பேசுபவளாகவும் இருக்க விரும்புவதால் நான் உங்கள் மத்தியில் வருகின்றேன். நான் உங்களுக்கும் வானகத் தந்தைக்கும் இடையில் தொடர்பாளராக இருக்க விரும்புகிறேன். நான் உங்களை எனது கரங்களில் எடுப்பதுடன் தீய ஆவிகளுடனான மோதல்களின்போது உங்களுடன் இருந்து போராட விரும்புகின்றேன். எனது பிள்ளைகளே, எனது முழுமையான ஆசீரையும் பெற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் வாழ்வை எனது தாய்க்குரிய கரங்களில் எடுத்துக்கொள்வதுடன், உங்களுக்கு சமாதானத்தையும் அன்பையும் புகட்டி அதன்பின் உங்களை எனது மகனிடம் வழங்குவேன். நான் உங்களைக் கேட்டுக்கொள்வது, நீங்கள் செபிப்பதுடன் உபவாசம் இருங்கள், இதன்மூலம் மட்டுமே நீங்கள் அறிந்து கொண்டுள்ளபடி எனது தாய் இதயத்தினூடாக நீதியான வழியில் எனது மகனுக்கு பரிந்துரை வழங்க முடியும். எனது மகனுடன் ஒன்றிணைந்து கடவுளின் வார்த்தைகளை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.”




2012-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! அளவிடமுடியாத இறைவனின் அன்புக்கு ஊடாக நான் உங்களிடம் வருகைதந்து வாஞ்சையுடன் எனது மகனை கட்டித்தழுவிக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன். தாயின் இதயத்தோடு உங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்வதோடு, எனது பிள்ளைகளே, உங்களை நான் எச்சரிக்கிறேன், உங்களது எவ்விதமான கவலைகளையும், எனது மகனிடம் தெரியப்படுத்தாதிருந்தால் அவையே முதலிடம் பெறட்டும். உங்கள் வாழ்வை வளப்படுத்த அவரை அறிந்து கொள்ளாமலிருக்க இடம்கொடாதீர்கள். எனது மகன் உங்களில் நிறைந்திருக்க தூயஆவியை மன்றாடுங்கள். இருள்சூழ்ந்த மற்றும் நம்பிக்கையற்ற இக்காலகட்டத்தில் நீங்கள் இறைஒளியின் சீடர்களாயிருக்க வேண்டுமென மன்றாடிக் கொள்ளுங்கள். இதுவே உங்கள் சோதனைக் காலமாயுள்ளது. கையில் செபமாலையுடனும் இதயத்தில் அன்புடனும் என்னோடு வாருங்கள். நான் உங்களை எனது மகனின் உயிர்ப்புக்கு அழைத்துச் செல்வேன். எனது மகனை விட்டுப் பிரிந்து சென்றவர்களுக்காக செபியுங்கள், அவர்கள் எப்பொழுதும் அவரால் மற்றும் அவரில் வாழட்டும்-நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.




2012-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இந்த நேரத்தில் உங்களை நான் விசேடவிதமாக அழைக்கிறேன்: இதயத்தால் செபியுங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் அதிகம் பேசுகின்றீர்கள் ஆனால் குறைவாகச் செபிக்கின்றீர்கள். தூய விவிலியத்தை வாசியுங்கள், தியானியுங்கள் மற்றும் அதில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தட்டும். கடவுளில் உங்கள் வாழ்வின் அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள நான் உங்களுக்கு உற்சாகத்தையும் அன்பையும் வழங்குவேன். நீங்கள் என் அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!




2012-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை மகிழ்ச்சியுடன் அழைத்துக் கொள்கின்றேன்: உங்கள் இதயத்தைத் திறவுங்கள் அத்துடன் எனது அழைப்பைக் கேளுங்கள். நான் முதலில் நீங்கள் அடைக்கலமும் அமைதியும் பெறுவதற்காக உங்களை எனது மாசற்ற இருதயத்திற்கு அண்மையாக கொண்டுவர விரும்புகின்றேன். உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் வரை நீங்கள் செபித்துக்கொள்ளுங்கள். இந்த செபத்தின் மூலமாக எல்லாம் வல்ல இறைவனின் கருணை எனது விரிக்கப்பட்ட கரங்கள் ஊடாக இந்த அமைதியற்ற உலகிற்கு அமைதியைக் கொடுப்பதாக. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் வாழ்வு, விசுவாசம் மற்றும் செபம் உங்கள் நம்பிக்கையை நாளுக்கு நாள் உங்கள் இதயத்தில் வளரச்செய்யுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி கூறுகின்றேன்!




2012-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிளளைகளே, ஒரு தாய்க்குரிய அன்புடன் உங்கள் உள்ளத்தினை பார்க்கும் போது, அதில் ஆழ்ந்த துன்பத்தையும் நீடிய கவலைகளையும் காண்கின்றேன். கடந்த கால வாழ்வில் நீடிய அமைதியினைக் காணவில்லை. நீங்கள் அமைதியைத் தேடி இதுவரை நீங்கள் காணவில்லை எனில், உங்கள் இதயத்தினை இறை தந்தைக்கு திறவுங்கள். அது ஒன்றே அமைதிக்கான வழி. இறை தந்தை தனது பிளளைகளை தனிமையிலும் துன்பத்திலும் விடுவதில்லை. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் போது நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள். உங்கள் வாழ்வில் வழியும் உண்மையுமான எனது மகனை பின்பெற்றுவீர்கள். எனது மகன் தனது பணிக்காக தெரிந்து கொண்டவர்களுக்காக செபியுங்கள். நன்றி




2011-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, இன்று எனது கரங்களில் எனது மகன் இயேசுவினை ஏந்தி, அவர் உங்களுக்கு தரும் சமாதனத்தை கொண்டு வருகின்றேன். சிறு பிள்ளைகளே, செபிப்பதில் நிலைத்திருங்கள். அதன் மூலம் மனிதன் தரும் சமாதானம் அல்ல இறைவன் தரும் சமாதானம், எல்லா இதயங்களிலும் குடிகொள்வதாக. இறைவன் தான் அன்பு கொள்ளும் அனைவருக்கும் கொடுக்கும் சமாதானம் நிலையானது, அதனை யாராலும் அழிக்க முடியாது. திருமுழுக்கின் வழியாக நீங்கள், விசேட விதமாக அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். எனவே, சாட்சியவாழ்வு வாழ்ந்து, இடைவிடாது இறைவேண்டல் செய்வதன் மூலம், எனது கருவிகளாகி முழு உலகினையும் இறைவனின் சமாதனத்தினை பெற்றுக்கொள்ள செய்யுங்கள். எனது அழைத்தலுக்கு செவிசாய்த்தமைகு நன்றி.




2011-12-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, ஒரு தாய்க்குரிய அன்புடனும், இறைவேண்டுதலுடனும் நான் உங்களுடன் இருக்கின்றேன். இதனால் நீங்கள் எதிர்காலத்திற்கான நல்ல விதையாக இருப்பீர்கள். ஒரு விதையானது முளைத்து வளர்ந்து அதனுடைய கிளைகளை எல்லா இடமும் பரப்புகின்றது. நீங்கள் எதிர்காலத்திற்கான நல்ல விதையாக மாற, இறைதந்தையிடம் இரந்து மன்றாடுங்கள், உங்களுடைய பாவங்களினுடைய மன்னிப்பிற்காக அவரை வேண்டுங்கள். பாவம் இல்லாத, தூய இருதயமுடையவர்களுடைய நேர்மையான கண்களே; நான் உங்களை அழைத்துச்செல்ல விரும்பும் பாதையினை கண்டுணர முடியும். நீங்கள் அதை அறிந்து கொள்ளும் போது இறைவனுடைய அன்பினை அறிந்து கொள்வீர்கள். இவ் அன்பு உங்களுக்கு இலவசமாகவே தரப்பட்டுள்ளது. அப்போது நீங்கள் மற்றவர்களுக்கு அன்பினை கொடுக்கும் விதைகளாக மாறுவீர்கள். நன்றி




2011-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, இன்று நான் நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் கொடுக்க விரும்புகிறேன். உங்களைச் சுற்றியுள்ளவை எல்லாம் நிலையற்ற இவ்வுலக வாழ்வினை நோக்கியே உங்களை இட்டு செல்லும். நானோ உங்களை இரக்கத்தின் காலத்தினுடாக இட்டுச்செல்ல விழைகின்றேன். இதனால் நீங்கள் எனது மகனை ஆழமாக அறிந்து, முடிவில்லா வாழ்வினைப் பெற்றுக் கொள்வீர்கள். என் அன்பார்ந்த சிறு பிள்ளைகளே, செபியுங்கள் அதன் மூலம் இரக்கத்தின் மகிமையினப் பெற்றுக் கொள்வீர்கள். என்னுடைய அழைத்தலுக்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.




2011-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, பரம தந்தை உங்களை உங்களுடைய விருப்பப்படி வாழ அனுமதிக்கவில்லை. பதிலாக தன்னுடைய அளவு கடந்த அன்பினால் உங்களை அணைத்து, உங்களை வழிநடத்தி தன்னை அறிந்து வாழ வழிநடத்துகின்றார். எனது மகனின் மூலம் நீங்கள் அவரை அப்பா தந்தை என்று அழைக்கும் பேறினை பெற்றிருக்கின்றீர்கள். இறை குடும்பத்திலே நீங்கள் ஒன்றாயிருக்கிறீர்கள். எனினும் என் அன்பார்ந்த பிள்ளைகளே நீங்கள் உங்களுக்காக மட்டும் வாழாதிருங்கள். அதனால் உங்களை உலகின் ஒளியாயிருக்க அழைக்கின்றேன். என் மகனின் ஒளியாயிருங்கள், பரம தந்தையினை அறிந்திராது பாவத்திலும் இருளிலும் துன்பத்திலும் தனிமையிலும் வாழும் மக்களுக்கு ஒளிவிளக்காக இருங்கள். உங்களுடைய வாழ்வின் மூலம் இறை அன்பினை மற்றவர்களுக்கு எடுத்து காட்டுங்கள். நீங்கள் உங்கள் இருதயத்தினை எனக்கு திறப்பீர்களாயின், நான் உங்களை வழிநடத்துவேன். மீளவும் உங்களை குருக்களுக்காக மன்றாட அழைக்கின்றேன். நன்றி




2011-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களுடைய இருதயத்தினை பார்க்கும் போது, உங்களிடம் எந்த மகிழ்ச்சியையும் காணவில்லை. அதனால் இன்று உங்களுக்கு உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியினை தரவிரும்புகின்றேன். அவர் உங்களை அரவணைத்து அன்பு செய்து உங்களை பாதுகாப்பார். நான் உங்களை அன்பு செய்து உங்களுக்காக பிரார்த்தனை செய்கின்றேன். இதனால் மனமாற்றம் அடைந்து இயேசுவின் அரவணைப்புக்குள் வந்து சேருங்கள். என்னுடைய அழைத்தலுக்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.




2011-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, இன்றும் கூட தாய்க்குரிய அன்புடன் செபிக்க அழைக்கிறேன். பரம பிதாவுடனான தனிப்பட்ட உங்கள் உறவுக்கு செபித்தல் அவசியமானது. பரம பிதா உங்களைவிட்டு காணமுடியாத தொலைவிலோ உங்களைத் தெரியாதவராகவோ இல்லை. அவர் தம்மை எனது மகனின் மூலமாக வெளிப்படுத்தி, உங்களுக்கு புது வாழ்வைத்தந்துள்ளார். எனவே உங்களை பரம தந்தையிடமிருந்து பிரிக்கும் எந்த சோதனைக்கும் இடம் கொடாதிருங்கள். உங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் இறைபிரசன்னம் நிறைந்திருக்கட்டும். செபியுங்கள், எனது மகனுடன் உங்கள் மனமும் ஒரு மனப்பட செபியுங்கள். ஒரு மனப்பட்ட நல்மனதுடன் இருப்பவர்களே பரம பிதாவினை ஏற்று கொள்ள முடியும். நான் உங்களை விசேட விதமாக வழிநடத்துவேன், உங்கள் மேய்ப்பர்களை (குருக்களை( தீர்ப்பிடாது இருங்கள், ஏனெனில் அவர்கள் பரம பிதாவினால் அழைக்கப்பட்டவர்கள். செபியுங்கள் நன்றி.




2011-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, இன்று நான் உங்களை எனது மகனாகிய இயேசுவில் ஒன்றுபடுமாறு அழைக்கின்றேன். நீங்கள் கடவுளின் குடும்பமாக இருக்கின்றீர்கள் என்பதை உணர்ந்து வாழ; தாய்க்குரிய அன்புடன் உங்களுக்காக மன்றாடுகின்றேன். பரலோக தந்தை உங்களுக்கு தந்த ஆன்மீக சுகந்திரத்தின் மூலம் உண்மையினை அறிந்து கொள்ள அழைக்கப்பட்டு இருக்கின்றீர்கள். உபவாசித்து செபிப்பதனால் எனது மகனின் முலமாக பரலோக தந்தையினை கண்டடைவீர்கள். பரலோக தந்தையை ஏக்கத்துடன் நீங்கள் தேடுகையில்; உங்கள் வாழ்ககை கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அமையும். உங்களுடைய வாழ்க்கைப் பாதையில்; உங்களை விட்டு ஒரு போதும் பிரிய மாட்டேன்.




2011-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, என் முழு ஆன்மாவோடும் முழு இருதயத்தோடும் பரலோக தந்தையின் மீது வைத்த அளவு கடந்த விசுவாசத்தினாலும் அன்பினாலும், எனது மகனை உங்களுக்கு கொடுத்தேன். எனது மகன் ஒரே உண்மை கடவுளையும் அவரது அளவு கடந்த அன்பினையும் அறியும்படி முழு உலக மக்களையும் கூட்டிச்சேர்த்தார். அவர் உங்களை உண்மையின் பாதையில் நடக்கச்செய்து உங்கள் அனைவரையும் சகோதர சகோதரிகளாக்கினார். அதனால் என் பிள்ளைகளே நீங்கள் உங்கள் பாதையில் இருந்து விலகாமல் அன்பிலும் உண்மையிலும் விசுவாசத்திலும் நிலைத்திருங்கள். உங்களை சுற்றி உள்ள எல்லாம் நிலையற்றவை; கடவுளின் மாட்சி மட்டுமே நிலையானது. எனவே, கடவுளிடமிருந்து உங்களை பிரிக்கும் எல்லாவற்றிடமிருந்தும் விலகி இருங்கள். அவரை முழுவதுமாய் பற்றியிருங்கள். ஏனெனில் அவரே உண்மைக் கடவுள். நான் உங்களோடு எந்நாளும் நிலைத்திருப்பேன். நான் மேய்ப்பர்களுக்காக விசேசமாக செபிக்கிறேன். ஏனெனில் அவர்கள் எனது மகனின் உண்மையான பிரதிநிதிகளாக இருந்து அன்பின் பாதையில் உங்களை வழிநடத்த வேண்டும். நன்றி.




2011-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, இன்று நான் உங்களை என்னுடைய நோக்கங்கள் நிறைவேறுவதற்காக உபவாசமிருந்து செபிக்க அழைக்கிறேன். ஏனெனில் சாத்தான் என்னுடைய திட்டங்களை அழிக்க விழைகின்றான். நான் இந்த பங்கில் ஆரம்பித்து முழு உலகத்தினையும் அழைத்தேன். பலர் என்னுடைய அழைத்தலை ஏற்றுக்கொண்டனர், ஆயினும் மிகப் பெரிய அளவினர் என்னுடைய அழைப்பினை ஏற்றுக்கொள்ளவோ செவிசாய்க்கவோ இல்லை. என்னுடைய அழைத்தலை ஏற்றுக்கொண்ட நீங்கள் விசுவாசத்தில் வலிமையாக தரித்து இருங்கள். என்னுடைய அழைத்தலுக்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.




02-08-2011 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, இன்று நான் உங்களை பரிசுத்த ஆவியில் நிறைந்து செபித்து என் மகனில் புதிய மக்களாக உங்களை மாற்ற அழைக்கிறேன். கடவுளை விட்டு சென்ற மக்கள் தங்களையே இழந்து விடுகின்றனர். துன்பங்களிலும் துயரங்களிலும் இறைவனையே நம்பி இருக்கும் மக்கள் இரட்சிக்கப்பட்ட மக்களாய் இருக்கிறார்கள். உங்களை ஒரே குடும்பமாக இறைவனில் நிலைத்திருக்க அழைக்கிறேன். உங்களால் தனித்து உங்களை எதிர்த்து நிற்கும் சாத்தனை மேற்கொள்ள இயலாது. ஆனால் இறை திட்டத்தின் படி என்னுடைய மகனுடன் இணைந்து நிங்கள் உலகத்தினை வெற்றி கொள்வதோடு, உலகினை நல்வழிப்படுத்துவீர்கள். உங்களுடைய மேய்ப்பர்களுக்காக செபிக்குமாறு உங்களை அழைக்கிறேன், ஏனெனில் அவர்கள் என் மகனினால் தேர்ந்து கொள்ளாப்பட்டவர்கள். நன்றி